1. ஓம் விஶ்வம் விஶ்ணுர்வஶட்காரோ பூதபவ்யபவத்பிரபு: |
பூதக்ருத்பூதப்ருத்பாவோ பூதாத்மா பூதபாவன: || 1 ||
இந்த முதல் ஸ்லோகத்தில் மொத்தம் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
இந்த முதல் ஸ்லோகத்தில் மொத்தம் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
1. விஶ்வம் 2. விஶ்ணு: 3. வஶட்கார: 4. பூதபவ்யபவத்பிரபு: |
5. பூதக்ருத் 6. பூதப்ருத் 7. பாவ: 8. பூதாத்மா 9. பூதபாவன:
||
இவற்றில் மேலும் சில திருநாமங்களுக்கு ஆச்சார்யாள் அளிக்கும் உரையை இன்று பார்க்கலாம்.
3. ஓம் வஶட்காராய நம:
யதுத்தேஶேனாத்வரே எவரைக்குறித்து வஶட் வேள்விகளில் "வஶட்" என்று சொல்லி க்ரியதே ஆகுதி செய்யப்படுகிறதோ ஸ வஶட்கார: அவரே "வஶட்காரர்" ஆவார் |
அனைத்து
வேள்விகளிலும் பகவானைக் குறித்தே 'வஶட்' என்று
சொல்லி ஆகுதி செய்யப்படுகிறது. எனவே, பகவான்
'வஶட்கார:' என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
யக்ஞ்யோ வை விஶ்ணு: | (தைத்ரிய சம்ஹிதை
1.7.4)
வேள்விகள்
விஶ்ணுவேயாகும்.
இதி ஸ்ருதேர்யக்ஞ்யோ வஶட்கார: |
இந்த
ஸ்ருதி வாக்கியத்தின் படி எந்த வேள்வியில்
"வஶட்" என்று சொல்லி
ஆகுதி செய்யப்படுகிறதோ அந்த வேள்வியே வஶட்காரமாகும் (வேள்விகள் விஶ்ணுவே என்பதால், விஶ்ணு வஶட்காரர் எனப்படுகிறார்).
யேன வஶட்காராதிமந்த்ராத்மனா
வா தேவான்ப்ரீனயதி ஸ வஶட்கார: | தேவதா வா, 'ப்ரஜாபதிஸ்ச வஶட்காரஸ்ச' இதி ஸ்ருதே: |
மேற்கண்ட
ஸ்ருதிவாக்கியங்களின்படி, வஶட்கார மந்திர உருவமாக எந்த தெய்வத்தை திருப்தி செய்கிறார்களோ அவர்
(அந்த தெய்வமே) வஶட்காரர்.
சதுர்பிஸ்ச சதுர்பிஸ்ச த்வாப்யாம் பஞ்சபிரேவ ச |
ஹூயதே ச புனர்த்வாப்யாம் ஸ மே விஶ்ணு: ப்ரஸீதது ||
நான்கு
(ஒஶ்ராவய),
நான்கு (அஸ்து ஸ்ரௌஶட்),
இரண்டு (யஜ), ஐந்து (யே யஜாமஹே) மற்றும் இரண்டு (வஶட்) எழுத்துக்கள் கொண்ட மந்திரங்களினால்
எவரைக்குறித்து வேள்விகள் செய்கின்றோமோ அந்த பகவான் ஸ்ரீ விஶ்ணு என்னிடம்
மகிழ்ச்சி அடையட்டும்.
இத்யாதிஸ்ம்ருதேஸ்ச |
இத்தகைய
ஸ்ம்ருதி வாக்கியங்களின் படியும் பகவான் ஸ்ரீ விஶ்ணு 'வஶட்கார'
என்று அழைக்கப்படுகிறார்.
4. ஓம் பூதபவ்யபவத்ப்ரபவே நம:
பூதம் ச கடந்த காலம் பவ்யம் ச எதிர்
காலம் பூதபவ்யபவந்தி (நிகழ்காலமும் சேர்ந்து)
முக்காலங்களிலும் தேஶாம் ப்ரபு: எவரொருவர்
தலைவரோ (ப்ரபுவோ) பூதபவ்யபவத்ப்ரபு: அவர் "பூதபவ்யபவத்ப்ரபு" ஆவார்.
முக்காலங்களிலும்
ஆட்சி செலுத்துபவராக இருப்பதால் பகவான் "பூதபவ்யபவத்ப்ரபு:" என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
காலபேதமனாத்ருத்ய ஸன்மாத்ரப்ரதியோகிகமைஶ்வர்யமஸ்யேதி ப்ரபுத்வம்
|
(ஏன் அவருக்கு மட்டும் இந்த) ப்ரபுத்வம்? அவர் முக்காலங்களையும்
கடந்து, என்று நிரந்தரமாக இருக்கிறார். அதுவே அவரது ஐஸ்வர்யமாகும். எனவே, அவர் முக்காலங்களுக்கும் (முக்காலங்களிலும்) ப்ரபு ஆவார்.
5. ஓம் பூதக்ருதே நம:
ரஜோகுணம் ஸமாஶ்ரித்ய (அந்த விஶ்ணுவானவர்) ரஜோ குணத்தை
ஏற்றுக்கொண்டு விரிஞ்சிரூபேண ப்ரஹ்மாவின் வடிவத்தில் பூதானி அனைத்து உயிர்களையும் கரோதீதி படைப்பதால் பூதக்ருத் 'பூதக்ருத்' என்று
அழைக்கப்படுகிறார்.||
(அந்த விஶ்ணுவானவர்)
ரஜோ குணத்தை ஏற்றுக்கொண்டு (நான்முகக் கடவுள்)
ப்ரஹ்மாவின் வடிவத்தில் அனைத்து உயிர்களையும் படைப்பதால் பகவான் 'பூதக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தமோகுணமாஸ்தாய ச (அந்த விஶ்ணுவானவர்) தமோ குணத்தை ஏற்றுக்கொண்டு ருத்ராத்மனா ருத்ரனின்
வடிவத்தில் பூதானி அனைத்து உயிர்களையும் க்ருந்ததி அழித்தும் க்ருணோதி கொன்றும் ஹிநஸ்தீதி துன்புறுத்துவதால்
பூதக்ருத் 'பூதக்ருத்' என்று அழைக்கப்படுகிறார் |
அல்லது, (அந்த விஶ்ணுவானவர்) தமோ குணத்தை ஏற்றுக்கொண்டு (சம்ஹாரக் கடவுள்)
ருத்ரனின் வடிவத்தில் அனைத்து உயிர்களையும் (பிரளய
காலத்தில்) துன்புறுத்துவதால் பகவான் 'பூதக்ருத்'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக