வியாழன், மே 31, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 55

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாமத்தின்  இரண்டாவது ஸ்லோகமும் அதிலுள்ள திருநாமங்களும் அவற்றின் பொருளும்.

2.   பூதாத்மா பரமாத்மா ச முக்தானாம் பரமா கதி:  |
அவ்யய: புருஶ: ஸாக்ஷீ க்ஷேத்ரஞ்யோSக்ஷர ஏவ ச || 2 ||

10. பூதாத்மா 11. பரமாத்மா 12. முக்தானாம் பரமா கதி: |
13. அவ்யய: 14. புருஶ: 15. ஸாக்ஷீ 16. க்ஷேத்ரஞ்ய: 17. அக்ஷர: ||

10. ஓம் பூதாத்மனே நம:
பூத ஆத்மா யஸ்ய பூதாத்மா கர்மதாராயோ வா 

ரஜோ குணத்தை ஏற்றுக்கொண்டு ஜீவராசிகளைப் படைப்பவர் போன்ற திருநாமங்களைக் கூறும்பொழுது அந்த பரம்பொருளுக்கு முக்குணங்களுக்குக் கீழ்படிந்தவரோ என்ற ஐயத்தை தூய்மையான ஆத்மா (என்ற இந்தத் திருநாமத்தினால் பீஷ்மாச்சார்யார்போக்குகிறார்பகவான் ஸ்ரீ விஶ்ணு தூய்மையானவர்அனைவருக்கும் உள்ளுறையும் ஆத்மாவானவர்.  அவர் படைப்பது முதலான அனைத்து செயல்களையும் தம் கடமையாகக் கருதிச் செய்கிறார்எந்த குணத்திற்கு வசப்பட்டும் செய்வதில்லைஎனவே அந்த குணங்களினால் வரும் குற்றங்கள் அவரைத் தீண்டுவதில்லைஎனவேபகவான் ‘பூதாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

11. ஓம் பரமாத்மனே நம:
பரமஸ்சாஸாவாத்மா சேதி பரமாத்மா  கார்ய காரண விலக்ஷணோ நித்ய சுத்த முக்த ஸ்வபாவ:

அனைத்திற்கும் மேம்பட்ட ஆத்மாவாக இருப்பதனால் பகவான் 'பரமாத்மாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்செயல் மற்றும் விளைவுகளுக்கு அப்பாற்பட்டு எப்பொழுதும் தூய்மையாகவும்அறிவுடையவராகவும்பற்றுதலின்றியும் இருப்பதை தமக்கு இயற்கையாக உடையவர்.

12. ஓம் முக்தானாம் பரமாகதயே நம:
முக்தானாம் பரமா ப்ரக்ருஷ்டா கதிர்கந்த்வ்யா தேவதா புனராவ்ருத்த்ய (அ)ஸம்பவாத்தத்கதஸ்யேதி முக்தானாம் பரமா கதி:

எந்த தெய்வம் முக்தி அடைந்தவர்கள் அடையக்கூடிய மிகவும் மேலான இலக்காக இருப்பவரோ எவரை ஒருமுறை சென்று அடைந்தால் பிறப்புஇறப்பென்னும் இந்த சம்சார சுழற்சிக்கு மீண்டும் வருவதென்பது இல்லையோ அந்த பகவான் (ஸ்ரீ விஶ்ணு) ‘முக்தானாம் பரமா கதி’ (முக்தி அடைபவர்களின் மேலானஇலக்குஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

13. ஓம் அவ்யயாய நம:
ந வ்யேதி நாஸ்ய வ்யயோ விநாஶோ விகாரோ வா வித்யத இதி அவ்யய:

பகவானைப் பகுத்துப் பிரிக்க முடியாததாலும் அவருக்கு அழிதல்மாற்றங்கள் இல்லாததாலும் அவர் 'அவ்யய:' (அழிவற்றவர்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

14. ஓம் புருஶாய நம:
'புருஶ:' என்ற இந்த திருநாமத்திற்கு ஆச்சார்யாள் 6 விளக்க உரைகளை அளித்துள்ளார். முன்பே கூறியிருந்தபடி சில திருநாமங்களுக்கு ஆச்சார்யாள் பல விளக்க உரைகளை அளிக்கிறார். அவை மீண்டும் வருமிடத்தில் அந்த பற்பல விளக்கங்களிலிருந்து சிலவற்றை மீண்டும் உரைக்கிறார். இவற்றை "புனருக்தி" தோஷமாக கருத இயலாது.

புரம் ஶரீரம் தஸ்மின் ஶேதே புருஶ:

பகவான் அனைத்து ஜீவராசிகளின் உடலுக்குள்ளும் அந்தராத்மாவாக சயனித்து இருப்பதால் அவர் "புருஶ:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யத்வா அஸ்தேவ்யர்த்யஸ்தாக்ஷரயோகாத் ஆஸீத் புரா பூர்வமேவேதி விக்ரஹம் க்ருத்வா வ்யுத்பாதித: புருஶ:

அல்லதுஅஸ் என்ற வேர் சொல்லை பின்னின்று முன்னாக எடுத்துக்கொண்டுபுரா என்ற சொல்லோடு இணைத்துப் பார்த்தால் 'புருஶஎன்ற சொல் கிடைக்கும்இதன் பொருள்அனைத்திற்கும் முன்னமிருந்தே பகவான் இருப்பதனால் அவர் "புருஶ:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அதவா புருஶு பூரிஶு உத்கர்ஶஶாலிஶு ஸத்வேஶு ஸீததீதி புருஶ: 

அல்லது புரு என்றால் பல்வேறு என்று பொருள் கொண்டுபல்வேறு உயர்ந்த குணமுடைய ஜீவாத்மாக்களினுள்ளே இருப்பதால் பகவான் "புருஶ:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

புரூனி ஃபலானி ஸனோதி ததாதீதி வா புருஶ:

புரு என்றால் பலன்கள் என்ற பொருள் கொண்டுகேட்பவர்க்குத் தகுந்தபடி வெவ்வேறு பலன்களை வாரி வழங்குவதால் பகவான் "புருஶ:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

புரூனி புவனானி ஸம்ஹாரஸமயே ஸ்யதி அந்தம் க்ரோதீதி வா

புரு என்றால் உலகம் என்ற பொருள் கொண்டுஅழிக்க வேண்டிய காலத்தில் அவற்றை அழிப்பதால் பகவான் "புருஶ:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பூர்ணத்வாத் பூரணாத்வா ஸதனாத்வா புருஶ:

தான் (எவ்வித குறையுமின்றிநிறைவானவராகவும், (அடியவரின் குறைகளை போக்கி அவர்களைநிறைவுபெறச் செய்வதினாலும்நிலைத்து நிற்பதனாலும் பகவான்"புருஶ:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

15. ஓம் ஸாக்ஷிணே நம:
ஸாஷாத் அவ்யவதானேன ஸ்வரூப  போதேன ஈக்ஷதே பஶ்யதி ஸர்வமிதி ஸாக்ஷி 

வேறு உபகரணங்களின் துணையுமின்றி தன்னுடைய இயற்கையான ஞானத்தாலேயே (அறிவாலேயேஅனைத்தையும் (அனைவரையும்உள்ளதை உள்ளவாறு காண்பதால் (அறிவதால்பகவான் "ஸாக்ஷிஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

16. ஓம் க்ஷேத்ரஜ்ஞாய நம:
க்ஷேத்ரம் சரீரம் ஜானாதீதி க்ஷேத்ரஜ்ஞ்ய 

இந்த உடலை உள்ளபடி அறிவதால் பகவான் "க்ஷேத்ரஜ்ஞஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

17. ஓம் அக்ஷராய நம:
ஸ ஏவ ந க்ஷரதி இதி அக்ஷர: பரமாத்மா

எவருக்கு, 'க்ஷரம்அதாவது அழிவு (அல்லது தேய்வுஇல்லையோஅந்த பரமாத்மா "அக்ஷர:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

