8. ஈஶான: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஶ்ட: ஶ்ரேஶ்ட: ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸுதன: ||
இந்த எட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
64. ஈஶான:, 65. ப்ராணத:, 66. ப்ராண:, 67. ஜ்யேஷ்ட, 68.ஸ்ரேஷ்ட:, 69.ப்ரஜாபதி: |
70. ஹிரண்யகர்ப்ப:, 71. பூகர்ப்ப:, 72. மாதவ:, 73. மதுஸுதன: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள அனைத்துத் திருநாமங்களும் அவற்றின் விளக்கமும் (சுருக்கம்):
64. ஓம் ஈஶானாய நம:
ஸர்வபூத நியந்த்ருத்வாத் ஈஶான:
அனைத்து ஜீவராசிகளையும் அடக்கி ஆள்வதால், பகவான் ‘ஈஶான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
65. ஓம் ப்ராணதாய நம:
ப்ராணான் ததாதி சேஷ்ட்யதீதி ப்ராணத:
அனைத்து ஜீவராசிகளுக்கும் மூச்சுக்காற்றான ப்ராணனை தந்து, அவர்களை நடமாட வைப்பதால், பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ராண + ததாதி = ப்ராணத:
யத்வா, ப்ராணான் காலாத்மனா த்யதி கண்டயதீதி ப்ராணத:
அல்லது, காலத்தின் உருவில் அனைத்து ஜீவராசிகளையும் அழிப்பதால் பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ராண + த்யதி = ப்ராணத:
ப்ராணான் தீபயதி ஷோதயதீதி வா ப்ராணத:
அனைத்து ஜீவாராசிகளுக்கும் (அவற்றின் உள்ளுறைந்து) ஒளி கொடுத்து அவற்றை பிரகாசிக்கச் செய்வதால் பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ராண + தீபயதி = ப்ராணத:
ப்ராணான் ததாதி லுனாதீதி வா ப்ராணத:
அனைத்து ஜீவராசிகளையும் வெட்டி அழிப்பதால் பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ராண + ததாதி (லுனாதி) = ப்ராணத:
66. ஓம் ப்ராணாய நம:
ப்ராணிதீதி ப்ராண: க்ஷேத்ரஞ்ய: பரமாத்மா | முக்யப்ராணோ வா |
அனைத்து ஜீவாராசிகளுக்குள்ளும் உறைந்து, அவைகள் மூச்சுக்காற்றை (உள்ளிழுத்து, வெளியிட்டு) ஸ்வாசிக்கச் செய்வதால் பகவான் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். பகவானே முக்கியமானவர். எனவே, அந்த முக்கியப் ப்ராணரையே ‘ப்ராண:’ என்று அழைக்கிறோம்.
67. ஒம் ஜ்யேஶ்டாய நம:
வ்ருத்ததமோ ஜ்யேஶ்ட:
அனைத்திற்கும் காரணமாய் இருப்பதால் பகவான் 'ஜ்யேஷ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் (அனைத்திற்கும் காரணமாய் இருக்குமவர், அனைவரைக்காட்டிலும் மூத்தவர்).
68. ஒம் ஶ்ரேஶ்டாய நம:
ப்ரஶஸ்ய தம: ஶ்ரேஶ்ட:
அனைவரைக்காட்டிலும் மேம்பட்டவராய், நிகரில்லாத புகழை உடையவராய் இருப்பதால் பகவான் 'ஶ்ரேஷ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
69. ஒம் ப்ரஜாபதயே நம:
ஈஶ்வரத்வேன ஸர்வாஸாம் ப்ரஜானாம் பதி:
அனைத்து ஜீவராசிகளும் பகவான் என்னும் அரசனின் குடிமக்கள் (ப்ரஜைகள்).பகவானே இந்த ப்ரஜைகளின் அரசன் (பதி). எனவே, பகவான் 'ப்ரஜாபதி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
70. ஒம் ஹிரண்யகர்ப்பாய நம:
ஹிரண்மயாண்டர்வர்த்தித்வாத் ஹிரண்யகர்ப்போ ப்ரஹ்மா விரிஞ்சி: ததாத்மா
அனைத்து ஜீவராசிகளையும் தாங்கும் இந்தப் ப்ரபஞ்சமானது ஒரு பொன்மயமான முட்டைக்குள்ளிருந்து பிறக்கிறது. அந்த பொன்மயமான முட்டையின் உள்ளே நான்முகக்கடவுளான ப்ரஹ்மா இருக்கிறார். எனவே,பொதுவாக அவர் 'ஹிரண்யகர்ப்பர்' என்று அழைக்கப்படுகிறார். பகவானோ அந்த ப்ரஹ்மாவிற்கும் அந்த்ராத்மாவாக இருந்து அவரை வழிநடத்துகிறார்.எனவே பகவான் 'ஹிரண்யகர்ப்பர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
71. ஒம் பூகர்ப்பாய நம:
பூகர்ப்பே யஸ்ய ஸ பூகர்ப்ப:
இந்த பூமியையும், ப்ரபஞ்சத்தையும், மற்றுமுண்டான ஸகலவிதமான ஸ்ருஷ்டிகளையும் ப்ரளய காலத்தில் பகவான் தன் வயிற்றினுள் வைத்துக் காக்கிறார். இந்த பூமி (ப்ரபஞ்சம் மற்றும் அனைத்து ஸ்ருஷ்டியும்) பகவானின் கர்ப்பத்தில் உள்ளது எனக்கொள்ளலாம். எனவே பகவான் 'பூகர்ப்ப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
72. ஒம் மாதவாய நம:
மாயா: ஶ்ரிய: தவ: பதி: மாதவ:
பகவான் 'மா' என்றழைக்கப்படும் திருமகளின் (மஹாலக்ஷ்மியின்) கணவராதலால் அவர் 'மாதவன்' என்று அழைக்கப்படுகிறார்.
மதுவித்யாவபோத்யத்வாத்வா மாதவ:
(ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் உரைக்கப்பட்டுள்ள) மது வித்யையின் மூலம் அறியப் படக்கூடியவராதலால் பகவான் 'மாதவன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'மௌனாத்த்யானாஸ்ச யோகாஸ்ச வித்தி பாரத மாதவம் |' (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.4)
இதி வ்யாஸவசனாத்வா மாதவ: |
மௌனத்தாலும் (கண்டவற்றைப் பற்றி பேசாது பகவானைப் பற்றி), த்யானத்தாலும், யோகத்தாலும் பகவான் மாதவரை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். ஸ்ரீவ்யாஸ பகவானின் இந்தக் கூற்றின்படி பகவான் மாதவன் என்று அழைக்கப்படுகிறார்.
73. ஒம் மதுஸூதனாய நம:
மதுநாமானமஸுரம் ஸூதிதவான் இதி மதுஸூதன:
மது என்று பெயர் கொண்ட ஒரு அஸுரனை அழித்ததால் (வதம் செய்ததால்) பகவான் 'மதுஸூதனன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக