ஞாயிறு, அக்டோபர் 28, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 90


10.   ஸுரேஶ: ஶரணம் ஶர்ம விஶ்வரேதா: ப்ரஜாபவ: |

அஹ: ஸம்வத்ஸரோ வ்யால: ப்ரத்யய: ஸர்வதர்ஶன: ||


இந்த பத்தாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

85. ஸுரேஶ:, 86. ஶரணம், 87. ஶர்ம, 88. விஶ்வரேதா:, 89. ப்ரஜாபவ: |
90. அஹ:, 91. ஸம்வத்ஸர:, 92. வ்யால:, 93. ப்ரத்யய:, 94. ஸர்வதர்ஶன: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

85. ஓம் ஸுரேஶாய நம:
ஸுரானாம் தேவானாம் ஸுரர்கள் என்றால் தேவர்கள் 
ஈஶ: அவர்களை ஆள்பவர் 
ஸுரேஶ: பகவான் ‘ஸுரேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸுரர்கள் என்றழைக்கப்படும் தேவர்களையும் ஆள்பவராக இருப்பதால் பகவான் ‘ஸுரேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸூபபதோ வா (நன்மை என்ற பொருள்படும்) 'ஸு' என்ற பதத்தின் பின்னே 
ராதாது: (வழங்குதல் என்ற பொருள்படும்) 'ரா' என்ற விகுதி சேர்ந்து 
ஷோபனதாத்ருணாம் நன்மைகளைத் தருபவர்களுள் 
ஈஶ: தலைசிறந்தவர் 
ஸுரேஶ: (ஆதலால்) பகவான் ‘ஸுரேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, நன்மைகளை வாரி வழங்குபவர்களுக்குள் தலைசிறந்தவராக இருப்பதால் பகவான் ‘ஸுரேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

86. ஓம் ஶரணாய நம:
ஆர்த்தானாம் துன்புற்றிருப்போரின் 
ஆர்த்தி ஹரணத்வாத் துன்பங்களைத் தீர்ப்பதால் 
ஶரணம் பகவான் ‘ஶரணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

துன்புற்றிருப்போரின் துன்பங்களைத் தீர்ப்பதால் பகவான் ஶரணம்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இங்கு ஆதிசங்கர பகவத்பாதர் 'பக்தர்களின் துயர்களைக் களைபவர்' என்று கூறாது 'துன்புற்றோரின் துன்பங்களைக் களைபவர் என்று கூறியுள்ளார்'. இதன் தாத்பர்யம் என்னவெனில், பக்தர்களோ, அல்லவோ, பகவான் அனைவரது துயரங்களையும் களைகிறார். அனைவரின் துயரங்களையும் போக்கும் அவர், தன் அடியவர்களுக்கு என்னவெல்லாம் செய்வார் என்று நாமே சற்று சிந்தித்துப் பார்த்து, பகவானிடம் தூய பக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

சனி, அக்டோபர் 27, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 89

9. ஈஶ்வரோ விக்ரமீ தன்வீ மேதாவீ விக்ரம: க்ரம: |

அனுத்தமோ துராதர்ஶ: க்ருதஞ்ய: க்ருதிராத்மவான் ||

இந்த ஒன்பதாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

74. ஈஶ்வர:, 75. விக்ரமீ, 76. தன்வீ, 77. மேதாவீ, 78. விக்ரம:, 79. க்ரம: |
80. அனுத்தம:, 81. துராதர்ஶ:, 82. க்ருதஞ்ய:, 83. க்ருதி:, 84. ஆத்மவான் ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும் (சுருக்கம்):

74ஓம் ஈஶ்வராய நம:
ஸர்வஶக்திமத்தயா ஈஶ்வர:
பகவானின் சக்திகளுக்கு எல்லைகளே கிடையாது. அவ்வாறு, மிகுந்த சக்தி படைத்தவராக இருப்பதால் பகவான் ‘ஈஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

75ஓம் விக்ரமிணே நம:
விக்ரம: ஸௌர்யம் தத்யோகாத் விக்ரமீ 
மிகுந்த சூரத்தனம் படைத்தவராக இருப்பதால் பகவான் ‘விக்ரமீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

76ஓம் தன்வினே நம:
தனுரஸ்யாஸ்தீதி தன்வீ   
(ஶார்ங்கம், அல்லது இராமாவதாரத்தில் கோதண்டம்) என்னும் வில்லை (தனுஸ் என்றால் வில் என்று பொருள், அதை) ஏந்தி இருப்பதால் பகவான் ‘தன்வீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

77ஓம் மேதாவினே நம:
மேதா பஹுக்ரந்ததாரணஸாமர்த்யம் ஸா யஸ்யாஸ்தி ஸ மேதாவீ 
பல நூல்களைக் கற்று அவற்றின் உண்மைப் பொருளை அறியக்கூடிய வல்லமைவல்லமை உள்ளவராதலால் பகவான் ‘மேதாவீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

78ஓம் விக்ரமாய நம:
விசக்ரமே ஜகத் விஶ்வம் தேன விக்ரம:
ஏழு உலகங்களையும் தாவி அளந்ததால் பகவான் ‘விக்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வினா கருடேன பக்ஷினா க்ரமாத்வா விக்ரம: 
அல்லது, வினா என்னும் கருடன் மீதேறி வருவதால் பகவான் ‘விக்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

79ஓம் க்ரமாய நம:
க்ரமனாத் க்ரமஹேதுத்வாத் வா க்ரம:
அனைத்து இடங்களிலும் செல்வதாலும்அனைவரும் செல்வதற்கு(இயங்குவதற்குதுணை புரிவதாலும்பகவான் ‘க்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

80ஓம் அனுத்தமாய நம:
அவித்யமான உத்தமோ  யஸ்மாத் அனுத்தம:
அவரை விட மேலானவர் எவரும் இல்லைஎனவேபகவான் ‘அனுத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

81ஓம் துராதர்ஶாய நம:
தைத்யாதிபிர்தர்ஶயிதும் ந க்யத இதி துராதர்ஶ:
தர்ஶ என்றால் அடக்குதல்துராதர்ஶ என்றால் அடக்கமுடியாதவர் என்று பொருள்பகவானை அசுரர் முதலிய தீயோரால் அடக்க இயலாதுஎனவேஅவர் 'துராதர்ஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

82ஓம் க்ருதக்ஞாய நம:
ப்ராணினாம் புண்யாபுண்யாத்மகம் கர்ம க்ருதம் ஜானாதீதி க்ருதக்ஞய 
பகவான் அனைத்து ஜீவராசிகளின் நல்ல மற்றும் தீவினைகளை அனைத்தையும் உள்ளபடி அறிகிறார்எனவேபகவான் ‘க்ருதக்ஞய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பத்ரபுஶ்பாத்யல்பமபி ப்ரயச்சதாம் மோக்ஷம் ததாதீதி வா க்ருதக்ஞய
(துளசி முதலியஇலைபூக்கள் போன்ற எளிய பொருட்களை தனக்கு பக்தியுடன் அர்ப்பணிப்போருக்கு (அதற்கு ப்ரதியாகமுக்தியையே தந்தருள்வதால் பகவான் ‘க்ருதக்ஞய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

83ஓம் க்ருதயே நம:
புருஶப்ரயத்னக்ருதி: க்ரியா வாஸர்வாத்மகத்வாத் தத் ஆதாரதயா வா லக்ஷ்யதே க்ருத்யேதி வா க்ருதி: 
அனைவராலும் செய்யப்படும் முயற்சிகளுக்கு 'க்ருதிஎன்று பொருள்.அனைவரின் உள்ளுறை ஆத்மாவாகவும் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதாரமாகவும் இருந்து அனைவரையும் செயல் புரியத் தூண்டுவதால் உண்மையில் 'க்ருதிஎன்ற இந்த சொல் பகவானையே குறிக்கிறதுஎனவேபகவான் 'க்ருதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

84ஓம் ஆத்மவதே நம:
ஸ்வ மஹிமப்ரதிஶ்டிதத்வாத் ஆத்மவான்
பகவான் எப்பொழுதும் தன்னுடைய மஹிமையிலேயே நிலைப்பெற்றிருப்பதால் அவர் 'ஆத்மவான்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வெள்ளி, அக்டோபர் 19, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 88

9. ஈஶ்வரோ விக்ரமீ தன்வீ மேதாவீ விக்ரம: க்ரம: |

அனுத்தமோ துராதர்ஶ: க்ருதஞ்ய: க்ருதிராத்மவான் ||

இந்த ஒன்பதாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

74. ஈஶ்வர:, 75. விக்ரமீ, 76. தன்வீ, 77. மேதாவீ, 78. விக்ரம:, 79. க்ரம: |
80. அனுத்தம:, 81. துராதர்ஶ:, 82. க்ருதஞ்ய:, 83. க்ருதி:, 84. ஆத்மவான் ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

83. ஓம் க்ருதயே நம:
புருஶப்ரயத்ன: அனைவராலும் செய்யப்படும் முயற்சிகளுக்கு க்ருதி: 'க்ருதி' என்று பொருள் க்ரியா வா: செயல்களுக்கு ஸர்வாத்மகத்வாத் அனைவரின் உள்ளுறை ஆத்மாவாகவும் தத் ஆதாரதயா வா அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதாரமாகவும் இருப்பதால் லக்ஷ்யதே க்ருத்யேதி வா 'க்ருதி' என்றால் பகவானையே குறிக்கும் க்ருதி: பகவான் ‘க்ருதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவராலும் செய்யப்படும் முயற்சிகளுக்கு 'க்ருதி' என்று பொருள். அனைவரின் உள்ளுறை ஆத்மாவாகவும் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதாரமாகவும் இருந்து அனைவரையும் செயல் புரியத் தூண்டுவதால் உண்மையில் 'க்ருதி' என்ற இந்த சொல் பகவானையே குறிக்கிறது. எனவே, பகவான் 'க்ருதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

84. ஓம் ஆத்மவதே நம:
ஸ்வ மஹிமப்ரதிஶ்டிதத்வாத் தன்னுடைய மஹிமையிலேயே நிலைப்பெற்றிருப்பதால் ஆத்மவான் பகவான் ‘ஆத்மவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எப்பொழுதும் தன்னுடைய மஹிமையிலேயே நிலைப்பெற்றிருப்பதால் அவர் 'ஆத்மவான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஸ பகவ: கஸ்மின்ப்ரதிஶ்டித இதி ஸ்வே மஹிம்னி' (சாந்தோக்ய உபநிஶத் 7.24.1) சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
அந்த பகவான் எங்கு நிலைக்கொண்டிருக்கிறார்? அவரது மஹிமையிலேயே.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஞாயிறு, அக்டோபர் 14, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 87

9. ஈஶ்வரோ விக்ரமீ தன்வீ மேதாவீ விக்ரம: க்ரம: |

அனுத்தமோ துராதர்ஶ: க்ருதஞ்ய: க்ருதிராத்மவான் ||

இந்த ஒன்பதாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

74. ஈஶ்வர:, 75. விக்ரமீ, 76. தன்வீ, 77. மேதாவீ, 78. விக்ரம:, 79. க்ரம: |
80. அனுத்தம:, 81. துராதர்ஶ:, 82. க்ருதஞ்ய:, 83. க்ருதி:, 84. ஆத்மவான் ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

80. ஓம் அனுத்தமாய நம:
அவித்யமான அறியப்படவில்லை (காணவில்லை) உத்தமோ சிறந்தவர் யஸ்மாத் எவரைவிட : அவர் அனுத்தம: (அந்த பகவான்) ‘அனுத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரை விட மேலானவர் எவரும் இல்லை; எனவே, பகவான் ‘அனுத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
- இல்லை + உத்தம - மேலானவர் = அனுத்தம

யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித் (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 3.9)
ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
அவரை விட வேறானதோ, மேலானதோ வேறொன்றும் இல்லை.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ந த்வத்ஸமோSஸ்த்யப்யதிக: குதோன்ய: (ஸ்ரீமத் பகவத்கீதை 11.43)
ஸ்ரீமத் பகவத்கீதையில் (அர்ஜுனன் பகவான் ஸ்ரீக்ருஷ்ணரைப் பார்த்து கூறியது): உனக்கு நிகர் யாருமில்லை; எனில் உனக்கு மேல் வேறு யாவர்?

இதி ஸ்ம்ருதேஶ் | இவ்வாறு (ஸ்ரீமத் பகவத்கீதை முதலிய) ஸ்ம்ருதிகளிலும் கூறப்பட்டுள்ளது.

81. ஓம் துராதர்ஶாய நம:
தைத்யாதிபிர்தர்ஶயிதும் அசுரர்கள் முதலிய தீயோரால் ந க்யத இதி அடக்கமுடியாதவராக இருப்பதால் துராதர்ஶ: பகவான் ‘துராதர்ஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தர்ஶ என்றால் அடக்குதல். துராதர்ஶ என்றால் அடக்கமுடியாதவர் என்று பொருள். பகவானை அசுரர் முதலிய தீயோரால் அடக்க இயலாது. எனவே, அவர் 'துராதர்ஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

82. ஓம் க்ருதக்ஞாய நம:
ப்ராணினாம் அனைத்து ஜீவராசிகளின் புண்யாபுண்யாத்மகம் கர்ம நல்ல (புண்ய) மற்றும் தீய (பாப, அபுண்ய) வினைகளை க்ருதம் செய்கின்ற ஜானாதீதி (உள்ளதை உள்ளபடி) அறிகின்றபடியால் க்ருதக்ஞய பகவான் ‘க்ருதக்ஞய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து ஜீவராசிகளின் நல்ல மற்றும் தீவினைகளை அனைத்தையும் உள்ளபடி அறிகிறார். எனவே, பகவான் ‘க்ருதக்ஞய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
க்ருத (செய்த நல், தீவினைகள்) + ஜானாதி = க்ருதக்ஞய

பத்ரபுஶ்பாத்யல்பமபி (துளசி முதலிய) இலை, பூக்கள் போன்ற எளிய பொருட்களை ப்ரயச்சதாம் (அவருக்கு) அர்ப்பணிப்போருக்கு மோக்ஷம் (அதற்கு ப்ரதியாக) முக்தியையே ததாதீதி வா தந்தருள்வதால் க்ருதக்ஞய பகவான் ‘க்ருதக்ஞய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(துளசி முதலிய) இலை, பூக்கள் போன்ற எளிய பொருட்களை தனக்கு பக்தியுடன் அர்ப்பணிப்போருக்கு (அதற்கு ப்ரதியாக) முக்தியையே தந்தருள்வதால் பகவான் ‘க்ருதக்ஞய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இங்கு க்ருதக்ஞய என்ற திருநாமத்திற்கு நன்றியுடையவர் என்று ஆதிசங்கரர் பொருள் உரைக்கிறார். எளிய பொருட்களை அவருக்கு அளித்தாலும், மிக்க நன்றியுடன் கிடைத்தற்கரிய முக்தியையே தந்தருள்கிறார் பகவான்.

சனி, அக்டோபர் 13, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 86

9. ஈஶ்வரோ விக்ரமீ தன்வீ மேதாவீ விக்ரம: க்ரம: |

அனுத்தமோ துராதர்ஶ: க்ருதஞ்ய: க்ருதிராத்மவான் ||

இந்த ஒன்பதாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

74. ஈஶ்வர:, 75. விக்ரமீ, 76. தன்வீ, 77. மேதாவீ, 78. விக்ரம:, 79. க்ரம: |
80. அனுத்தம:, 81. துராதர்ஶ:, 82. க்ருதஞ்ய:, 83. க்ருதி:, 84. ஆத்மவான் ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

77. ஓம் மேதாவினே நம:
மேதா ‘மேதா’ என்றால் பஹுக்ரந்ததாரணஸாமர்த்யம் பல நூல்களைக் கற்று அவற்றின் உண்மைப் பொருளை அறியக்கூடிய வல்லமை ஸா யஸ்யாஸ்தி ஸ பகவானிடம் இத்தகைய வல்லமை உள்ளதால் மேதாவீ பகவான் ‘மேதாவீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'அஸ்மாயாமேதாஸ்ரஜோ வினி:' (பாணினி சூத்ரம் 5.2.121)
இந்தப் பாணினி ஸுத்ரத்தின்படி மேதா என்ற சொல்லுடன் வினி என்ற விகுதி சேர்ந்து ‘மேதாவீ’ என்றாகிறது.

பல நூல்களைக் கற்று அவற்றின் உண்மைப் பொருளை அறியக்கூடிய வல்லமை வல்லமை உள்ளவராதலால் பகவான் ‘மேதாவீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

78. ஓம் விக்ரமாய நம:
விசக்ரமே தாவி (அளந்தார்) ஜகத் விஶ்வம் இந்தப் ப்ரபஞ்சத்தை (ஏழு உலகங்களையும்) தேன எனவே விக்ரம: பகவான் ‘விக்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஏழு உலகங்களையும் தாவி அளந்ததால் பகவான் ‘விக்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மஹாபலி ப்ரஹ்லாதனின் பேரன். அவன், இந்த்ரனிடமிருந்து ஸுவர்க்கத்தை அபகரிக்க, பகவான் வாமனனாய்த் தோன்றி, மஹாபலியிடம் மூன்றடி மண் யாசித்து அனைத்து உலகங்களையும் தாவி அளந்தார் என்பது பிரசித்தம். வாமனன் என்று அழைக்கப்பட்ட அவரே, தாவி அளந்தபின் த்ரிவிக்ரமன் என்று அழைக்கப்பட்டார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

வினா கருடேன பக்ஷினா வினா என்றால் கருடப் பறவையைக் குறிக்கும் க்ரமாத்வா அதன் மீதேறி வருவதால் விக்ரம: பகவான் ‘விக்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வினா என்னும் கருடன் மீதேறி வருவதால் பகவான் ‘விக்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வி(வினா) + க்ரம(க்ரமாத்வா) = விக்ரம

79. ஓம் க்ரமாய நம:
க்ரமனாத் (இங்கும், அங்கும்) நடக்கிறார், செல்கிறார் க்ரமஹேதுத்வாத் அனைத்து ஜீவராசிகளும் செல்வதற்கு (இயங்குவதற்கு) உதவி புரிகிறார் வா எனவே க்ரம: பகவான் ‘க்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

க்ராந்தே விஶ்ணும் (மனு ஸ்ம்ரிதி 12.121)
மனு ஸ்ம்ரிதியில் கூறப்பட்டுள்ளது:
விஶ்ணுவை (அவரது) இயக்கத்தினால் (அறியவும்)

அனைத்து இடங்களிலும் செல்வதாலும், அனைவரும் செல்வதற்கு (இயங்குவதற்கு) துணை புரிவதாலும், பகவான் ‘க்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.