செவ்வாய், மே 29, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 54


23. ஓம் கேவாய நம:
அபிரூபா: மிகவும் அழகியதான கேஶா தலைமுடியுடன் யஸ்ய இருப்பதால் அவர் கே: 'கேசவன்' என்று அழைக்கப்படுகிறார்|

மிகவும் அழகிய தலைமுடியுடன் இருப்பதால் பகவான் 'கேசவன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'கேஶாத்வோSன்யதரஸ்யாம்’ (பாணினி ஸூத்ரம் 5.2.109)
பாணினி ஸூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:
கேச என்ற சொல்லின் பின்னே வரும்:” என்ற விகுதி, புகழ்ச்சியைக் குறிக்கிறது.

யத்வா அல்லது கஸ்ச '' என்று அழைக்கப்படும் ப்ரஹ்மா அஸ்ச '' என்று அழைக்கப்படும் விஶ்ணு ஸ்ச 'ஈசன்' என்று அழைக்கப்படும் சிவன் த்ரிமூர்த்தய: ஆகிய இந்த மும்மூர்த்திகளும் யத்வஶே எவருடைய ஆணைக்குட்பட்டு வர்தந்தே இருக்கின்றனரோ அவர் கே: கேசவன் என்று அழைக்கப்படுகிறார்.

ப்ரஹ்மா, விஶ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் எவருடைய ஆணைக்குட்பட்டு இருக்கின்றனரோ அந்த பரம்பொருள் 'கேசவன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
1.   அத்வைதத்தின்படி மும்மூர்த்திகளும் ஞானமே வடிவான பரப்ரஹ்மத்தின் உருவங்களாகும்.
2.   ++ஈஶ+(வஷேன, வர்தந்தே) = கேஶவ:

கேஶிவதாத்வா 'கேசி' என்ற அசுரனைக் கொன்றபடியால் கே: பகவான் கேசவன் என்று அழைக்கப்படுகிறார்.

'கேசி' என்ற அசுரனைக் கொன்றபடியால் பகவான் கேசவன் என்று அழைக்கப்படுகிறார்.
கேசி என்பவன் பகவான் கிருஷ்ணரைக் கொல்வதற்காக கம்சனால் ஏவப்பட்ட ஒரு அசுரன். இவன், குதிரை வடிவில் வந்து பிருந்தாவனத்தில் மக்களை துன்புறுத்த, பகவான் தனது கைகளை அவன் வாயினுள் நுழைத்து, கழுத்தை நெரித்துக் கொன்றார்.

யஸ்மாத்வயை துஶ்டாத்மா ஹத: கேசீ ஜனார்தன |
தஸ்மாத்கேஶவநாம்னா த்வம் லோகே க்யாதோ பவிஶ்யஸி ||' (ஸ்ரீ விஶ்ணு புராணம் 5.16.23)
இதி விஶ்ணுபுராணே ஸ்ரீக்ருஶ்ணம் ப்ரதி நாரதவசனம் |
ஸ்ரீ விஶ்ணுபுராணத்தில் நாரத முனிவர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் கூறுகிறார்:
ஒ ஜனார்தனா!!! தங்களுடைய கரங்களால் இந்த தீய எண்ணம் கொண்ட கேசி கொல்லப்பட்டான். எனவே, நீங்கள் உலகில் கேசவன் என்ற திருநாமத்தால் புகழ்பெற்று விளங்குவீர்கள்.

