திங்கள், ஏப்ரல் 29, 2024

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 224

76. விஶ்வமூர்த்திர்மஹாமூர்த்திர்தீப்தமூர்த்திர்அமூர்த்திமான் |

அனேகமூர்த்திரவ்யக்த: ஶதமூர்த்தி: ஶதானன: || 

இந்தஎழுபத்தேழாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

717. விஶ்வமூர்த்தி:, 718. மஹாமூர்த்தி:, 719. தீப்தமூர்த்தி:, 720. அமூர்த்திமான் |

721. அனேகமூர்த்தி:, 722. அவ்யக்த:, 723. ஶதமூர்த்தி:, 724. ஶதானன: || 

717. விஶ்வமூர்த்தயே நம:

விஶ்வம் இந்தப் ப்ரபஞ்சமே 

மூர்த்திரஸ்ய வடிவானவர் 

ஸர்வாத்மகத்வாத் அனைவரின் உள்ளுறை ஆன்மாவாக இருப்பதால் 

இதி விஶ்வமூர்த்தி: எனவே பகவான் 'விஶ்வமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

அனைவரின் உள்ளுறை ஆன்மாவாக இருப்பதால் பகவான் ப்ரபஞ்ச வடிவாக உள்ளார். எனவே அவர் 'விஶ்வமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

718. மஹாமூர்த்தயே நம:

ஶேஶபர்யங்க ஆதிசேடனை படுக்கையாகக் கொண்டு 

ஶயினோஸ்ய பள்ளி கொண்டருளும் 

மஹதீ மூர்த்திரிதி பகவானின் திருமேனி மிகப்பெரியதாகும் 

மஹாமூர்த்தி: எனவே பகவான் 'மஹாமூர்த்தி:' என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மிகப்பெரிய திருமேனியுடன் ஆதிசேடனின் மேல், பாம்புப் படுக்கையில்,  பள்ளிகொண்டு அருளுகிறார். எனவே அவர் 'மஹாமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


ஆதிசேடன் மேல் பள்ளிகொண்டருளும் "மஹாமூர்த்தி" திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள்!!!  

719. தீப்தமூர்த்தயே நம:

தீப்தா ஞானமயீ ஞான ஒளிப் பிழம்பான 

மூர்த்திரஸ்யேதி திருமேனி உடையவராதலால் 

தீப்தமூர்த்தி: பகவான் 'தீப்தமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஞான ஒளிப் பிழம்பான (ஞான ஒளி வீசும்) திருமேனி உடையவராதலால் பகவான் 'தீப்தமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஸ்வேச்சயா தனது சுய விருப்பத்தால் (கர்மத்தினால் அன்று) 

க்ருஹீதா எடுத்துக்கொள்ளும் 

தைஜஸீ மூர்த்திர் தீப்தா சரீரங்கள் ஒளிபொருந்தியவை 

அஸ்யேதி வா தீப்தமூர்த்தி: எனவே, பகவான் 'தீப்தமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவதாரகாலத்தில், கர்மத்தினால் உந்தப்படாது தனது சுய விருப்பத்தால் பகவான் ஒளி பொருந்திய சரீரங்களை ஏற்றுக்கொள்கிறார். எனவே அவர் 'தீப்தமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் திருமேனி இயற்கையாகவே ஞான ஒளி பொருந்தியது. அவர் தனது இச்சையால் ஏற்றுக்கொள்ளும் அவதார கால திருமேனிகளும் ஒளி பொருந்தியவையே. எவ்வாறு பார்த்தாலும் அவர் 'தீப்தமூர்த்தி' தான்.

720. அமூர்த்திமதே நம:

கர்மாநிபந்தனா கர்மத்தினால் உந்தப்பட்ட (பந்தப்பட்ட) 

மூர்த்திரஸ்ய ந வித்யத உடலைப் பகவான் பெறுவதில்லை 

இதி அமூர்த்திமான் எனவே அவர் 'அமூர்த்திமான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஒரு பொழுதும் கர்மத்தினால் உந்தப்பட்டு சரீரங்களை (உடலை) ஏற்பதில்லை. எனவே அவர் 'அமூர்த்திமான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அமூர்த்திமான் என்றால் சரீரம் இல்லாதவர். இங்கு, கர்மத்தினால் உந்தப்பட்ட சரீரம் இல்லாதவர் என்று பொருள்.

721. அநேகமூர்த்தயே நம:

அவதாரேஶு அவதார காலத்தில் 

ஸ்வேச்சயா தனது சுய விருப்பத்தால் 

லோகாநாம் உலக மக்களுக்கு 

உபகாரிணீர் உதவும் பொருட்டு 

பஹ்வீர் பல்வேறு 

மூர்த்திர் உடல்களை (உருவங்களை) 

பஜத இதி ஏற்றுக்கொள்வதால் 

அநேகமூர்த்தி: பகவான் 'அநேகமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவதார காலத்தில், உலக மக்களுக்கு உதவும் பொருட்டு , (கர்மத்தினால் உந்தப்படாது) தனது சுய விருப்பத்தால் பல்வேறு உடல்களை (உருவங்களை) பகவான் ஏற்றுக்கொள்கிறார். எனவே அவர் 'அநேகமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

722. அவ்யக்தாய நம:

யத்யப்யனேக இவ்வாறாக பல்வேறு 

மூர்த்தித்வம் அஸ்ய உருவங்களை ஏற்றுக்கொண்டாலும் 

ததாப்யயம் ஈத்ருஶ ஏவேதி அவர் இவ்வாறானவர் என்று 

ந வ்யஜ்யத இதி அறியமுடியாது 

அவ்யக்த: எனவே பகவான் 'அவ்யக்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இவ்வாறு தனது அவதார காலத்தில் பல்வேறு உருவங்களை ஏற்றுக்கொண்டாலும், நம்மால் அவர் இவ்வாறானவர் என்று அறிந்து கொள்ள இயலாது. எனவே அவர் 'அவ்யக்த:' என்ற  அழைக்கப்படுகிறார்.

723. ஶதமூர்த்தயே நம:

நானாவிகல்பஜா பல்வேறு விதமாக கற்பிக்கப்பட்ட 

மூர்த்தய: உருவங்கள் 

ஸம்விதாக்ருதே ஞானமயமாக 

ஸந்தீதி (பகவானுக்கு) இருப்பதால் 

ஶதமூர்த்தி: பகவான் 'ஶதமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஞானமயமாக பகவானுக்கு பல்வேறு உருவங்கள் கற்பிக்கப்படுகின்றன. எனவே அவர் 'ஶதமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

724. ஶதானனாய நம:

விஶ்வாதி ப்ரபஞ்சம் முதலான 

மூர்த்தித்வம் யதோSத ஏவ உருவங்கள் அவருக்கு இருப்பதால் 

ஶதானன: பகவான் 'ஶதானன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரபஞ்சம் முதலான பல்வேறு உருவங்கள் இருப்பதால் பகவானுக்கு பல்வேறு முகங்களும் உள்ளன. எனவே அவர் 'ஶதானன:' (நூற்றுக்கணக்கான முகங்களுடையவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வம் ஸ்ரீகிருஶ்ணார்ப்பணம்!!!

ஞாயிறு, டிசம்பர் 17, 2023

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 223

76. பூதாவாஸோ வாஸுதேவ: ஸர்வாஸுநிலயோSநல: |

தர்ப்பஹா தர்ப்பதோ த்ருப்தோ துர்த்தரோSதாபராஜித: || 

இந்த எழுபத்தாறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

708. பூதாவாஸ:, 709. வாஸுதேவ:, 710. ஸர்வாஸுநிலய:, 711. அனல: |

712. தர்ப்பஹா, 713. தர்ப்பத:, 714. த்ருப்த:, 715. துர்த்தர:, 716. அபராஜித: ||

708. பூதாவாஸாய நம:

பூதான்யத்ராபிமுக்யேன வஸந்தீதி அனைத்து ஜீவராசிகளும் அவருக்குள் வசிக்கின்ற படியால் (உறைகின்ற படியால்) 

