17. உபேந்த்ரோ வாமன: ப்ராம்ஶுரமோக: ஶுசிரூர்ஜித: |
அதீந்த்ர: ஸங்க்ரஹ: ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம: ||
இந்த பதினேழாம் ஸ்லோகத்தில் பதினொன்று (11) திருநாமங்கள் உள்ளன:
151. உபேந்த்ர:, 152. வாமன:, 153. ப்ராம்ஶு:, 154. அமோக:, 155. ஶுசி:,
156. ஊர்ஜித: |
157. அதீந்த்ர:, 158. ஸங்க்ரஹ:,
159. ஸர்க:, 160. த்ருதாத்மா, 161. நியம:, 162. யம: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
151. ஓம் உபேந்த்ராய நம:
இந்த்ரம்
இந்திரனுக்கு
உபகதோSநுஜத்வேனேதி
தம்பியாக
அவதரித்தார் (இந்திரனுக்குத்
தம்பி ஒருவர் கிடைத்தார்)
உபேந்த்ர:
எனவே, பகவான் 'உபேந்த்ரன்'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்திரனுக்குத்
தம்பியாக அவதரித்ததால் பகவான் 'உபேந்திரன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்திரன்
அதிதிக்கும், காஸ்யப முனிவருக்கும் பிறந்தவன். அவனது ஸ்வர்கலோகம்
மஹாபலியால் அபகரிக்கப் பட்டது. அதிதியின் வேண்டுதலின்படி பகவான் அதிதிக்கும், காஸ்யப முனிவருக்கும்
மகனாக, வாமனனாகத் தோன்றினார். எனவே, அவர் இந்திரனின் தம்பியாவார்.
உபகதோSநுஜத்வேனேதி = உபகத: (தோன்றினார்) + அனுஜத்வேனேதி (தம்பியாக)
யத்வா
அல்லது
உபரி உயர்ந்தவர் (மேம்பட்டவர்)
இந்த்ர: இந்திரனைக் காட்டிலும்
உபேந்த்ர:
எனவே, பகவான் 'உபேந்த்ரன்'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, இந்திரனைக்
காட்டிலும் உயர்ந்தவராக (மேம்பட்டவராக) இருப்பதால், பகவான் 'உபேந்திரன்'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மமோபரி
யதேந்த்ரஸ்த்வம் ஸ்தாபிதோ கோபிரீஶ்வர: |
உபேந்த்ர
இதி க்ருஷ்ண த்வாம் காஸ்யந்தி புவி தேவதா: || (ஹரிவம்ஶம்
2.19.46)
இந்த
ஆநிரைகள் (பசுக்கள்) தங்களை எனக்கு மேலே, எனக்கும் தலைவராக ஆக்கியுள்ளன. எனவே, தேவர்கள் இனி தங்களை உபேந்திரன் என்ற திருநாமத்தால் உங்களைப் புகழ்ந்து
பாடுவார்கள்.
இதி ஹரிவம்ஶே – இவ்வாறு ஹரிவம்ஸத்தில்
கூறப்பட்டுள்ளது.