ப்ருஶோதராதித்வாச்சப்தசாதுத்வகல்பனா | (பாணினி சூத்திரம் 6.3.109)
பாணினி சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:
ப்ருஷோதரா வர்க்கத்தை சேர்ந்த சொற்கள் இலக்கணப் புணர்ச்சி விதிகளின்படி பொருந்தாது இருப்பினும், முனிவர்களும், பெரியோர்களும் இந்த பெயரை உச்சரித்திருந்தால் அதை (இலக்கண விதிகளின்படி ஆராயாமல்) அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
புணர்ச்சி விதிகளின்படி கேசி + , கேசவ என்ற சொல்லாக உருவாகாது. எனினும், நாரதர் முதலிய முனிவர்கள் இவ்வாறு கூறியிருப்பதால் இந்த நாமத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விதிவிலக்கை மேற்கண்ட பாணினி சூத்திரம் நமக்கு அளிக்கிறது.

முன்பே கூறியிருந்தபடி ஆச்சார்யாள் மூன்று விளக்கங்களை அளிக்கிறார். பின்னர் வரும் 'கேசவ' திருநாமங்களுக்கும் இங்குள்ள சில உரைகளை மீண்டும் அளிக்கிறார். இதை நாம் புனருக்தி தோஷமாகக் கொள்ள இயலாது. முதலாம் உரையை  இந்த திருநாமத்திற்கும், மற்றவைகளை பின்வரும் திருநாமங்களுக்கும் பொருளாகக் கொள்ளவேண்டும்.  

24. ஓம் புருஶோத்தமாய நம:
புருஶானாம் புருஶர்களில் உத்தம: தலைசிறந்தவர் புருஶோத்தம: 'புருஷோத்தம:' என்று அழைக்கப்படுகிறார் |

புருஶர்களில் உயர்ந்தவர் என்பதால் பகவான் 'புருஶோத்தம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த திருநாமத்தில் புருஶ என்ற பெயர்ச்சொல்லும், உத்தம என்ற பெயர்ச்சொல்லும் இணைந்து புருஶோத்தம: என்று உருவாகியுள்ளது. பொதுவாக, ஒரு சமூகத்திலிருந்து ஒன்றை மட்டும் உயர்த்திக் கூறும்பொழுது (புருஶர்களில் உத்தமன்) இவ்வாறு இணைக்கக்கூடாது என்பது பாணினி ஸூத்ரத்தில் உள்ள ஒரு விதியாகும். அந்த விதி இங்கு பொருந்தாது என்று ஆதிசங்கரர் 'ந நிர்த்தாரணே' (பாணினி ஸூத்ரம் 2.2.10) என்ற பாணினி ஸூத்திரத்தின் விளக்குகிறார்.
  
ததா ச இதை விளக்கும் வண்ணம் பகவத்வசனம் ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறியுள்ளார்.

யஸ்மாத்க்ஷரமதீதோSஹமக்ஷராதபி சோத்தம: |
அதோSஸ்மி லோகே வேதே ச ப்ரதித: புருஶோத்தம: || (ஸ்ரீமத் பகவத்கீதை 15.18)
ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்:
நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஶனைக் (ஜீவாத்மாவைக்) காட்டிலும் சிறந்தோனாதலாலும், உலகத்தாராலும், வேதங்களாலும் புருஷோத்தமனென்று கூறப்படுகிறேன்.

இந்த விளக்கத்தின் தேர்ந்த பொருளாவது: பகவான் புருஶர்களைக் காட்டிலும் உயர்ந்தவர், புருஶர்களில் உத்தமர் என்று கூறுவது பிறப்பாலோ, பண்பாலோ அல்லது செயலாலோ அல்ல. அவரது இயற்கையான வல்லமையாலேயே அவர் புருஶர்களுக்குள் உத்தமாராக இருக்கிறார்.

வெள்ளி, மே 25, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 53

3.   யோகோ யோகவிதாம் நேதா ப்ரதானபுருஶேஶ்வர: |

நாரஸிம்ஹவபு: ஸ்ரீமான் கேஶவ: புருஶோத்தம:  || 3 ||


இந்த ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

18. யோக: 19. யோகவிதாம் நேதா  20. ப்ரதானபுருஶேஶ்வர: |
21. நாரஸிம்ஹவபு: 22. ஸ்ரீமான்  23. கேஶவ: 24. புருஶோத்தம: ||

இவற்றில் ஒரு சில திருநாமங்களுக்கு ஆதிஶங்கர பகவத்பாதரின் விளக்க உரையை (பாஶ்யத்தை) இன்று காணலாம்.


20. ஓம் ப்ரதானபுருஶேஶ்வராய நம:
ப்ரதானம் 'ப்ரதானம்' என்றால் ப்ரக்ருதிர்மாயா 'ப்ரக்ருதி' அல்லது மாயையைக் குறிக்கும்; புருஶோ 'புருஶ' என்றால் ஜீவஸ் ஜீவாத்மாவைக் குறிக்கும் தயோரீஶ்வர: இவை இரண்டையும் தனது ஆளுகைக்குள் வைத்திருப்பதால் ப்ரதானபுருஶேஶ்வர: அவர் 'ப்ரதானபுருஶேஶ்வர:' என்று அழைக்கப்படுகிறார் |

ப்ரக்ருதி எனும் ப்ரதானத்தையும், ஜீவாத்மாவாகிய புருஶனையும் தனது ஆளுகைக்குள் வைத்திருப்பதால் (இவை இரண்டிற்கும் ஈஸ்வரனாக இருப்பதால்), பகவான் "ப்ரதானபுருஶேஶ்வர:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து உயிரினங்களின் உடல்களும் ப்ரக்ருதி, மஹான், அஹங்காரம், பஞ்ச பூதங்கள், பஞ்ச தன்மாத்திரைகள், ஐந்து அறிவுப்புலன்கள், ஐந்து செயல் புலன்கள், மனம் ஆகிய 24 தத்துவங்களால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த உடலின் உள்ளே உறையும் ஜீவாத்மா 25வது தத்துவமாவார். மனம் உட்பட, முதல் 24 தத்துவங்களும் அசித் (அறிவற்றவை). ஜீவாத்மா மட்டுமே அறிவுடையவர். இந்த சித் (ஜீவாத்மா), மற்றும் அசித் ஆகிய இரண்டிற்கும் ஈஸ்வரன் பகவான்.

21. ஓம் நாரஸிம்ஹவபுஶே நம:
நரஸ்ய மனிதர் ஸிம்ஹஸ்ய சிங்கம் சாவயவா ஆகிய இந்த இரண்டின் உடலுறுப்புகளும் யஸ்மின் எங்கு லக்ஷ்யந்தே சேர்ந்து உள்ளதோ தத்வபுர்யஸ்ய ஸ அத்தகைய உடல் உள்ளவர் நாரஸிம்ஹவபு: நாரஸிம்ஹவபு:’ என்று அழைக்கப்படுகிறார் |

(நரசிம்ம அவதாரத்தின் பொழுது) அவருடைய உடலில் மனிதர் மற்றும் சிங்கத்தின் உறுப்புகள் ஒன்று சேர்ந்து இருப்பதால் பகவான் 'நாரஸிம்ஹவபு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

22. ஓம் ஸ்ரீமதே நம:
யஸ்ய எவருடைய வக்ஷஸி திருமார்பில் நித்யம் எப்பொழுதும் வஸதி வாழ்கின்றாளோ ஸ்ரீ: திருமகள் அவர் ஸ்ரீமான் 'ஸ்ரீமான்' என்று அழைக்கப்படுகிறார் |

பகவானுடைய திருமார்பில் திருமகள் எப்பொழுதும் நிரந்தரமாக வாழ்வதால் அவர் 'ஸ்ரீமான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
திருவண்பரிசாரம் திருவாழ்மார்பர்
மற்றவர்களுக்கு 'ஸ்ரீமான்' என்பது ஒரு அடைமொழி மட்டுமே. பகவானுக்குத்தான் அது பொருத்தமான திருநாமமாகும். திருவண்பரிசாரம் என்னும் திவ்யதேசத்தில் பகவான், இந்தத் திருநாமத்தின் தூய தமிழாக்கமான 'திருவாழ்மார்பர்' என்ற பெயருடனேயே சேவை சாதிக்கிறார்.