பூதாவாஸ: பகவான் 'பூதாவாஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளும் அவருக்குள் வசிக்கின்ற படியால் (உறைகின்ற படியால்) பகவான் 'பூதாவாஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'வஸந்தி த்வயி பூதானி பூதவாஸஸ்ததோ பவான் |' (ஹரிவம்ஶம் 3.88.53) 

இதி ஹரிவம்ஶே | 

ஹரிவம்சத்தில் கூறப்பட்டுள்ளது: தங்களுக்குள் அனைத்து பூதங்களும் (ஜீவராசிகளும்) வசிக்கின்றன. எனவே தாங்கள் 'பூதவாஸர்' (பூதவாஸ:) என்று அழைக்கப்படுகிறீர்கள்.

709. வாஸுதேவாய நம:

ஜகத உலகத்தை (உலகத்திடமிருந்து தன்னை) 

ஆச்சாதயதி மறைக்கிறார் 

மாயயேதி மாயையால் 

வாஸு: எனவே பகவான் 'வாஸு:' என்று அழைக்கப்படுகிறார் 

ஸ ஏவ தேவ இதி அவர் ஒருவரே முழுமுதற்கடவுளாகவும் (தேவ) இருப்பதால் 

வாஸுதேவ: பகவான் 'வாஸுதேவ:' என்ற திருநாமத்தால்  அழைக்கப்படுகிறார்.

பகவான் உலகத்தை (உலகிலுள்ளோரை / உலகத்திடமிருந்து தன்னை) மாயையால் மறைக்கிறார். எனவே அவர் 'வாஸு' என்று அழைக்கப்படுகிறார். அவரே முழுமுதற் கடவுளாகவும் இருப்பதால், 'தேவ' என்ற பதத்துடன் சேர்த்து 'வாஸுதேவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'சாதயாமி ஜகத் விஶ்வம் பூத்யா ஸூர்ய இவாம்ஶுபி:' (மஹாபாரதம் ஶாந்திபர்வம் 342.42)

மஹாபாரதம் ஶாந்திபர்வத்தில் பகவான் கூறுகிறார்: எவ்வாறு கதிரவன் தனது கிரணங்களாலேயே மறைக்கப்படுகிறதோ, அவ்வாறே நான் அனைத்துலகங்களையும் மறைக்கிறேன்.

'வாஸுதேவ:' என்ற இதே திருநாமத்திற்கு முன்பு 332வது திருநாமத்தில் 'அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் மறைந்து உறைகிறார்' என்றும், 695வது திருநாமத்தில் 'வஸுதேவரின் புதல்வர்' என்றும் ஆச்சார்யாள் உரை அளித்திருந்தார்.

710. ஸர்வாஸுநிலயாய நம:

ஸர்வம் ஏவாஸவ: அனைத்து 'அஸு' 

ப்ராணா (அஸு என்னும்) ப்ராணன் 

ஜீவாத்மகே ஜீவாத்மா வடிவில் 

யஸ்மின்னாஶ்ரயே நிலீயந்தே எவரிடம் லயமடைந்து உறைவதால்

ஸர்வாஸுநிலய: எனவே, பகவான் 'ஸர்வாஸுநிலய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

அனைத்து ப்ராணன்களும் ஜீவாத்மா ஸ்வரூபமான பகவானிடத்தே லயமடைந்து உறைவதால் அவர் 'ஸர்வாஸுநிலய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

711. அநலாய நம:

அலம் பர்யாப்தி: 'அலம்' அதாவது முடிவு (எல்லை) 

ஶக்திஸம்பதாம் (பகவானின்) ஆற்றல் மற்றும் செல்வத்திற்கு 

நாஸ்ய வித்யத தெரிவதில்லை 

இதி அனல: எனவே பகவான் 'அனல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் ஆற்றல் மற்றும் செல்வத்திற்கு எல்லைநிலமே இல்லை. எனவே அவர் 'அனல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

712. தர்ப்பக்னே நம:

தர்மவிருத்தே அறத்திற்கு புறம்பான 

பதி வழியில் 

திஶ்டதாம் இருப்போரின் (நடப்போரின்) 

தர்ப்பம் செருக்கை (புகழை) 

ஹந்தீதி அழிக்கிறார் 

தர்ப்பஹா எனவே பகவான் 'தர்ப்பஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அறத்திற்குப் புறம்பான வழியில் நடப்போரின் செருக்கை (புகழை) அழிக்கிறார். எனவே அவர் 'தர்ப்பஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

713. தர்ப்பதாய நம:

தர்மவர்த்மனி அறவழியில் 

வர்த்தமானானாம் வழுவாது நடப்போருக்கு 

தர்ப்பம் கர்வம் அல்லது பெருமையை 

ததாதீதி அளிக்கிறார் 

தர்ப்பத: எனவே பகவான் 'தர்ப்பத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறவழியில் வழுவாது நடப்போருக்கு பெருமையை அளிக்கிறார். எனவே பகவான் 'தர்ப்பத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

714. த்ருப்தாய நம:

ஸ்வாத்மாம்ருதரஸ (தனது) ஆத்மானுபவம் என்னும் அமுத ரசத்தை 

ஆஸ்வாதநாத் சுவைத்து (அனுபவித்து)  

நித்ய என்றும் 

ப்ரமுதிதோ இன்பமடைவதால் 

த்ருப்த: பகவான் 'த்ருப்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் என்றும் தனது ஆத்மானுபவம் எனும் அமுத ரசத்தை சுவைத்து (அனுபவித்து), அதனாலேயே இன்பமடைகிறார். எனவே அவர் 'த்ருப்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

715. துர்த்தராய நம:

ந ஶக்யா அறிய இயலாது 

தாரணா மனதை ஒருமுகப்படுத்துவதால் 

யஸ்ய ப்ரணிதானாதிஶு த்யானம் முதலியவற்றால் 

ஸர்வோபாதி விநிர்முக்தத்வாத் அனைத்து உபாதிகளுக்கும் (அதாவது வரைமுறைகள்) அப்பாற்பட்டு இருப்பதால் 

ததாபி ஆயினும் 

தத்ப்ரஸாதத: அவருடைய கருணையால் 

கைஸ்சித் எவரேனும் ஒருவர் 

து:கேன மிகவும் சிரமப்பட்டு 

தார்யதே ஹ்ருதயே தங்கள் மனதில் (இதயத்தில்) 

ஜன்மாந்தரஸஹஸ்ரேஶு  ஆயிரமாயிரம் பிறவிகள் 

பாவனாயோகாத் ஆழ்ந்த த்யானத்தால் 

தஸ்மாத் துர்த்தர: எனவே பகவான் 'துர்த்தர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எந்த ஒரு உபாதியாலும் வரையறுக்க முடியாதவர் (அத்தகைய வரைமுறைகளுக்கு அப்பாற்பட்டவர்). எனவே அவரை மனதை ஒருமுகப்படுத்தும் த்யானம் முதலியவற்றால் எளிதில் அறிந்து கொள்ள இயலாது (மனதில் எளிதில் அவரை நிலைநிறுத்திவிட முடியாது). ஆயினும், ஆயிரமாயிரம் பிறவிகளில் புரியும் த்யானம் முதலிய முயற்சிகளால், பகவானின் அருளால் எவரேனும் ஒருவர் அவரை மிகுந்த சிரமங்களுக்குப் பிறந்து தங்கள் இதயத்தில் அறிய (தியானிக்க) இயலும். இவ்வாறு மிகுந்த கடினத்துடன் அறிய கூடியவர் ஆதலால் பகவான் 'துர்த்தர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

க்லேஶோSதிகதரஸ்தேஶாம் அவ்யக்தாஸக்தசேதஸாம் |

அவ்யக்தா ஹி கதிர்து:கம் தேஹவத்பிரவாப்யதே || (ஸ்ரீமத் பகவத்கீதை 12.5)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: ஆனால், 'அவ்யக்தத்தில்' மனம் ஈடுபட்டோர்க்குத் தொல்லையதிகம். உடம்பெடுத்தோர் 'அவ்யக்த' நெறியெய்துதல் மிகவும் கஷ்டம்.

