ஞாயிறு, ஏப்ரல் 28, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 110

13. ருத்ரோ பஹுஶிரா பப்ருர்விஶ்வயோனி: ஶுசிஶ்ரவா: |

அம்ருத: ஶாஶ்வதஸ்தாணுர்வராரோஹோ மஹாதபா: ||

இந்த பதின்மூன்றாம் ஸ்லோகத்தில் ஒன்பது (9) திருநாமங்கள் உள்ளன:
114. ருத்ர:, 115. பஹுஶிரா:, 116. பப்ரு:, 117. விஶ்வயோனி:, 118. ஶுசிஶ்ரவா: |
119. அம்ருத:, 120. ஶாஶ்வதஸ்தாணு:, 121. வராரோஹ:, 122. மஹாதபா: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும் (சுருக்கமாக):

114ஓம் ருத்ராய நம:
ஸம்ஹாரகாலே 
ப்ரஜா: 
ஸம்ஹரன் 
ரோதயதீதி 
ருத்ர: 
ரோதயதி என்றால் அழவைத்தல்ப்ரளய காலத்தில் (ப்ரஹ்மாவின் ஆயுள்காலத்தின் முடிவில்அனைத்து ஜீவராசிகளையும் அழிக்கும்பொழுது பகவான் அவர்களை அழவைக்கிறார்எனவேஅவர் 'ருத்ரன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ருதம் 
ராதி ததாதீதி வா 
ருத்ர: 
அனைவருக்கும் வாக்கை (அல்லது ஒலியைவழங்குவதால் பகவான் 'ருத்ரன்'என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ருர்துக்கம் துக்ககாரணம் வா த்ராவயதி வா ருத்ர:
அனைவரின் (அனைத்துத்துன்பங்களையும்அஞ்ஞானம்மோஹம் போன்ற அவற்றின் காரணங்களையும் அழித்து விரட்டி விடுவதால் பகவான் 'ருத்ரன்'என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ரோதனாத் 
த்ராவணாத்வாபி 
ருத்ர  இதயுச்யதே
அழவைப்பதாலும், தூர விரட்டுவதாலும் பகவான் 'ருத்ரன்என்று அழைக்கப்படுகிறார்.

115ஓம் பஹுஶிரஸே நம:
பஹுனி 
ஶிராம்ஸி 
யஸ்யேதி 
பஹுஶிரா: 
ஸஹஸ்ரஶீர்ஶா புருஶ:’ (புருஶ ஸூக்தம் 1)
புருஶ ஸூக்தத்தில் கூறியுள்ளபடி:
(பரப்ரஹ்மமான புருஶருக்குபல்லாயிரக்கணக்கானத் தலைகள் உள்ளன.

இதி மந்த்ரவர்ணாத்  இந்த (புருஶ ஸூக்த மந்திரத்தில்கூறியுள்ளபடி.
\(புருஶ ஸூக்த மந்திரத்தில் கூறியுள்ளபடிஎண்ணிலடங்கா தலைகள் கொண்டவராதலால் பகவான் பஹுஶிராஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

116ஓம் பப்ரவே நம:
பிபர்த்தி 
லோகானிதி 
பப்ரு:
அனைத்து உலகங்களையும்இந்தப் ப்ரபஞ்சத்தையும் தாங்குவதால் பகவான்'பப்ரு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

117ஓம் விஶ்வயோனயே நம:
விஶ்வஸ்ய 
காரணத்வாத் 
விஶ்வயோனி:
இந்தப் ப்ரபஞ்சம் அனைத்திற்கும் மூலகாரணமாக இருப்பதால் பகவான்'விஶ்வயோனி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

118ஓம் ஶுசிஶ்ரவஸே நம:
ஶுசீனி 
ஶ்ரவாம்ஸி 
நாமானி 
ஶ்ரவணீயான்யஸ்யேதி 
ஶுசிஶ்ரவா: 
பகவானைப் பற்றி கேட்பது தூய்மையானதுஅவரது திருநாமங்கள் கேட்பதற்கு உகந்தவைஎனவேபகவான் 'ஶுசிஶ்ரவா:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

119ஓம் அம்ருதாய நம:
ந வித்யதே 
ம்ருதம் மரணம் 
அஸ்யேதி 
அம்ருத: 
பகவானுக்கு மரணம் என்பதே கிடையாதுஎனவேஅவர் 'அம்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

120ஓம் ஶாஶ்வதஸ்தாணவே நம:
ஶாஶ்வதஸ்சாஸௌ 
ஸ்தாணுஸ்சேதி 
ஶாஶ்வதஸ்தாணு: 
பகவான் என்றும் உள்ளார்என்றைக்கும் தன்னிலை மாறாது நிலையாகவும் உள்ளார்எனவேஅவர் 'ஶாஶ்வதஸ்தாணு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

121ஓம் வராரோஹாய நம:
வர 
ஆரோஹோSஅங்கோSஸ்யேதி 
வராரோஹ: 
பகவானின் இடைப்பகுதி மிக அழகானதுஎனவேஅவர் 'வராரோஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வரம் 
ஆரோஹணம் 
யஸ்மின்னிதி வா 
ஆரூடனாம் 
புனராவ்ருத்யஸம்பவாத் 
வராரோஹ: 
பகவானை அடைந்தவர் இந்த ஸம்ஸாரத்தினுள் மீண்டும் பிறப்பதில்லை.அத்தகைய ஏற்றமான இடத்தை உடையவராதலால் அவர் அவர் 'வராரோஹ:'என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

122ஓம் மஹாதபஸே நம:
மஹத் 
ஸ்ருஜ்யவிஶயம் 
தபோ 
ஞானமஸ்யேதி 
மஹாதபா:
(இந்தப் ப்ரபஞ்சத்தைபடைக்கும் விஷயத்தில் மிகச்சிறந்த ஞானம் உடையவராதலால் பகவான் 'மஹாதபாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஐஸ்வர்யம் 
ப்ரதாபோ வா 
தபோ 
மஹதஸ்யேதி வா 
மஹாதபா:
அவரது செல்வமும்வீரமும் அனைத்தையும் விஞ்சும் காந்தியுடன் (ஒளியுடன்)இருப்பதால் பகவான் 'மஹாதபாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.