8. ஈஶான: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஶ்ட: ஶ்ரேஶ்ட: ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸுதன: ||
இந்த எட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
64. ஈஶான:, 65. ப்ராணத:, 66. ப்ராண:, 67. ஜ்யேஷ்ட, 68.ஸ்ரேஷ்ட:, 69.ப்ரஜாபதி: |
70. ஹிரண்யகர்ப்ப:, 71. பூகர்ப்ப:, 72. மாதவ:, 73. மதுஸுதன: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
72. ஒம் மாதவாய நம:
மாயா: 'மா' என்ற சொல் ஶ்ரிய: மஹாலக்ஷ்மியைக் குறிக்கும் தவ: 'தவ'
என்ற சொல் பதி: கணவனைக் குறிக்கும் மாதவ: பகவான் மஹாலக்ஷ்மியின் கணவராதலால் அவர் 'மாதவன்'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் 'மா'
என்றழைக்கப்படும் திருமகளின் (மஹாலக்ஷ்மியின்)
கணவராதலால் அவர் 'மாதவன்'
என்று அழைக்கப்படுகிறார்.
மதுவித்யாவபோத்யத்வாத்வா
மது வித்யையின் மூலம் அறியப் படக்கூடியவராதலால் மாதவ: பகவான் 'மாதவன்'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
(ப்ருஹதாரண்யக
உபநிஶத்தில் உரைக்கப்பட்டுள்ள) மது
வித்யையின் மூலம் அறியப் படக்கூடியவராதலால் பகவான் 'மாதவன்'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'மௌனாத்த்யானாஸ்ச
யோகாஸ்ச வித்தி பாரத மாதவம் |' (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.4)
மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் சஞ்சயன் த்ருதராஷ்ட்ரரிடம் கூறியது:
மௌனத்தாலும் (கண்டவற்றைப்
பற்றி பேசாது பகவானைப் பற்றி), த்யானத்தாலும்,
யோகத்தாலும் பகவான் மாதவரை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.
இதி
வ்யாஸவசனாத்வா மாதவ: |
ஸ்ரீவ்யாஸ பகவானின் இந்தக் கூற்றின்படி பகவான் மாதவன் என்று
அழைக்கப்படுகிறார்.
73. ஒம் மதுஸூதனாய நம:
மதுநாமானமஸுரம்
மது என்று பெயர் கொண்ட ஒரு அஸுரனை ஸூதிதவான்
அழித்ததால் (வதம்
செய்ததால்) இதி மதுஸூதன: பகவான் 'மதுஸூதனன்'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மது என்று பெயர் கொண்ட ஒரு அஸுரனை அழித்ததால் (வதம்
செய்ததால்) பகவான் 'மதுஸூதனன்'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கர்ணமிஶ்ரோத்பவம்
சாபி மதுநாமமஹாஸுரம் |
ப்ரஹ்மணோபசித்திம்
குர்வன் ஜகான புருஷோத்தம: ||
தஸ்ய
தாத வதாதேவ தேவதானவமானவா:|
மதுஸூதன
இத்யாஹுர் ரிஷயஸ்ச ஜனார்தனம் || (மஹாபாரதம்)
(பகவானின்)
காதிலிருந்த அழுக்கிலிருந்து 'மது'
என்ற பெயர் கொண்ட ஒரு பெரிய அஸுரன் தோன்றினான். (அவனால்
பீடிக்கப்பட்ட) ப்ரஹ்மாவிற்கு
அடைக்கலம் தந்த பகவான் அந்த அஸுரனைக் கொன்றொழித்தார். ஓ தந்தையே!
அந்த வதத்தின் காரணத்தால் ஜனார்த்தனராகிய பகவானை தேவர்கள்,
அஸுரர்கள், மானிடர்
மற்றும் முனிவர்கள் 'மதுஸூதனன்'
என்ற பெயரினால் அழைத்தனர்.
இதி மஹாபாரதே |
இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக