ஞாயிறு, மே 26, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 112

14. ஸர்வக: ஸர்வவித்பானுர்விஶ்வக்ஸேனோ ஜனார்தன: |

வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி: ||

இந்த பதினான்காம் ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:
                   123. ஸர்வக:, 124. ஸர்வவித்பானு:, 125. விஶ்வஸேன:, 126. ஜனார்தன: |
                 127. வேத:, 128. வேதவித், 129. அவ்யங்க:, 130. வேதாங்க:, 131. வேதவித், 132. கவி: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

126. ஓம் ஜனார்தனாய நம:
ஜனான் துர்ஜனான் 'ஜன' என்றால் இங்கு துர்ஜனங்களைக் (தீயவர்களைக்) குறிக்கும்
அர்தயதி ஹினஸ்தி அவர்களை 'அர்தனம்' செய்கிறார், அதாவது தண்டனை அளிக்கிறார் 
நரகாதீன் கமயதீதி வா அவர்களை (அவர்களின் பாவங்களுக்கேற்ப வெவ்வேறு) நரகங்களில் தள்ளுகிறார் 
ஜனார்தன: எனவே, பகவான் 'ஜனார்தனர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், துர்ஜனங்களைக் (தீயவர்களைக்), அவர்களை (அவர்களின் பாவங்களுக்கேற்ப வெவ்வேறு) நரகங்களில் தள்ளி அவர்களுக்கு தண்டனை அளிக்கிறார். எனவே, பகவான் 'ஜனார்தனர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஜனை: மனிதர்கள் புருஶார்த்தம் (அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய) நான்கு அடையத்தகுந்த இலக்குகளை 
அப்யுதய (தமது கர்மங்களின்) பலனாக 
நி:ஶ்ரேயஸ லக்ஷணம் மிகச்சிறந்த 
யாச்யதே இதி (பகவானிடம்) வேண்டுவதால் 
ஜனார்தன: எனவே, பகவான் 'ஜனார்தனர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மனிதர்கள், தத்தம் கர்மங்களின் பலனாக, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய புருஶார்த்தங்களை பகவானிடமிருந்தே யாசித்துப் பெறுகின்றனர். எனவே, பகவான் 'ஜனார்தனர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

127. ஓம் வேதாய நம:
வேதரூபத்வாத் வேதமே வடிவாக இருப்பதால் 
வேத: பகவான் 'வேத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் வேதமே வடிவாக இருப்பதால் அவர் 'வேத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வேதயதீதி வா அனைவருக்கும் அறிவைத் (ஞானத்தை) வழங்குவதால் 
வேத: பகவான் 'வேத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவருக்கும் அறிவைத் (ஞானத்தை) வழங்குவதால் பகவான் 'வேத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தேஶாமேவானுகம்பார்த்தமஹமஞானஜம் தம: |
நாஶயாம்யாத்மபாவஸ்தோ ஞானதீபேன பாஸ்வதா’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 10.11)
ஸ்ரீ பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: அன்னவர்க்கிரங்கி யான் அன்னவர் ஆத்ம இயல்புயானாகி ஒளியுடை ஞானவிளக்கால் அவரிடை அஞ்ஞானத்தால் தோன்றுமிருளைத் தொலைப்பேன்.
இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

128. ஓம் வேதவிதே நம:
யதாவத் உள்ளவாறு    
வேதம் வேதங்களையும் 
வேதார்த்தம் அந்த வேதங்களின் உட்பொருளையும் 
வேத்தீதி அறிவதால் 
வேதவித் பகவான் 'வேதவித்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மட்டுமே அனைத்து வேதங்களையும், அதன் உட்பொருளையும் உள்ளதை உள்ளவாறு அறிகிறார். எனவே, பகவான் 'வேதவித்' (வேதங்களை அறிபவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'வேதாந்தக்ருத் வேதவிதேவ சாஹம்' (ஸ்ரீமத் பகவத்கீதை 15.15)
ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேதமுணர்ந்தோன் யானே.
இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

ஸர்வே வேதா: ஸர்வேவேத்யா: ஸஶாஸ்த்ரா:
ஸர்வே யஞ்யா: ஸர்வ இஜ்யாஸ்ச க்ருஷ்ண: |
விது: க்ருஷ்ணம் ப்ராஹ்மணாஸ்தத்வதோ
யே தேஶாம் ஸர்வயஞ்யா: ஸமாப்தா: || (மஹாபாரதம்)
அனைத்து ஸாஸ்திரங்கள், வேதங்கள், அறியக்கூடிய (அறிய வேண்டிய) அனைத்தும், அனைத்து யாகங்களும், பூஜிக்கப்படும் அனைத்தும் பகவான் ஸ்ரீக்ருஷ்ணனே ஆவார். ஓ அரசனே!!! பகவான் ஸ்ரீக்ருஷ்ணரை உள்ளபடி உணர்ந்த அந்தணர்களில் சிறந்தவர்கள், அனைத்து யாகங்களையும் நிறைவேற்றியவர் ஆவர் (அனைத்து யாகங்களையும் நிறைவேற்றியதற்கு இணையான பலனை அவர்கள் அடைகின்றனர்).


இதி மஹாபாரதே – இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, மே 17, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 111

14. ஸர்வக: ஸர்வவித்பானுர்விஶ்வக்ஸேனோ ஜனார்தன: |

வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி: ||

இந்த பதினான்காம் ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:
                   123. ஸர்வக:, 124. ஸர்வவித்பானு:, 125. விஶ்வஸேன:, 126. ஜனார்தன: |
                 127. வேத:, 128. வேதவித், 129. அவ்யங்க:, 130. வேதாங்க:, 131. வேதவித், 132. கவி: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

123. ஓம் ஸர்வகாய நம:
ஸர்வத்ர எங்கும் 
கச்சதீதி செல்வதால் 
ஸர்வக: பகவான் 'ஸர்வக' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் காரணத்வேன மூலகாரணமாய் 
வ்யாப்தத்வாத் பரவி, நிறைந்திருக்கிறார் 
ஸர்வத்ர எங்கும், எதிலும்.

அனைத்திற்கும் காரணமான பகவான் எங்கும், எதிலும் வ்யாபித்துப் பரவி, நிறைந்திருப்பதன் மூலம் அவர் எங்கும் செல்கிறார். எனவே, அவர் 'ஸர்வக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

124. ஓம் ஸர்வவித்பானவே நம:
ஸர்வம் அனைத்தையும் 
வேத்தி அறிவதனாலும் 
விந்ததீதி வா அடைவதனாலும் 
ஸர்வவித் பகவான் 'ஸர்வவித்' என்று அழைக்கப்படுகிறார்
பாதீதி பானு: ஒளி வீசுவதால் 'பானு' என்று அழைக்கப்படுகிறார்.

'தமேவ பாந்தமனுபாதி ஸர்வம்' (கதோபநிஷத் 2.2.15)
கதோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது:
ஸ்வயமாக விளங்குகின்ற அதையே (அந்த பரப்ரஹ்மத்தை) சார்ந்து அனைத்தும் விளங்குகின்றன.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

யதாதித்யகதம் தேஜோ ஜகத் பாஸயதேகிலம்’ | (ஸ்ரீமத் பகவத்கீதை 15.12)
ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: சூரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும் (என்னுடையதே என்றுணர்).
இத்யாதிஸ்ம்ருதேஸ்ச இத்தகைய ஸ்ம்ருதி வாக்கியங்களாலும்,

ஸர்வவிச்சாஸௌ அனைத்தையும் அறிவதனாலும் 
பானுஸ்சேதி (இயற்கையாக) ஒளி வீசுவதாலும் 
ஸர்வவித்பானு: பகவான் 'ஸர்வவித்பானு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்தையும் அறிகிறார், நினைத்ததை அடைகிறார். மேலும், அவர் இயற்கையாக ஒளி வீசுகிறார் (சூரியன், அக்னி முதலானவை அவரது ஒளியைப் பெற்றே தாங்கள் ஒளி வீசுகின்றன). எனவே, பகவான் 'ஸர்வவித்பானு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

125. ஓம் விஶ்வக்ஸேனாய நம:
விஶ்வக் அவ்யயம் 'விஶ்வ' என்ற சொல்லிற்கு 
ஸர்வேத்யர்த்தே அனைத்தும், எங்கும் என்று பொருள்
விஶ்வ எங்கும் 
கச்சதி ஓட வைக்கிறார் பலாயதே தோற்று 
தைத்யஸேனா அஸுரப் படைகளை 
யஸ்ய எவர் 
ரணோத்யோகமாத்ரேணேதி போர்க்களத்தில் அவருடைய வீரத்தால் 
விஶ்வக்ஸேன: (எனவே) பகவான் 'விஶ்வக்ஸேனர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'விஶ்வ' என்றால் எங்கும், எல்லாவிடத்திலும் என்று பொருள். பகவான், போர்க்களத்தில் தன்னுடைய வீரத்தால் அஸுரப் படைகளை தோற்றடித்து எல்லாவிடத்திலும் ஓட வைக்கிறார். எனவே, பகவான் 'விஶ்வக்ஸேனர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.