முன்பு 266வது திருநாமத்தில் 'துர்த்தர:' என்ற திருநாமத்திற்கு, அனைத்தையும் தாங்கும் பூமி முதலியவற்றை எளிதில் தாங்குகிறார் என்று உரை ஆச்சார்யாள் அளித்திருந்தார். அங்கே, இரண்டாவது உரையாக 'மனதில் தாங்குவதற்கு அரியவர்' என்று சூசகமாக கூறிய ஆச்சார்யாள், அதையே இந்த உரையில் விரிவாக உரைத்துள்ளார்.

716. அபராஜிதாய நம:

இல்லை 

ஆந்தரை: உள் எதிரிகளான 

ராகாதிபிர் விருப்பு, வெறுப்பு போன்ற 

பாஹ்யைரபி புற எதிரிகளான 

தானவாதிபி: அஸுரர் போன்ற 

ஶத்ரூபி: எதிரிகளால் 

பராஜித தோற்கடிப்படுவது 

இதி அபராஜித: எனவே, பகவான் 'அபராஜித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் விருப்பு, வெறுப்பு போன்ற உள் எதிரிகளாலும், அஸுரர்கள் போன்ற புற எதிரிகளாலும் வெல்ல இயலாதவர் (தோற்கடிக்கப் படுவதில்லை). எனவே அவர் 'அபராஜித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 


ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்!!!

ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2023

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 222

75. ஸத்கதி: ஸத்க்ருதி: ஸத்தா ஸத்பூதி: ஸத்பராயண: |

ஶூரஸேனோ யதுஶ்ரேஶ்ட: ஸன்னிவாஸ: ஸுயாமுன: || 

இந்த எழுபத்தைந்தாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

699. ஸத்கதி:, 700. ஸத்க்ருதி:, 701. ஸத்தா, 702. ஸத்பூதி:, 703. ஸத்பராயண: |

704. ஶூரஸேன:, 705. யதுஶ்ரேஶ்ட:, 706. ஸன்னிவாஸ:, 707. ஸுயாமுன: ||

699. ஸத்கதயே நம:

அஸ்தி ப்ரஹமேதி சேத்வேத ஸந்தமேனம் ததோ விது: | (தைத்ரீய உபநிஶத் 2.6)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ப்ரஹ்மம் இருப்பதாக ஏற்றுக்கொள்பவனை மேலோனாகக் கருதுகிறார்கள்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ப்ரஹ்மாஸ்தீதி ப்ரஹ்மம் இருக்கிறது என்று ஏற்றுக்கொள்பவர் 

யே விதுஸ்தே ஸந்த: மேலானோராக அறியப்படுகிறார்கள் 

தை: அவர்களால் 

ப்ராப்யத இதி அடையப்படும் இலக்காக இருப்பதால் 

ஸத்கதி: பகவான் 'ஸத்கதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரஹ்மம் உண்டு என்று ஏற்றுக்கொள்ளும் மேலானவர்கள் சென்றடையும் இலக்காக இருப்பதால் பகவான் 'ஸத்கதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஸதீ கதிர்வ்ருத்தி: அவரது 'கதி' அதாவது வளர்ச்சி (வளர்தல்) 

ஸமுத்க்ருஶ்டா மிகச்சிறந்ததாகும் 

அஸ்யேதி வா ஸத்கதி: எனவே, பகவான் 'ஸத்கதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவானின் வளர்ச்சி (கதி) மிகச்சிறந்தது. எனவே அவர் 'ஸத்கதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

700. ஸத்க்ருதயே நம:

ஸதீ க்ருதி: நற்கர்மம் (சிறந்தவை) 

ஜகத்ரக்ஷணலக்ஷணா இந்த ப்ரபஞ்சத்தை படைத்தல், காத்தல் முதலான பகவானின் செயல்கள் 

அஸ்ய யஸ்மாத்தேன ஸத்க்ருதி: எனவே பகவான் 'ஸத்க்ருதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தை படைத்தல், காத்தல் முதலான பகவானின் செயல்கள் மிகச்சிறந்தவை. எனவே அவர் 'ஸத்க்ருதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி நாம்னாம் ஸப்தமம் ஶதம் விவ்ருதம் | இத்துடன் (ஸத்க்ருதி: என்னும் இந்த திருநாமம் வரையில்) எழுநூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.

