சனி, ஜனவரி 30, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 146

22. அம்ருத்யு: ஸர்வத்ருக் ஸிம்ஹ: ஸந்தாதா ஸந்திமான் ஸ்திர: |

அஜோ துர்மர்ஶண: ஶாஸ்தா விஶ்ருதாத்மா ஸுராரிஹா ||

இந்த இருபத்திரெண்டாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

198. அம்ருத்யு:, 199. ஸர்வத்ருக், 200. ஸிம்ஹ:, 201. ஸந்தாதா, 202. ஸந்திமான், 203. ஸ்திர: |

204. அஜ:, 205. துர்மர்ஶண:, 206. ஶாஸ்தா, 207. விஶ்ருதாத்மா, 208. ஸுராரிஹா ||

இவற்றுள் சில திருநாமங்களையும், அவற்றின் பொருளையும் இன்று அனுபவிக்கலாம்.

198. ஓம் அம்ருத்யவே நம:

ம்ருத்யுர் 'ம்ருத்யு' என்றால் 

வினாஶஸ் மரணம், அல்லது அழிவு 

தத்தேதுர் வாஸ்ய (தத் ஹேதுர் வாஸ்ய) அந்த மரணம் அல்லது அழிவின் காரணமும் கூட 

ந வித்யதே பகவானைத் தீண்டுவதில்லை 

இதி அம்ருத்யு: எனவே, பகவான் 'அம்ருத்யு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 மரணம் மட்டுமல்ல, அதன் காரணம் கூட பகவானைத் தீண்டுவது இல்லை. எனவே, அவர் 'அம்ருத்யு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

199. ஓம் ஸர்வத்ருஶே நம:

ப்ராணினாம் அனைத்து ஜீவராசிகள் 

க்ருதாக்ருதம் செய்பவை, மற்றும் செய்யாதவை 

ஸர்வம் ஆகிய அனைத்தையும் 

பஶ்யதி உணர்கிறார் (அறிகிறார்

ஸ்வாபாவிகேன தனது இயற்கையான 

போதேனேதி ஞானத்தால் 

ஸர்வத்ருக் எனவே, பகவான் 'ஸர்வத்ருக்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து ஜீவராசிகள் செய்பவை, செய்யாதவை ஆகிய அனைத்தையும் தன் இயற்கையான ஞானத்தால் அறிகிறார். எனவே, அவர் 'ஸர்வத்ருக்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

செய்பவை - செய்யத் தகுந்ததை செய்தோமா, செய்யத் தகாததைச் செய்தோமா

செய்யாதவை - செய்யத் தகுந்ததை மறந்தோமா, செய்யத் தகாததை செய்யாதிருந்தோமா

200. ஓம் ஸிம்ஹாய நம:

ஹின்ஸதீதி அழிப்பதால் 

ஸிம்ஹ: பகவான் 'ஸிம்ஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், அனைத்தையும் தக்க காலத்தில், குறிப்பாக பாவிகளையும், அதர்மிகளையும் அழிக்கிறார். எனவே, அவர் 'ஸிம்ஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ருஶோதராதித்வாத்ஸாதுத்வம் | (ஹிம்ஸ: என்னும் இடத்தில்) ஸிம்ஹ: என்ற பெயர் ப்ருஷோதராதி சூத்திரத்தின் (ப்ருஷோராதி சூத்திரம்) மூலம் கிடைக்கிறது.

இதி நாம்னாம் த்விதீயம் ஶதம் விவ்ருதம் | இத்துடன் (ஸிம்ஹ: என்னும் இந்த திருநாமம் வரையில்) இருநூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.

வெள்ளி, ஜனவரி 29, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 145

21. மரீசிர்தமனோ ஹம்ஸ: ஸுபர்ணோ புஜகோத்தம: |

ஹிரண்யநாபஸுதபாபத்மநாபப்ரஜாபதி: ||

இந்த இருபத்தொன்றாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

189. மரீசி:, 190. தமன:, 191. ஹம்ஸ:, 192. ஸூபர்ண:, 193. புஜகோத்தம: |

194. ஹிரண்யநாப:, 195. ஸுதபா:, 196. பத்மநாப:, 197. ப்ரஜாபதி: ||

இந்த திருநாமங்களின் விளக்கம் (சுருக்கமாக).

189. ஓம் மரீசயே நம:

தேஜஸ்வினாமபி தேஜஸ்வாத் மரீசி:  

அக்னி, சூரியன், சந்திரன் போன்ற ஒளிபொருந்தியவைகளுக்குள் ஒளியாக இருப்பதால் பகவான் 'மரீசி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

190. ஓம் தமனாய நம:

ஸ்வாதிகாராத் ப்ரமாத்யதி ப்ரஜா தமயிதும் ஶீலமஸ்ய வைவஸ்வதாதிரூபேணேதி தமன: 

தங்களுடைய அதிகாரம், பதவி ஆகியவற்றால் செருக்கடைந்து (மற்றவர்களைத் துன்புறுத்தும்) மக்களை, யமன் முதலிய வடிவம் கொண்டு அழிப்பதை தன் இயற்கையாகக் கொண்டிருப்பதால் பகவான் 'தமன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

191. ஓம் ஹம்ஸாய நம:

அஹம் ஸ இதி தாதாத்ம்யபாவின: ஸம்ஸாரபயம் ஹந்தீதி ஹம்ஸ: 

நானே பரப்ரஹ்மம் என்ற ஆத்ம பாவனையில் இருப்பவரின் ஸம்ஸார பயத்தைப் போக்குவதால் (போக்கி, முக்தி அளிப்பதால்) பகவான் 'ஹம்ஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஹந்தி கச்சதி ஸர்வஶரீரேஶ்விதி வா ஹம்ஸ:

அல்லது, அனைத்து உடல்களுக்குள் (அவற்றின் அந்தர்யாமியாய்) செல்வதால் பகவான் 'ஹம்ஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

192. ஓம் ஸுபர்ணாய நம:

ஶோபன தர்மாதர்ம ரூப பர்ணத்வாத் ஸுபர்ண:

பகவான் தர்மம், அதர்மம் என்னும் அழகிய இரு இறக்கைகளைக் கொண்ட பறவை போன்று இருப்பதால் அவர் 'ஸுபர்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶோபனம் பர்ணம் யஸ்யேதி வா ஸுபர்ண:

அழகிய இறக்கைகளை உடையவராதலால் பகவான் 'ஸுபர்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

193. ஓம் புஜகோத்தமாய நம:

புஜேன கச்சதாம் உத்தமோ புஜகோத்தம:

ஊர்ந்து செல்லும் பிராணியான பாம்புகளில், (வாஸுகி, ஆதிசேடன் போன்று) சிறந்தவராக இருப்பதால் பகவான் 'புஜகோத்தம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

194. ஓம் ஹிரண்யநாபாய நம:

ஹிரண்யமிவ கல்யாணி நாபிரஸ்யேதி ஹிரண்யநாப:

பொன்னைப்போன்று அழகிய தொப்புளை உடையவராதலால் பகவான் 'ஹிரண்யநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஹிதரமணீய நாபித்வாத்வா ஹிரண்யநாப:

அல்லது, பகவானின் தொப்புள் அழகாக இருப்பதோடல்லாது நமக்கு நன்மையை தருவதாகவும் இருப்பதால் பகவான் 'ஹிரண்யநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

195. ஓம் ஸுதபஸே நம:

வதரிகாஶ்ரமே நரநாராயணரூபேண ஶோபனம் தபஸ்சரதீதி ஸுதபா:

நரன் என்ற சீடனாகவும், நாராயணன் என்ற குருவாகவும் பகவான் பத்ரிகாஸ்ரமத்தில் உலக நன்மைக்காக மங்களமான தவம் புரிந்து வருகிறார். எனவே, அவர் 'ஸுதபா:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

196. ஓம் பத்மநாபாய நம:

பத்மமிவ ஸுவர்துலா நாபிரஸ்யேதி பத்மநாப: 

தாமரையைப் போன்று அழகிய வட்டவடிவமான தொப்புளை உடையவராதலால் பகவான் பத்மநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு, 48-வது திருநாமத்தில் தொப்புளில் தாமரையை உடையவர் என்று உரை தந்திருந்தார் ஆச்சார்யர்.

ஹ்ருத்பத்மஸ்ய நாபௌ மத்யே ப்ரகாஶனத்வா பத்மநாப: 

பகவான், ஒவ்வொருவருக்குள்ளும் அவரவரது இதய கமலத்தின் நடுவில் தன் இயற்கையான ஒளி வீச வீற்றிருக்கிறார். எனவே, அவர் 'பத்மநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

197. ஓம் ப்ரஜாபதயே நம:

ப்ராஜானாம் பதி: பிதா ப்ரஜாபதி: 

பகவான் அனைவருக்கும் தந்தையாக இருப்பதால் அவர் 'ப்ரஜாபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஞாயிறு, ஜனவரி 24, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 144

 21. மரீசிர்தமனோ ஹம்ஸ: ஸுபர்ணோ புஜகோத்தம: |

ஹிரண்யநாபஸுதபாபத்மநாபப்ரஜாபதி: ||

இந்த ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

189. மரீசி:, 190. தமன:, 191. ஹம்ஸ:, 192. ஸூபர்ண:, 193. புஜகோத்தம: |

194. ஹிரண்யநாப:, 195. ஸுதபா:, 196. பத்மநாப:, 197. ப்ரஜாபதி: ||

அவற்றில் சில திருநாமங்களை இன்று அனுபவிக்கலாம்.

196. ஓம் பத்மநாபாய நம:

பத்மமிவ தாமரையைப் போன்று 

ஸுவர்துலா அழகிய வட்டவடிவமான 

நாபிரஸ்யேதி தொப்புளை உடையவராதலால் 

பத்மநாப: பகவான் பத்மநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தாமரையைப் போன்று அழகிய வட்டவடிவமான தொப்புளை உடையவராதலால் பகவான் பத்மநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு, 48-வது திருநாமத்தில் தொப்புளில் தாமரையை உடையவர் என்று உரை தந்திருந்தார் ஆச்சார்யர்.

ஹ்ருத்பத்மஸ்ய ஒவ்வொருவருடைய இதய கமலத்தின் 

நாபௌ மத்யே நாபியில், அதாவது அந்தத் தாமரையின் நடுவில் 

ப்ரகாஶனத்வா பகவான் ஒளியோடு வீற்றிருப்பதால் பத்மநாப: பகவான் பத்மநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், ஒவ்வொருவருக்குள்ளும் அவரவரது இதய கமலத்தின் நடுவில் தன் இயற்கையான ஒளி வீச வீற்றிருக்கிறார். எனவே, அவர் 'பத்மநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ருஶோதராதித்வாத்ஸாதுத்வம் | (பத்மநாபி என்னும் இடத்தில்) பத்மநாபன் என்ற பெயர் ப்ருஷோதராதி சூத்திரத்தின் மூலம் கிடைக்கிறது.

 197. ஓம் ப்ரஜாபதயே நம:

ப்ராஜானாம் அனைத்து ஜீவராசிகளுக்கும் 

பதி: பிதா பதியாக, அதாவது தந்தையாக இருப்பதால் 

ப்ரஜாபதி: பகவான் 'ப்ரஜாபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைவருக்கும் தந்தையாக இருப்பதால் அவர் 'ப்ரஜாபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த உலகைப் படைப்பவர் நான்முகக்கடவுளான ப்ரஹ்மா. அவரே, அனைவருக்கும் தந்தை. பகவானோ, அந்த நான்முகனுக்கும் தந்தை. முன்பு 69-வது திருநாமத்தில், அவர் அரசன், நாம் அனைவரும் அவரது ப்ரஜைகள் என்று ஆச்சார்யர் உரை தந்திருந்தார்.