சனி, ஆகஸ்ட் 18, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 76

7. அக்ராஹ்ய: ஶாஶ்வத: க்ருஶ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்தன: |
ப்ரபூதஸ்த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம் ||

இந்த ஏழாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

55. அக்ராஹ்ய:, 56. ஶாஶ்வத:, 57. க்ருஷ்ண:, 58. லோஹிதாக்ஷ:, 59. ப்ரதர்தன: |
60.ப்ரபூத:, 61.த்ரிககுப்தாம:, 62.பவித்ர:, 63. மங்களம் பரம் ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:


55. ஓம் அக்ராஹ்யாய நம:
கர்மேந்த்ரியைர் வாக்கு, கை, கால் முதலிய செயற்புலன்களால் ந க்ருஹ்யதே அறிந்துகொள்ளவோ (உணரவோ) இயலாததால் இதி அக்ராஹ்ய: பகவான் ‘அக்ராஹ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வாக்கு, கை, கால் முதலிய செயற்புலன்களால் அறியமுடியாதவராய் இருப்பதால் பகவான் ‘அக்ராஹ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ' (தைத்ரீய உபநிஶத் 2.9)
தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
எதனிடமிருந்து மனதுடன் சொற்கள் அடைய முடியாமல் திரும்புகின்றனவோ...

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

56. ஓம் ஶாஶ்வதாய நம:
ஶஷ்வத் ஸர்வேஶு காலேஶு ‘ஶஷ்வத்’ என்றால் அனைத்து காலங்களிலும் பவதீதி தோன்றுவதால் (அல்லது, இருப்பதால்) ஶாஶ்வத: பகவான் ‘ஶாஶ்வத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்துக் காலங்களிலும் தோன்றுவதால் (அல்லது, இருப்பதால்) பகவான் ‘ஶாஶ்வத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஶாஶ்வதம் ஶிவம் அச்யுதம்' (நாராயண உபநிஶத் 13.1)
நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
எக்காலத்திலும் உள்ளவர், மங்களமானவர், தன்னிலையினின்று வழுவாதவர்...

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.


57. ஓம் க்ருஶ்ணாய நம:
க்ருஶிர்பூவாசக: ஶப்தோ ணஸ்ச நிர்வ்ருதிவாசக: |
விஶ்ணுஸ்தத்பாவயோகாஸ்ச க்ருஶ்ணோ பவதி ஶாஶ்வத: || (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.5)

மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது:
"க்ருஶி" என்றால் இருத்தல் (என்றும் இருத்தல்) என்று பொருள்,  ‘ண’ ஆனந்தத்தைக் குறிக்கும். பகவான் விஶ்ணுவிடம் இந்த இரண்டு குணங்களும் ஒருங்கிணைந்து இருப்பதால் அவர் ‘க்ருஶ்ணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி வ்யாஸ வசனாத் ஸ்ரீவ்யாஸரின் இந்தக் (மஹாபாரதத்தில் உள்ள) கூற்றின்படி ச்சிதானந்தாத்மக: ச்சிதானந்த சொரூபனான (அறிவும், இன்பமும் என்றும் நிலைபெற்றுள்ள) பகவான் விஶ்ணுவே க்ருஶ்ண: ‘க்ருஶ்ண’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் என்றும் ஆனந்தத்துடன் கூடியுள்ளார்; ஆனந்தத்துடன் என்றும் நிலைபெற்றுள்ளார். எனவே, அவர் ‘க்ருஶ்ணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் க்ருஶ்ணரின் திருநாமமே ஆனந்தம்; அவரது திருநாமத்தை உச்சரிப்பதும் ஆனந்தம்; அதை அன்றாடம் உச்சரிப்போரின் வாழ்க்கையிலும் ஆனந்தமே; அவரது சரித்திரமும், லீலைகளும் அவரது பெயருக்கேற்ப ஆனந்தமே உருவாக உள்ளது. அவரது சரித்திரமே ஆனந்தம், படிப்பவருக்கும் ஆனந்தம், கேட்பவருக்கும் ஆனந்தம். க்ருஶ்ணனே ‘ஆனந்த மயன்’ என்றால் அது மிகையாகாது.