701. ஸத்தாயை நம:

ஸஜாதீய ஒரே வகையை சேர்ந்த பொருட்களுக்குள் 

விஜாதீய வெவ்வேறு பொருட்களின் இடையே 

ஸ்வகதபேத வேறுபாடுகள் 

ரஹிதா அற்ற 

அனுபூதி: அனுபவத்திற்கு 

ஸத்தா 'ஸத்தா' என்று பெயர். பகவான் எவ்வித வேறுபாடுகளும் அற்றவராக இருப்பதால் அவர் 'ஸத்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மல்லிகை, செம்பருத்தி போன்றவை மலர்கள் என்ற ஒரே வகையைச் சேர்ந்தாலும் அவற்றுக்குள் உருவம், நிறம், மணம் முதலிய வேறுபாடுகள் உள்ளன. இவை ஸஜாதீய (ஒரே வகையை சேர்ந்த பொருட்களுக்குள்) வேறுபாடுகள் என்று அழைக்கப்படும். பூக்கள், புத்தகங்கள் முதலிய பொருட்களின் இடையே உள்ள உருவம் முதலான வேறுபாடுகள் விஜாதீய வேறுபாடுகள் என்று அழைக்கப்படும். பகவான் இவ்வாறு எந்தவித வேறுபாடுகளும் அற்றவர் (ஏனெனில் அனைத்தும் பரப்ரஹ்மத்தின் வடிவங்களே). இவ்வாறு வேறுபாடுகள் அற்ற அனுபவத்தை 'ஸத்தா' என்று அழைப்பர். எனவே, இவ்வாறு வேறுபாடுகள் அற்ற அனுபவத்தை தனது இயற்கையாக கொண்டவராதலால் பகவான் 'ஸத்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஏகமேவாத்விதீயம்' (சாந்தோக்ய உபநிஶத் 6.2.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்தப் பரப்ரஹ்மம்) ஒன்றே. இரண்டாவது தத்துவம் என்று வேறொன்றில்லை (அத்விதீய).

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

702. ஸத்பூதயே நம:

ஸன்னேவ 'ஸத்' அதாவது உண்மையில் இருக்கக்கூடியதான 

பரமாத்மா பரம்பொருள் ஒன்றே 

சிதாத்மக: ஞானமயமான 

அபாதாத் (எவற்றாலும்) தடைபடாத 

பாஸமானத்வாச்ச ஒளிவீசும் 

ஸத்பூதி: 'ஸத்பூதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் 

நான்ய: வேறொருவருமில்லை (வேறெதுவுமில்லை).

என்றும் இருக்கக்கூடியதும், ஞானமயமாக தடையின்றி ஒளிவீசுபவரான பரமாத்மா (பரம்பொருளான நாரயணன்) ஒருவரே 'ஸத்பூதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். வேறொருவருமில்லை (வேறெதுவுமில்லை).

ப்ரதீதேர்பாத்யமானத்வாச்ச ஸன்னாப்யஸத் | ஶ்ரௌதோ யௌக்திகோ வா பாத: ப்ரபஞ்சஸ்ய விவக்ஷித: |

ஶ்ருதி (வேத) வாக்கியங்கள் மற்றும் உள்ள ப்ரமாணங்களினால் நாம் அறிவது என்னவென்றால், இந்தப் ப்ரபஞ்சத்தில் உள்ள (பரப்பொருளைத் தவிர்த்து) மற்றவை அனைத்துமே உண்மையில் நிலையற்றவை.

703. ஸத்பராயணாய நம:

ஸதாம் ஸத்புருஶர்கள் 

தத்வவிதாம் தத்துவத்தை (உண்மைப் பொருளை) உணர்ந்த 

பரம் மேன்மையானதும் 

ப்ரக்ருஶ்டம் மிகச்சிறந்த 

அயனம் இதி அடையக்கூடிய இடமாக (பகவான்) இருப்பதால் 

ஸத்பராயணம் பகவான் 'ஸத்பராயணம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தத்துவத்தை (அதாவது உண்மைப் பொருளை) உணர்ந்த ஸத்புருஶர்கள் சென்றடையக்கூடிய மேன்மையான, மிகச்சிறந்த இடமாக இருப்பதால் பகவான் 'ஸத்பராயணம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அதாவது, பகவானிடம் ஒன்றுவதே முக்தி. 

