14. ஸர்வக: ஸர்வவித்பானுர்விஶ்வக்ஸேனோ ஜனார்தன: |
வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி: ||
இந்த பதினான்காம் ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:
123. ஸர்வக:, 124. ஸர்வவித்பானு:,
125. விஶ்வஸேன:, 126. ஜனார்தன: |
127. வேத:, 128. வேதவித்,
129. அவ்யங்க:, 130. வேதாங்க:, 131. வேதவித், 132. கவி: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
123. ஓம் ஸர்வகாய நம:
ஸர்வத்ர எங்கும்
கச்சதீதி செல்வதால்
ஸர்வக:
பகவான் 'ஸர்வக' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் காரணத்வேன மூலகாரணமாய்
வ்யாப்தத்வாத் பரவி, நிறைந்திருக்கிறார்
ஸர்வத்ர எங்கும், எதிலும்.
அனைத்திற்கும்
காரணமான பகவான் எங்கும், எதிலும் வ்யாபித்துப் பரவி, நிறைந்திருப்பதன் மூலம்
அவர் எங்கும் செல்கிறார். எனவே, அவர் 'ஸர்வக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
124. ஓம் ஸர்வவித்பானவே நம:
ஸர்வம் அனைத்தையும்
வேத்தி அறிவதனாலும்
விந்ததீதி வா அடைவதனாலும்
ஸர்வவித் பகவான் 'ஸர்வவித்' என்று அழைக்கப்படுகிறார்.
பாதீதி பானு: ஒளி வீசுவதால் 'பானு' என்று அழைக்கப்படுகிறார்.
'தமேவ பாந்தமனுபாதி
ஸர்வம்' (கதோபநிஷத் 2.2.15)
கதோபநிஷத்தில்
கூறப்பட்டுள்ளது:
ஸ்வயமாக
விளங்குகின்ற அதையே (அந்த பரப்ரஹ்மத்தை) சார்ந்து அனைத்தும்
விளங்குகின்றன.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள்
கூறுகின்றன.
‘யதாதித்யகதம்
தேஜோ ஜகத் பாஸயதேகிலம்’ | (ஸ்ரீமத் பகவத்கீதை 15.12)
ஸ்ரீமத்
பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: சூரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர்
கொளுத்தும் ஒளியும் (என்னுடையதே என்றுணர்).
இத்யாதிஸ்ம்ருதேஸ்ச இத்தகைய ஸ்ம்ருதி வாக்கியங்களாலும்,
ஸர்வவிச்சாஸௌ
அனைத்தையும்
அறிவதனாலும்
பானுஸ்சேதி
(இயற்கையாக) ஒளி வீசுவதாலும்
ஸர்வவித்பானு:
பகவான் 'ஸர்வவித்பானு:' என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான்
அனைத்தையும் அறிகிறார், நினைத்ததை அடைகிறார். மேலும், அவர்
இயற்கையாக ஒளி வீசுகிறார் (சூரியன், அக்னி
முதலானவை அவரது ஒளியைப் பெற்றே தாங்கள் ஒளி வீசுகின்றன). எனவே,
பகவான் 'ஸர்வவித்பானு:' என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
125. ஓம் விஶ்வக்ஸேனாய நம:
விஶ்வக் அவ்யயம் 'விஶ்வ' என்ற சொல்லிற்கு
ஸர்வேத்யர்த்தே
அனைத்தும், எங்கும்
என்று பொருள் |
விஶ்வ
எங்கும்
கச்சதி
ஓட வைக்கிறார் பலாயதே தோற்று
தைத்யஸேனா
அஸுரப் படைகளை
யஸ்ய
எவர்
ரணோத்யோகமாத்ரேணேதி
போர்க்களத்தில் அவருடைய வீரத்தால்
விஶ்வக்ஸேன:
(எனவே) பகவான் 'விஶ்வக்ஸேனர்'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக