வெள்ளி, ஜனவரி 25, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 100

11. அஜ: ஸர்வேஶ்வர: ஸித்த: ஸித்தி: ஸர்வாதிரச்யுத:

வ்ருஶாகபிரமேயாத்மா ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

இந்த பதினொன்றாவது ஸ்லோகத்தில் ஒன்பது (9) திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

95. அஜ:, 96. ஸர்வேஶ்வர:, 97. ஸித்த:, 98. ஸித்தி:, 99. ஸர்வாதி:, 100. அச்யுத |

101. வ்ருஶாகபி:, 102. அமேயாத்மா, 103. ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

இந்த திருநாமங்களின் விளக்கம் (சுருக்கமாக):

95ஓம் அஜாய நம:
ந ஜாயத இதி அஜ: 
பரப்ரஹ்மமான பகவான் எப்பொழுதும் இருக்கிறார்எனவேஅவர் பிறப்பதில்லைஇவ்வாறுபிறப்பே இல்லாத பகவான் 'அஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


96ஓம் ஸர்வேஶ்வராய நம:
ஸர்வேஶாம் ஈஶ்வராணாம் ஈஶ்வர: ஸர்வேஶ்வர: 
உலகில் சாதாரணமாக தலைவர்கள்அரசர்கள் முதலியோரைக் காண்கிறோம்.இவர்கள் அனைவரும்தத்தம் ஆளுகைக்குட்பட்ட இடங்களுக்கு ஈஶ்வரர்கள் ஆவர். இவ்வாறுப்ரபஞ்சம் அனைத்திலும் கூட பல ஈஶ்வரர்கள் இருக்கிறார்கள்.இத்தகைய ஈஶ்வரர்கள் அனைவரையும் அடக்கி ஆள்பவராக இருப்பதால்,பகவான் 'ஸர்வேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்


97ஓம் ஸித்தாய நம:
நித்ய நிஶ்பின்ன ரூபத்வாத் ஸித்த:
பகவான் எக்காலத்திலும்எல்லாவற்றிலும் முழுமையானவராகவும்அனைத்தையும் அடையப்பெற்றவராகவும்குறைபாடுகள் அற்றவராகவும் இருப்பதால் அவர் 'ஸித்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

98ஓம் ஸித்தயே நம:
ஸர்வவஸ்துஶு ஸம்வித்ரூபத்வாத் நிரதிஶயரூபத்வாத் ஃபலரூபத்வாத் வா ஸித்தி: ஸ்வர்காதீனாம் வினாஶித்வாத்  அஃபலத்வம் 
பகவானே அனைத்து பொருட்களுக்குள்ளும் (அனைவருக்குள்ளும்) ஞான வடிவானவராய், அனைத்திலும் சிறந்தவராய், அனைவராலும் அவரவரது வினைகளுக்கேற்ப அடையக்கூடிய பலனாயும் இருக்கிறார். எனவே, அவர் 'ஸித்தி:' (அடையக்கூடிய இலக்கு) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். நாம் அனைவரும் அழியக்கூடிய சுவர்க்கம் முதலிய பலன்களில் பற்று வைக்காது, அழியாத, சிறந்த பலனாகிய பகவானிடமே பற்றுக் கொள்ள வேண்டும்.


99ஓம் ஸர்வாதயே நம:
ஸர்வபூதானாம் ஆதிகாரணத்வாத் ஸர்வாதி: 
அனைத்து ஜீவராசிகளின் மூலகாரணமாய் இருப்பதால் பகவான் 'ஸர்வாதி:'என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


100ஓம் அச்யுதாய நம:
ஸ்வரூபஸாமர்த்யான் ந ச்யுதோ ந ச்யவதே இதி அச்யுத: 
பகவான் தன் இயற்கையான வலிமை (மற்றும் சக்தியிலிருந்துமுன்பு என்றும் நழுவியதில்லைஇனி நழுவப்போவதுமில்லைஎனவேஅவர் 'அச்யுதன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


101ஓம் வ்ருஶாகபயே நம:
வர்ஶணாத் ஸர்வகாமானாம் தர்மோ வ்ருஶ: காத் தோயாத் பூமிமபாதிதி கபிர்வராஹ: வ்ருஶரூபத்வாத் கபிரூபத்வாத் வ்ருஶாகபி: 
பகவான் பன்றியின் உருவெடுத்து கடலுக்குள் ஆழ்ந்து கிடந்த பூமியை வெளிக்கொணர்ந்தார்அந்த வராஹப் பெருமானேதர்மத்தின் உருவமாய் இருந்து நமது ஆசைகளையும் நிறைவேற்றுகிறார்இவ்வாறுதர்மத்தின் உருவமாயும்வராஹமாயும் இருப்பதால் பகவான் 'வ்ருஶாகபி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


102ஓம் அமேயாத்மனே நம:
இயானிதி மாதும் பரிச்சேதும் ந ஶக்யத ஆத்மா யஸ்யேதி அமேயாத்மா 
மா என்றால் தீர்மானித்தல்அனுமானித்தல்பகவானுடைய தன்மையை எவராலும் இன்னதென்று அறிந்துகொள்ள இயலாதுஎனவேபகவான்'அமேயாத்மாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


103ஓம் ஸர்வயோகவிநி:ஸ்ருதாய நம:
ஸர்வஸம்பந்தவினிர்கதஸர்வயோகவிநி:ஸ்ருத: 
பரப்ரஹ்மமான பகவான் அனைத்துமாய் இருந்தாலும் எதனுடனும் தொடர்பின்றி இருக்கிறார்எனவேஅவர் 'ஸர்வயோகவிநி:ஸ்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(நானாஶாஸ்த்ரோக்தாத்யோகாதபகதத்வாத் வா)  
நானாஶாஸ்த்ர உக்தாத் யோக அதபகதத்வாத் வா 
பல்வேறு சாஸ்திரங்களால் விளக்கப்பட்டுள்ள (பக்திகர்மஞானம் போன்றயோக சாதனங்களால் அவர் அறியப்படுவதால்பகவான்'ஸர்வயோகவிநி:ஸ்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.