704. ஶூரஸேனாய நம:

ஹனூமத்ப்ரமுகா: ஹனுமான் முதலான 

ஸைனிகா: படைவீரர்கள் (கொண்ட) 

ஶௌர்யஶாலினோ ஸூரர்களை 

யஸ்யாம் ஸேனாயாம் ஸா அத்தகைய படை 

ஶூரஸேனா 'ஶூரஸேனா' அதாவது ஸூரர்களைக் கொண்ட படை என்று அழைக்கப்படுகிறது 

யஸ்ய ஸ ஶூரஸேன: அத்தகைய படையை உடைய பகவான் (ஸ்ரீராமபிரான்) ஶூரஸேன: என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஹனுமான் முதலான ஸூரர்களைக் படைவீரர்களாகக் கொண்ட படை (சேனை) ஶூரஸேனை என்று அழைக்கப்படும். அத்தகைய படையை உடையவராதலால் பகவான் (ஸ்ரீராமபிரான்) 'ஶூரஸேன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

705. யதுஶ்ரேஶ்டாய நம:

யதூனாம் யாதவர்களுக்குள் 

ப்ரதாநத்வாத் முதன்மையானவராதலால் 

யதுஶ்ரேஶ்ட: பகவான் 'யதுஶ்ரேஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யதுகளுக்குள் (யாதவர்களுக்குள்) முதன்மையானவர் - யாதவர்களின் தலைவர். ஆதலால், பகவான் 'யதுஶ்ரேஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

706. ஸன்னிவாஸாய நம:

ஸதாம் 'ஸத்' அதாவது 

விதுஶாம் கற்றோரின் 

ஆஶ்ரய: புகலிடமாக இருப்பதால் 

ஸன்னிவாஸ: பகவான் 'ஸன்னிவாஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஸத்' அதாவது கற்றோரின் புகலிடமாக இருப்பதால் பகவான் 'ஸன்னிவாஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

707. ஸுயாமுனாய நம:

ஶோபனா அழகானது 

யாமுனா யமுனாஸம்பந்தினோ 'யாமுனா' அதாவது யமுனா நதிக்கரை வாசிகளான 

தேவகி வஸுதேவ நந்த யஶோதா பலபத்ர ஸுபத்ராதய: தேவகி, வஸுதேவர், நந்தகோபர், யஶோதா, பலராமன் மற்றும் ஸுபத்ரா ஆகியோரால் 

பரிவேஶ்டாரோSஸ்யேதி சூழப்பட்டு இருந்ததால் 

ஸுயாமுன: பகவான் 'ஸுயாமுன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் (தனது க்ருஶ்ணாவதாரத்தில்) யமுனா நதிக்கரை வாசிகளான தேவகி, வஸுதேவர், நந்தகோபர், யஶோதா, பலராமன் மற்றும் ஸுபத்ரா ஆகியோரால் சூழப்பட்டு, மிகவும் அழகாக விளங்கினார்.  எனவே அவர் 'ஸுயாமுன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கோபவேஶதரா பகவான் இடையனாக இருந்தபொழுது 

யாமுனா: யமுனை நதிக்கரையில் 

பரிவேஶ்டார: சூழப்பட்டிருந்தார் 

பத்மாஸநாதய: தாமரை இருக்கை (பத்மாஸனம்) முதலான 

ஶோபனா அழகாக 

அஸ்யேதி ஸுயாமுன: எனவே, பகவான் 'ஸுயாமுன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, (தனது க்ருஶ்ணாவதாரத்தில்) பகவான் இடையனாக இருந்தபொழுது, யமுனா நதிக்கரையில்  தாமரை இருக்கை (பத்மாஸனம்) முதலானவற்றால் சூழப்பட்டிருந்தார். எனவே, பகவான் 'ஸுயாமுன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்!!!