18. வேத்யோ வைத்ய: ஸதாயோகி வீரஹா மாதவோ மது: |
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: ||
இந்த பதினெட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
163. வேத்ய:, 164. வைத்ய:, 165. ஸதாயோகி, 166. வீரஹா, 167. மாதவ:, 168. மது: |
169. அதீந்த்ரிய:, 170. மஹாமாய:, 171. மஹோத்ஸாஹ:, 172. மஹாபல: ||
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: ||
இந்த பதினெட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
163. வேத்ய:, 164. வைத்ய:, 165. ஸதாயோகி, 166. வீரஹா, 167. மாதவ:, 168. மது: |
169. அதீந்த்ரிய:, 170. மஹாமாய:, 171. மஹோத்ஸாஹ:, 172. மஹாபல: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும், அவற்றின் விளக்கமும் (சுருக்கமாக):
163. ஓம் வேத்யாய நம:
நி:ஶ்ரேயஸார்த்திபிர் வேதனார்ஹத்வாத் வேத்ய:
மிகச்சிறந்த பலனான மோக்ஷத்தை விரும்புவர்களால் பகவான் அறியப்படுகிறார். எனவே, அவர் 'வேத்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
164. ஓம் வைத்யாய நம:
ஸர்வவித்யானாம் வேதித்ருத்வாத் வைத்ய:
அனைத்து வித்தைகளையும் (ஆயக்கலைகள் அறுபத்து நான்கினையும்) அறிபவராதலால் பகவான் 'வைத்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
165. ஓம் ஸதாயோகினே நம:
ஸதா அவிர்பூத ஸ்வரூபத்வாத் ஸதாயோகி
எப்பொழுதும் ஞானத்தால் ப்ரகாசிக்கும் உருவமுடையவராதலால் பகவான் 'ஸதாயோகி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
166. ஓம் வீரக்னே நம:
தர்மத்ராணாய வீரான் அஸுரான் ஹந்தீதி
தர்மத்தை காப்பதற்காக (தர்மத்தைக் குலைக்கும்) அஸுர வீரர்களை கொல்வதால் பகவான் ' வீரஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
167. ஓம் மாதவாய நம:
மாயா வித்யாயா: பதி: மாதவ:
'மா' என்ற அனைத்து வித்தைகளின் (கல்வி, கேள்விகளின்) தலைவராதலால் பகவான் 'மாதவன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
168. ஓம் மதவே நம:
யதா மது பராம் ப்ரீதிம் உத்பாதயதி அயமபி ததேதி மது:
பகவான் தன் பக்தர்களுக்கு தேன் போன்று சுவையாய் இருப்பவர், இன்பமளிப்பவர். எனவே, அவர் 'மது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
169. ஓம் அதீந்த்ரியாய நம:
ஶப்தாதிரஹிதத்வாத் இந்த்ரியானாம் அவிஶய இதி அதீந்த்ரிய:
பகவான், ஶப்த (கேட்டல்), ஸ்பரிஸ (தொடுதல்), ரூப (உருவத்தைப் பார்த்தல்), ரஸ (சுவைத்தல்), கந்தம் (முகர்தல்) ஆகிய ஐம்புலன்களுக்கும் (இந்த்ரியங்களுக்கும்) எட்டாதவர். எனவே, அவர் 'அதீந்த்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
170. ஓம் மஹாமாயாய நம:
மாயாவினாமபி மாயாகாரித்வாத் மஹாமாய:
பகவான் மாயாவிகளுக்கெல்லாம் மேலான மாயாவி. சாதாரண மனிதர்களிடையே மாயையை ஏற்படுத்தவல்ல மாயாவிகளாலும் பகவானின் மாயையை அறியவோ, மீறவோ இயலாது. எனவே, பகவான் 'மஹாமாய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
171. ஓம் மஹோத்ஸாஹாய நம:
ஜகத் உத்பத்தி ஸ்திதி லயார்த்தம் உத்யுக்தத்வாத் மஹோத்ஸாஹ:
இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் பகவான் மிகுந்த உற்சாகத்துடன் செய்கிறார். எனவே, அவர் 'மஹோத்ஸாஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
172. ஓம் மஹாபலாய நம:
பலினாமபி பலவத்வாத் மஹாபல:
அனைத்து பலசாலிகளைக் காட்டிலும் மிக்க பலம் பொருந்தியவராக இருப்பதால் பகவான் 'மஹாபல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.