152. ஓம் வாமனாய நம:
பலிம்
மஹாபலியிடமிருந்து
வாமனரூபேண
வாமனராக
யாசிதவான் (மூன்றடி மண்) தானமாக யாசித்ததால்
இதி வாமன: பகவான்
'வாமனர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான், குள்ள வடிவம்
கொண்டவராய் (வாமனராய்) அவதரித்து மஹாபலியிடமிருந்து
மூன்றடி மண் யாசித்ததால், அவர் 'வாமனர்'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மஹாபலி
ப்ரஹ்லாதனின் பேரன். அவன் வேள்விகள் மூலம் பெற்ற ஆயுதங்களினாலும், தனது தான தர்மத்தின்
நற்பலன்களினாலும் அனைவரையும் வென்றான். தேவேந்திரனையும்
தோற்கடித்து ஸ்வர்கலோகத்தையும் கைப்பற்றினான். தேவர்களின் தாயான
அதிதியின் வேண்டுதலை ஏற்ற பகவான், அதிதிக்கும், காஸ்யப முனிவருக்கும் மகனாக, வாமனர் என்ற பெயருடன், குள்ள வடிவினராகத்
தோன்றினார். நரஸிம்ஹ அவதாரத்தில் தான் ப்ரஹ்லாதனுக்கு அவனது வம்சத்தில் எவரையும்
இனி கொல்ல மாட்டேன் வாக்களித்திருந்தபடியால், மஹாபலியிடம் மூன்றடி மண்
யாசித்து, ஏழுலகங்களையும் அளந்து தனதாக்கினார். ஸ்வர்கத்தை மீண்டும்
இந்திரனுக்கு அளித்தார். வந்திருப்பது பகவான் என்று தெரிந்தும், இல்லை என்று சொல்லாமல்
தானம் அளித்த மஹாபலியை பாதாள உலகிற்கு அரசனாக நியமித்து, அவனுக்குக் காவலாக தானே
இருந்தும் வருகிறார். மேலும், மஹாபலியே அடுத்த மன்வந்தரத்தில் இந்திரனாக நியமிக்கப்படுவான் என்ற
வரத்தையும் அளித்தார். இந்த சரித்திரம் அனைத்தும் ஸ்ரீமத் பாகவதத்தில் (எட்டாவது ஸ்கந்தம்) விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
ஸம்பஜனீய
நன்றாகப்
போற்றத்தகுந்தவர்
இதி
வா வாமன: எனவே, பகவான் 'வாமனர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானே அனைத்து
போற்றுதலுக்கும் உரியவர். அவ்வாறு, நன்கு போற்றத் தகுந்தவராதலால் பகவான் 'வாமனர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மத்யே
வாமனமாஸீனம் விஶ்வேதேவா உபாஸதே | (கதோபநிஶத் 2.2.3)
கதோபநிஶத்தில்
கூறப்பட்டுள்ளது:
விஶ்வேதேவர்கள்
(இந்த்ரியங்கள்)
ஹ்ருதயத்தில் இருக்கின்ற வணங்கத்தக்கவரை (பரப்ரஹ்மத்தை,
ஆத்மாவை) வழிபடுகின்றன.
இதி
மந்த்ரவர்ணாத் – இந்த உபநிஷத மந்திரத்தின் படி (வாமனர் என்றால் வணங்கத்தக்கவர், போற்றத்தக்கவர் என்று பொருளுரைக்கப்பட்டுள்ளது).
151. உபேந்த்ர:, 152. வாமன:, 153. ப்ராம்ஶு:, 154. அமோக:, 155. ஶுசி:,
156. ஊர்ஜித: |
157. அதீந்த்ர:, 158. ஸங்க்ரஹ:,
159. ஸர்க:, 160. த்ருதாத்மா, 161. நியம:, 162. யம: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
151. ஓம் உபேந்த்ராய நம:
இந்த்ரம்
இந்திரனுக்கு
உபகதோSநுஜத்வேனேதி
தம்பியாக
அவதரித்தார் (இந்திரனுக்குத்
தம்பி ஒருவர் கிடைத்தார்)
உபேந்த்ர:
எனவே, பகவான் 'உபேந்த்ரன்'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்திரனுக்குத்
தம்பியாக அவதரித்ததால் பகவான் 'உபேந்திரன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்திரன்
அதிதிக்கும், காஸ்யப முனிவருக்கும் பிறந்தவன். அவனது ஸ்வர்கலோகம்
மஹாபலியால் அபகரிக்கப் பட்டது. அதிதியின் வேண்டுதலின்படி பகவான் அதிதிக்கும், காஸ்யப முனிவருக்கும்
மகனாக, வாமனனாகத் தோன்றினார். எனவே, அவர் இந்திரனின் தம்பியாவார்.
உபகதோSநுஜத்வேனேதி = உபகத: (தோன்றினார்) + அனுஜத்வேனேதி (தம்பியாக)
யத்வா
அல்லது
உபரி உயர்ந்தவர் (மேம்பட்டவர்)
இந்த்ர: இந்திரனைக் காட்டிலும்
உபேந்த்ர:
எனவே, பகவான் 'உபேந்த்ரன்'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, இந்திரனைக்
காட்டிலும் உயர்ந்தவராக (மேம்பட்டவராக) இருப்பதால், பகவான் 'உபேந்திரன்'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மமோபரி
யதேந்த்ரஸ்த்வம் ஸ்தாபிதோ கோபிரீஶ்வர: |
உபேந்த்ர
இதி க்ருஷ்ண த்வாம் காஸ்யந்தி புவி தேவதா: || (ஹரிவம்ஶம்
2.19.46)
இந்த
ஆநிரைகள் (பசுக்கள்) தங்களை எனக்கு மேலே, எனக்கும் தலைவராக ஆக்கியுள்ளன. எனவே, தேவர்கள் இனி தங்களை உபேந்திரன் என்ற திருநாமத்தால் உங்களைப் புகழ்ந்து
பாடுவார்கள்.
இதி ஹரிவம்ஶே – இவ்வாறு ஹரிவம்ஸத்தில்
கூறப்பட்டுள்ளது.
152. ஓம் வாமனாய நம:
பலிம்
மஹாபலியிடமிருந்து
வாமனரூபேண
வாமனராக
யாசிதவான் (மூன்றடி மண்) தானமாக யாசித்ததால்
இதி வாமன: பகவான்
'வாமனர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான், குள்ள வடிவம்
கொண்டவராய் (வாமனராய்) அவதரித்து மஹாபலியிடமிருந்து
மூன்றடி மண் யாசித்ததால், அவர் 'வாமனர்'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மஹாபலி
ப்ரஹ்லாதனின் பேரன். அவன் வேள்விகள் மூலம் பெற்ற ஆயுதங்களினாலும், தனது தான தர்மத்தின்
நற்பலன்களினாலும் அனைவரையும் வென்றான். தேவேந்திரனையும்
தோற்கடித்து ஸ்வர்கலோகத்தையும் கைப்பற்றினான். தேவர்களின் தாயான
அதிதியின் வேண்டுதலை ஏற்ற பகவான், அதிதிக்கும், காஸ்யப முனிவருக்கும் மகனாக, வாமனர் என்ற பெயருடன், குள்ள வடிவினராகத்
தோன்றினார். நரஸிம்ஹ அவதாரத்தில் தான் ப்ரஹ்லாதனுக்கு அவனது வம்சத்தில் எவரையும்
இனி கொல்ல மாட்டேன் வாக்களித்திருந்தபடியால், மஹாபலியிடம் மூன்றடி மண்
யாசித்து, ஏழுலகங்களையும் அளந்து தனதாக்கினார். ஸ்வர்கத்தை மீண்டும்
இந்திரனுக்கு அளித்தார். வந்திருப்பது பகவான் என்று தெரிந்தும், இல்லை என்று சொல்லாமல்
தானம் அளித்த மஹாபலியை பாதாள உலகிற்கு அரசனாக நியமித்து, அவனுக்குக் காவலாக தானே
இருந்தும் வருகிறார். மேலும், மஹாபலியே அடுத்த மன்வந்தரத்தில் இந்திரனாக நியமிக்கப்படுவான் என்ற
வரத்தையும் அளித்தார். இந்த சரித்திரம் அனைத்தும் ஸ்ரீமத் பாகவதத்தில் (எட்டாவது ஸ்கந்தம்) விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
ஸம்பஜனீய
நன்றாகப்
போற்றத்தகுந்தவர்
இதி
வா வாமன: எனவே, பகவான் 'வாமனர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானே அனைத்து
போற்றுதலுக்கும் உரியவர். அவ்வாறு, நன்கு போற்றத் தகுந்தவராதலால் பகவான் 'வாமனர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மத்யே
வாமனமாஸீனம் விஶ்வேதேவா உபாஸதே | (கதோபநிஶத் 2.2.3)
கதோபநிஶத்தில்
கூறப்பட்டுள்ளது:
விஶ்வேதேவர்கள்
(இந்த்ரியங்கள்)
ஹ்ருதயத்தில் இருக்கின்ற வணங்கத்தக்கவரை (பரப்ரஹ்மத்தை,
ஆத்மாவை) வழிபடுகின்றன.
இதி
மந்த்ரவர்ணாத் – இந்த உபநிஷத மந்திரத்தின் படி (வாமனர் என்றால் வணங்கத்தக்கவர், போற்றத்தக்கவர் என்று பொருளுரைக்கப்பட்டுள்ளது).