திங்கள், ஆகஸ்ட் 27, 2012

நாம ராமாயணம் சுந்தர காண்டம்

சுந்தர காண்டம்

ஹனுமான் அனுதினம் துதிசெய்த ராம்
(ஹனுமானின்) பாதையின் தடங்கலை விலக்கிய  ராம்
சீதையின் உயிரை காத்தவர் ராம்
கொடிய இராவணனை தூற்றிய ராம்
அடியவன் அனுமனை போற்றிய ராம்
சீதைசொன்ன காக்கைகதை கேட்டவர் ராம்
சூடாமணியை கண்டவர் ராம்
ஹனுமானின் சொல்லினால் தேறிய  ராம்

ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய சீதாராம் !!!

நாம ராமாயணம் - கிஷ்கிந்தா காண்டம்

கிஷ்கிந்தா காண்டம் 


ஹனுமன் சேவையை ஏற்றவர் ராம் 
சுக்ரீவன்  விரும்பியதை அளித்தவர் ராம் 
கர்வம் கொண்ட வாலியை வீழ்த்திய ராம் 
வானர தூதரை அனுப்பிய ராம் 
இலக்குவன் துணையோடு இருந்தவர் ராம் 

ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய சீதா ராம் !!!

செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012

நாம ராமாயணம் - ஆரண்ய காண்டம்

ஆரண்ய காண்டம்

தண்டக வாசிகளை தூய்மை செய்தவர் ராம் 
கொடிய விராதனை வதைத்தவர் ராம் 
சரபங்க சுதீக்ஷ்ணர் தொழுதிட்ட ராம் 
அகத்தியர் அருளை பெற்றவர் ராம் 
கழுகின் அரசர் வணங்கிய ராம் 
பஞ்சவடியினில் வசித்தவர் ராம் 
சூர்பனகையை வருத்திய ராம் 
கரதூஷனரை கொன்றவர் ராம் 
சீதைக்கு மானை தேடிச்சென்ற ராம் 
மாரீசனை அம்பால் கொன்றவர் ராம் 
சீதையை காணாது தேடிய ராம் 
ஜடாயு மோக்ஷம் அருளிய ராம் 
சபரி தந்த கனியுண்ட ராம் 
கபந்தனின் தோள்களை துணித்தவர் ராம்!!

ராம ராம ஜெய ராஜாராம் 
ராம ராம ஜெய சீதாராம் !!!