13. ருத்ரோ பஹுஶிரா பப்ருர்விஶ்வயோனி: ஶுசிஶ்ரவா: |
அம்ருத: ஶாஶ்வதஸ்தாணுர்வராரோஹோ மஹாதபா: ||
இந்த பதின்மூன்றாம் ஸ்லோகத்தில் ஒன்பது (9) திருநாமங்கள் உள்ளன:
114. ருத்ர:, 115. பஹுஶிரா:, 116. பப்ரு:, 117. விஶ்வயோனி:, 118. ஶுசிஶ்ரவா: |
119. அம்ருத:, 120. ஶாஶ்வதஸ்தாணு:, 121. வராரோஹ:, 122. மஹாதபா: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களையும் அவற்றின் விளக்கங்களையும் பாப்போம்.
119. ஓம் அம்ருதாய நம:
ந
வித்யதே அடைவதில்லை
ம்ருதம்
மரணம் 'ம்ருதம்' என்றால் மரணம்
அஸ்யேதி எனவே
அம்ருத: பகவான் 'அம்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானுக்கு மரணம்
என்பதே கிடையாது. எனவே, அவர் 'அம்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'அஜரோSமர:' (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.25)
ப்ருஹதாரண்யக
உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (பரப்ரஹ்மமான
பகவான்) மூப்பற்றவர், இறவாதவர்
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள்
கூறுகின்றன.
120. ஓம் ஶாஶ்வதஸ்தாணவே நம:
ஶாஶ்வதஸ்சாஸௌ
நிரந்தரமானவர்
ஸ்தாணுஸ்சேதி நிலையானவர்
ஶாஶ்வதஸ்தாணு:
(எனவே) பகவான் 'ஶாஶ்வதஸ்தாணு:'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் என்றும் உள்ளார், என்றைக்கும் தன்னிலை
மாறாது நிலையாகவும் உள்ளார். எனவே, அவர்
'ஶாஶ்வதஸ்தாணு:' என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்.
121. ஓம் வராரோஹாய நம:
வர அழகிய
ஆரோஹோSஅங்கோSஸ்யேதி இடையை (மடியை) உடையவராதலால்
வராரோஹ: பகவான்
'வராரோஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானின்
இடைப்பகுதி மிக அழகானது. எனவே, அவர் 'வராரோஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஆரோஹ
என்றால் இடைப்பகுதி (அல்லது மடி)
வரம் மிகச்சிறந்த
ஆரோஹணம் ஏற்றம் (ஏற்றமான இடம்)
யஸ்மின்னிதி வா எவருடையதோ
ஆரூடனாம் எங்கு சென்றால்
புனராவ்ருத்யஸம்பவாத் (இந்த ஸம்ஸாரத்தினுள்)
திரும்பி வருதல் இல்லையோ
வராரோஹ: பகவான்
'வராரோஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானை அடைந்தவர்
இந்த ஸம்ஸாரத்தினுள் மீண்டும் பிறப்பதில்லை.
அத்தகைய ஏற்றமான இடத்தை உடையவராதலால் அவர் அவர் 'வராரோஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வரம் - மிகச்சிறந்த + ஆரோஹணம் - ஏறுதல் = வராரோஹ:
புனராவ்ருத்தி
+ அஸம்பவாத் = புனராவ்ருத்யஸம்பவாத்
'ந ச புனராவர்த்ததே' (சாந்தோக்ய உபநிஶத் 8.15.1)
சாந்தோக்ய
உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த உத்தமமான
இடத்தை அடைந்தவன்) மீண்டும் இங்கு
வருவதில்லை.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள்
கூறுகின்றன.
'யத் கத்வா
ந நிவர்த்தந்தே தத் தாம பரமம் மம' || (ஸ்ரீமத் பகவத்கீதை 15.6)
ஸ்ரீ
பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: எதனை எய்தினோர் மீள்வதில்லையோ, அதுவே
என் பரமபதம்.
இதி
பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.
122. ஓம் மஹாதபஸே நம:
மஹத் மிகச்சிறந்த
ஸ்ருஜ்யவிஶயம் (இந்தப் ப்ரபஞ்சத்தை)
படைக்கும்
தபோ 'தப' என்றால்
ஞானமஸ்யேதி ஞானம் உடையவராதலால்
மஹாதபா: பகவான்
'மஹாதபா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
(இந்தப் ப்ரபஞ்சத்தை)
படைக்கும் விஷயத்தில் மிகச்சிறந்த ஞானம் உடையவராதலால் பகவான் 'மஹாதபா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'யஸ்ய ஞானமயம் தப:' (முண்டக உபநிஶத் 1.1.9)
முண்டக
உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவருக்கு உலகைப்
படைக்கும் அறிவே தவமாகிறதோ...
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள்
கூறுகின்றன.
ஐஸ்வர்யம்
அவரது செல்வத்தின்
ப்ரதாபோ
வா வீரத்தின்
தபோ காந்தி (ஒளி)
மஹதஸ்யேதி வா மிகச்சிறந்ததாகும்
மஹாதபா: எனவே, பகவான்
'மஹாதபா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அவரது செல்வமும், வீரமும் அனைத்தையும்
விஞ்சும் காந்தியுடன் (ஒளியுடன்) இருப்பதால்
பகவான் 'மஹாதபா' என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்.
முதல்
விளக்கத்தில் 'தப' என்றால் ஞானம் என்று பொருள்; இரண்டாவது விளக்கத்தில் 'தப' என்றால் ஒளி அல்லது காந்தி
என்று பொருள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக