13. ருத்ரோ பஹுஶிரா பப்ருர்விஶ்வயோனி: ஶுசிஶ்ரவா: |
அம்ருத: ஶாஶ்வதஸ்தாணுர்வராரோஹோ மஹாதபா: ||
இந்த பதின்மூன்றாம் ஸ்லோகத்தில் ஒன்பது (9) திருநாமங்கள் உள்ளன:
114. ருத்ர:, 115. பஹுஶிரா:, 116. பப்ரு:, 117. விஶ்வயோனி:, 118. ஶுசிஶ்ரவா: |
119. அம்ருத:, 120. ஶாஶ்வதஸ்தாணு:, 121. வராரோஹ:, 122. மஹாதபா: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும் (சுருக்கமாக):
114. ஓம் ருத்ராய நம:
ஸம்ஹாரகாலே
ப்ரஜா:
ஸம்ஹரன்
ரோதயதீதி
ருத்ர:
ரோதயதி என்றால் அழவைத்தல். ப்ரளய காலத்தில் (ப்ரஹ்மாவின் ஆயுள்காலத்தின் முடிவில்) அனைத்து ஜீவராசிகளையும் அழிக்கும்பொழுது பகவான் அவர்களை அழவைக்கிறார். எனவே, அவர் 'ருத்ரன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ருதம்
ராதி ததாதீதி வா
ருத்ர:
அனைவருக்கும் வாக்கை (அல்லது ஒலியை) வழங்குவதால் பகவான் 'ருத்ரன்'என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ருர்துக்கம்
துக்ககாரணம் வா த்ராவயதி வா ருத்ர:
அனைவரின் (அனைத்துத்) துன்பங்களையும், அஞ்ஞானம், மோஹம் போன்ற அவற்றின் காரணங்களையும் அழித்து விரட்டி விடுவதால் பகவான் 'ருத்ரன்'என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ரோதனாத்
த்ராவணாத்வாபி
ருத்ர இதயுச்யதே
அழவைப்பதாலும், தூர விரட்டுவதாலும் பகவான் 'ருத்ரன்' என்று அழைக்கப்படுகிறார்.
115. ஓம் பஹுஶிரஸே நம:
பஹுனி
ஶிராம்ஸி
யஸ்யேதி
பஹுஶிரா:
‘ஸஹஸ்ரஶீர்ஶா புருஶ:’ (புருஶ ஸூக்தம் 1)
புருஶ ஸூக்தத்தில் கூறியுள்ளபடி:
(பரப்ரஹ்மமான புருஶருக்கு) பல்லாயிரக்கணக்கானத் தலைகள் உள்ளன.
இதி மந்த்ரவர்ணாத் இந்த (புருஶ ஸூக்த மந்திரத்தில்) கூறியுள்ளபடி.
\(புருஶ ஸூக்த மந்திரத்தில் கூறியுள்ளபடி) எண்ணிலடங்கா தலைகள் கொண்டவராதலால் பகவான் ' பஹுஶிரா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
116. ஓம் பப்ரவே நம:
பிபர்த்தி
லோகானிதி
பப்ரு:
அனைத்து உலகங்களையும், இந்தப் ப்ரபஞ்சத்தையும் தாங்குவதால் பகவான்'பப்ரு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
117. ஓம் விஶ்வயோனயே நம:
விஶ்வஸ்ய
காரணத்வாத்
விஶ்வயோனி:
இந்தப் ப்ரபஞ்சம் அனைத்திற்கும் மூலகாரணமாக இருப்பதால் பகவான்'விஶ்வயோனி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
118. ஓம் ஶுசிஶ்ரவஸே நம:
ஶுசீனி
ஶ்ரவாம்ஸி
நாமானி
ஶ்ரவணீயான்யஸ்யேதி
ஶுசிஶ்ரவா:
பகவானைப் பற்றி கேட்பது தூய்மையானது. அவரது திருநாமங்கள் கேட்பதற்கு உகந்தவை. எனவே, பகவான் 'ஶுசிஶ்ரவா:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
119. ஓம் அம்ருதாய நம:
ந வித்யதே
ம்ருதம் மரணம்
அஸ்யேதி
அம்ருத:
பகவானுக்கு மரணம் என்பதே கிடையாது. எனவே, அவர் 'அம்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
120. ஓம் ஶாஶ்வதஸ்தாணவே நம:
ஶாஶ்வதஸ்சாஸௌ
ஸ்தாணுஸ்சேதி
ஶாஶ்வதஸ்தாணு:
பகவான் என்றும் உள்ளார், என்றைக்கும் தன்னிலை மாறாது நிலையாகவும் உள்ளார். எனவே, அவர் 'ஶாஶ்வதஸ்தாணு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
121. ஓம் வராரோஹாய நம:
வர
ஆரோஹோSஅங்கோSஸ்யேதி
வராரோஹ:
பகவானின் இடைப்பகுதி மிக அழகானது. எனவே, அவர் 'வராரோஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வரம்
ஆரோஹணம்
யஸ்மின்னிதி வா
ஆரூடனாம்
புனராவ்ருத்யஸம்பவாத்
வராரோஹ:
பகவானை அடைந்தவர் இந்த ஸம்ஸாரத்தினுள் மீண்டும் பிறப்பதில்லை.அத்தகைய ஏற்றமான இடத்தை உடையவராதலால் அவர் அவர் 'வராரோஹ:'என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
122. ஓம் மஹாதபஸே நம:
மஹத்
ஸ்ருஜ்யவிஶயம்
தபோ
ஞானமஸ்யேதி
மஹாதபா:
(இந்தப் ப்ரபஞ்சத்தை) படைக்கும் விஷயத்தில் மிகச்சிறந்த ஞானம் உடையவராதலால் பகவான் 'மஹாதபா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஐஸ்வர்யம்
ப்ரதாபோ வா
தபோ
மஹதஸ்யேதி வா
மஹாதபா:
அவரது செல்வமும், வீரமும் அனைத்தையும் விஞ்சும் காந்தியுடன் (ஒளியுடன்)இருப்பதால் பகவான் 'மஹாதபா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.