க்ருஶ்ணவர்ணாத்மகத்வாத்வா பகவான் கருமை நிறமானத் திருமேனியை உடையவராதலால் க்ருஶ்ண: ‘க்ருஷ்ண’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(அல்லது) கருமை நிறமானத் திருமேனியை உடையவராதலால் பகவான் ‘க்ருஶ்ண’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘க்ருஶாமி ப்ருதிவீம் பார்த்த பூத்வா கார்ஶ்ணாயஸோ ஹல: |
க்ருஶ்ணோ வர்ணஸ்ச மே யஸ்மாத்தஸ்மாத் க்ருஶ்ணோSஹமர்ஜுன’ || (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 342.79)

மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் பகவான் கூறுகிறார்:
ஒ அர்ஜுனனே (பார்த்தனே)!!! நான் கரிய நுனி கொண்ட கலப்பையைப் போல பூமியை உழுகிறேன். மற்றும், கருமையான திருமேனியைக் கொண்டிருக்கிறேன். எனவே, நான் ‘க்ருஶ்ன்’ என்று அழைக்கப்படுகிறேன்.

இதி மஹாபாரதே | இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, ஆகஸ்ட் 10, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 75

6.  அப்ரமேயோ ஹ்ருஶீகேஶ: பத்மநாபோS(அ)மரப்ரபு: |விஶ்வகர்மா மனுஸ்த்வஶ்டா ஸ்தவிஶ்ட: ஸ்தவிரோ த்ருவ: ||

இந்த ஆறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

46. அப்ரமேய:, 47. ஹ்ருஶீகேஶ:, 48. பத்மநாப:, 49. அமரப்ரபு: |
50. விஶ்வகர்மா, 51. மனு:, 52. த்வஶ்டா, 53. ஸ்தவிஶ்: 54. ஸ்தவிரோ த்ருவ: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

46. ஓம் அப்ரமேயாய நம:
ஶப்தாதிரஹிதத்வான் ந ப்ரத்யக்ஷ கம்ய: நாப்யனுமானவிஶய: தத்வ்யாப்தலிங்காபவாத் நாப்யுபமான ஸித்த: நிர்பாகத்வேன ஸாத்ருஶ்யாபாவாத் | நாப்யர்தாபத்திக்ராஹ்ய: தத்வினானுபபத்யமானஸ்யா(அ)ஸம்பவாத் | நாப்யபாவகோசரோ பாவத்வேன ஸம்மதத்வாத் | அபாவஸாக்ஷித்வாச்ய ந ஶஶ்டப்ரமாணஸ்ய | நாபி ஸாஸ்த்ரப்ரமாணவேத்ய: ப்ரமாணஜன்யாதிஶயாபாவாத் | யத்யேவம் ஸாஸ்திரயோனித்வம் கதம்? | உச்யதே ப்ரமாணாதிஸாக்ஷித்வேன ப்ரகாஶஸ்வரூபஸ்ய ப்ரமாணா-விஶ்யத்வேSபி அத்யஸ்தாதத்ரூபநிவர்தகத்வேன ஸாஸ்த்ர-ப்ரமாணகத்வமிதி அப்ரமேய: ஸாக்ஷி ரூபத்வாத் வா |
பகவானை நாம் நமது புலன்களைக் கொண்டோ, வேறு எடுத்துக்காட்டுகளைக் கொண்டோ, நாம் காணும் நிகழ்வுகளின் மூலம் ஊகித்து அறிந்து கொள்ளவோ, மற்ற எவற்றின் மூலமோ முழுவதுமாக அறிந்துகொள்ள முடியாது. சாத்திரங்களைக் கொண்டும் அவரை தெரிந்து கொண்டு விடமுடியாது. எனினும், அவர் இந்த உலகனைத்தும் மறைமுகமாக உள்ளுறை ஆன்மாவாக நிறைந்து, அதை தன் கட்டுக்குள் வைத்திருப்பதால், சாத்திரக் கூறுகளுக்கு சாட்சியாக விளங்குகிறார். எனவே, பகவான் 'அப்ரமேய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

47. ஓம் ஹ்ருஶீகேஶாய நம:
ஹ்ருஶீகாணிந்த்ரியாணி தேஶாம் ஈஶ: ஹ்ருஶீகேஶ: 
அனைத்து உடல்களுக்குள்ளும் உள்ளுறைந்துஅனைத்து உடல்களையும் உள்ளபடி அறிவதால் அவர் புலன்களை ஆள்கிறார்எனவேபகவான்'ஹ்ருஶீகேஶன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யத்வா இந்த்ரியாணி யஸ்ய வஶே வர்த்தந்தே ஸ ஹ்ருஶீகேஶ: 
அல்லது, புலன்கள் எவரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோ அந்தப் பரம்பொருள் 'ஹ்ருஶீகேஶன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யஸ்ய வா ஸூர்யரூபஸ்ய சந்த்ரரூபஸ்ய  ஜகத்ப்ரீதிகரா ஹ்ருஶ்டா: கேஶா ரஶ்மய:  ஸ ஹ்ருஶீகேஶ:
கதிரவனின் வடிவிலும் குளிர்நிலவின் வடிவிலும்தனது கிரணங்களால் உலகத்தவருக்கு மகிழ்ச்சியை உண்டாக்குவதால் பகவான் 'ஹ்ருஷீகேஷன்'என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

48ஓம் பத்மநாபாய நம:
ஸர்வஜகத்காரணம் பத்மம் நாபௌ யஸ்ய  பத்மநாப:
அனைத்துலகின் பிறப்பிடமாகவும், தோற்றுவாயாகவும் உள்ளத் தாமரை எவருடைய தொப்புளிலிருந்து எழுகிறதோ, அந்த பகவான் ‘பத்மநாபன்’ என்றத் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

49ஓம் அமரப்ரபவே நம:
அமரானாம் ப்ரபு: அமரப்ரபு: 
அனைத்து தேவர்களின் தலைவராக இருப்பதால், பகவான் ‘அமரப்ரபு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

50ஓம் விஶ்வகர்மணே நம:
விஶ்வம் கர்மம் க்ரியா யஸ்ய  விஶ்வகர்மா 
அனைத்து உயிரினங்களும் அந்தப் பரம்பொருளின் செயலினால் உருவாக்கப்பட்டதால், பகவான் ‘விஸ்வகர்மா’ என்றத் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

க்ரியத இதி ஜகத்கர்ம விஶ்வம் கர்ம யஸ்யேதி  வா விஶ்வகர்மா
இந்தப் பிரபஞ்சத்தையே படைத்து உருவாக்குவதால், பகவான் ‘விஸ்வகர்மா’ என்றத் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விசித்ர நிர்மாணஶக்திமத்வாத்வா விஶ்வகர்மா 
ஆச்சரியமான படைக்கும் வல்லமையைக் கொண்டுள்ளதால் பகவான்'விஶ்வகர்மாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

த்வஶ்ட்ரா ஸாத்ருஶ்யாத்வா விஶ்வகர்மா 
த்வஶ்ட்ரா எனப்படும் தேவர்களுக்கு சமானமானவராக இருப்பதால் பகவான்'விஸ்வகர்மாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

51ஓம் மனவே நம:
மனனாத் மனு: 
(அனைத்தையும்) நினைப்பதால் (மனனம் செய்வதால்) பகவான் மனு என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மந்த்ரோ வா மனு: 
மந்திரங்களின் வடிவில் இருப்பதால் பகவான் 'மனுஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரஜாபதிர் வா மனு: 
மனிதக் குலத்தைப் (நான்முகனின் வடிவில்) படைப்பதால் பகவான் 'மனுஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

52. ஓம் த்வஶ்ட்ரே நம:
ஸம்ஹாரஸமயே ஸர்வபூத தனூகாரணத்வாத் த்வஶ்டா: 
இந்தப் ப்ரபஞ்சம் அனைத்தும் அழியப்படும் காலத்தில், அனைத்து ஜீவராசிகளையும் (அழிப்பதன் மூலம்) குன்றச் செய்வதால், பகவான் 'த்வஶ்டா'என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

53. ஓம் ஸ்தவிஶ்டாய நம:
அதிஶயேன ஸ்தூல ஸ்தவிஶ்ட: 
மிகவும் பருத்துப் பெருத்திருப்பதால் பகவான் 'ஸ்தவிஶ்ட:என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

54ஓம் ஸ்தவிராய த்ருவாய நம:
புராண: ஸ்தவிர: வயோவசனோ வா ஸ்திரத்வாத் த்ருவ: ஸ்தவிரோ த்ருவ இத்யேகமிதம் நாம ஸவிஶேஶணம்
மிகவும் பழமையானவரும் (வயதானவரும்), அதே சமயம் எக்காலத்திலும் நிலையானவராய் இருத்தலாலும் பகவான் ‘ஸ்தவிரோ த்ருவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஞாயிறு, ஆகஸ்ட் 05, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 74

6.  அப்ரமேயோ ஹ்ருஶீகேஶ: பத்மநாபோS(அ)மரப்ரபு: |விஶ்வகர்மா மனுஸ்த்வஶ்டா ஸ்தவிஶ்ட: ஸ்தவிரோ த்ருவ: ||

இந்த ஆறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

46. அப்ரமேய:, 47. ஹ்ருஶீகேஶ:, 48. பத்மநாப:, 49. அமரப்ரபு: |
50. விஶ்வகர்மா, 51. மனு:, 52. த்வஶ்டா, 53. ஸ்தவிஶ்: 54. ஸ்தவிரோ த்ருவ: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களின் விளக்கம்:


52. ஓம் த்வஶ்ட்ரே நம:
ஸம்ஹாரஸமயே அழிக்கும் காலத்தில் ஸர்வபூத அனைத்து ஜீவராசிகளையும் தனூகாரணத்வாத் குன்றச் செய்வதால் (அழியச் செய்வதால்) த்வஶ்டா: பகவான் 'த்வஶ்டா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சம் அனைத்தும் அழியப்படும் காலத்தில், அனைத்து ஜீவராசிகளையும் (அழிப்பதன் மூலம்) குன்றச் செய்வதால், பகவான் 'த்வஶ்டா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

த்வக்ஷதேஸ் இங்கு, ‘த்வக்ஷ்’ எனும் வேர்ச்சொல் தனூகரண குன்ற செய்வது அல்லது அழிப்பது அர்தாத் என்ற பொருளில் வருகிறது த்ருச் ப்ரத்யய: அதனுடன் ‘த்ருச்’ என்ற விகுதி சேர்ந்து ‘த்வஷ்டா’ என்ற திருநாமம் அமைகிறது.

53. ஓம் ஸ்தவிஶ்டாய நம:
அதிஶயேன மிகுந்த ஸ்தூல பருத்திருப்பதால் ஸ்தவிஶ்ட: பகவான் 'ஸ்தவிஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகவும் பருத்துப் பெருத்திருப்பதால் பகவான் 'ஸ்தவிஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்தும் அவரே, அனைத்தையும் உள்ளடக்கி வைத்திருப்பவரும் அவரே. அவரைக் காட்டிலும் பருத்தப் பொருள் வேறொன்றுமில்லை என்ற கருத்தில் இந்த திருநாமம் அமைக்கப்பட்டுள்ளது.

54. ஓம் ஸ்தவிராய த்ருவாய நம:
புராண: ஸ்தவிர: ‘ஸ்தவிர:’ என்றால் மிகப்பழமையானது என்று பொருள்.

'த்வேகம் ஹ்யஸ்ய ஸ்தவிரஸ்ய நாம' இதி பஹ்வ்ருசா
பஹ்வ்ருசரின் கூற்றின்படி: இந்தப் பழமையானதற்கு ஒரே திருநாமம் உள்ளது.

வயோவசனோ வா (அல்லது ஸ்தவிர என்றால்) வயது முதிர்ந்த என்ற பொருளும் கொள்ளலாம் ஸ்திரத்வாத் த்ருவ: நிலைபெற்றுள்ளதால் ‘த்ருவ:’ ஸ்தவிரோ த்ருவ இத்யேகமிதம் நாம ஸவிஶேஶணம் பகவானின் இவ்விரு பண்புகளையும் ஒன்று சேர்த்து ‘ஸ்தவிரோ த்ருவ:’ என்று ஒரே திருநாமமாக வழங்கப்படுகிறது.

மிகவும் பழமையானவரும் (வயதானவரும்), அதே சமயம் எக்காலத்திலும் நிலையானவராய் இருத்தலாலும் பகவான் ‘ஸ்தவிரோ த்ருவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.