22. அம்ருத்யு: ஸர்வத்ருக் ஸிம்ஹ: ஸந்தாதா ஸந்திமான் ஸ்திர: |
அஜோ துர்மர்ஶண: ஶாஸ்தா விஶ்ருதாத்மா ஸுராரிஹா ||
இந்த இருபத்திரெண்டாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
198. அம்ருத்யு:, 199. ஸர்வத்ருக், 200. ஸிம்ஹ:, 201. ஸந்தாதா, 202. ஸந்திமான், 203. ஸ்திர: |
204. அஜ:, 205. துர்மர்ஶண:, 206. ஶாஸ்தா, 207. விஶ்ருதாத்மா, 208. ஸுராரிஹா ||
இந்த திருநாமங்களின் விளக்கம் (சுருக்கமாக).
198. ஓம் அம்ருத்யவே நம:
ம்ருத்யுர் வினாஶஸ் தத்தேதுர் வாஸ்ய (தத் ஹேதுர் வாஸ்ய) ந வித்யதே இதி அம்ருத்யு:
மரணம் மட்டுமல்ல, அதன் காரணம் கூட பகவானைத் தீண்டுவது இல்லை. எனவே, அவர் 'அம்ருத்யு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
199. ஓம் ஸர்வத்ருஶே நம:
ப்ராணினாம் க்ருதாக்ருதம் ஸர்வம் பஶ்யதி ஸ்வாபாவிகேன போதேனேதி ஸர்வத்ருக்
பகவான் அனைத்து ஜீவராசிகள் செய்பவை, செய்யாதவை ஆகிய அனைத்தையும் தன் இயற்கையான ஞானத்தால் அறிகிறார். எனவே, அவர் 'ஸர்வத்ருக்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
200. ஓம் ஸிம்ஹாய நம:
ஹின்ஸதீதி ஸிம்ஹ:
பகவான், அனைத்தையும் தக்க காலத்தில், குறிப்பாக பாவிகளையும், அதர்மிகளையும் அழிக்கிறார். எனவே, அவர் 'ஸிம்ஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
201. ஓம் ஸந்தாத்ரே நம:
கர்மஃபலை: புருஶான் ஸந்தத்த இதி ஸந்தாதா
பகவான் ஒவ்வொருவரது வினைப்பயனையும் அவர்களோடு இணைக்கிறார் (அதற்கு தக்க பலனை அளிக்கிறார்). எனவே, அவர் 'ஸந்தாதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
202. ஓம் ஸந்திமதே நம:
ஃபலபோக்தா ச ஸ ஏவேதி ஸந்திமான்
இங்கு அந்த பரப்ரஹ்மத்தை தவிர்த்து வேறொன்றுமில்லை. பற்பல ஜீவராசிகளின் வடிவில் அதனதன் வினைப்பயனை அனுபவிப்பவரும் அவரே. எனவே, பகவான் 'ஸந்திமான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
203. ஓம் ஸ்திராய நம:
ஸதைகரூபத்வாத் (ஸதா ஏக ரூபத்வாத்) ஸ்திர:
பகவான் என்றும் மாறாத உருவத்துடன் இருப்பதால் 'ஸ்திர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
204. ஓம் அஜாய நம:
அஜதி கச்சதி க்ஷிபதி இதி வா அஜ:
பகவான் நல்லோரிடம் செல்கிறார்; தீயோரை அழிக்கிறார். எனவே, அவர் 'அஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
205. ஓம் துர்மர்ஶணாய நம:
மர்ஶிதும் ஸோடும் தானவாதிபிர் ந ஶக்யதே இதி துர்மர்ஶண:
துர்மர்ஶண: என்றால் ஸஹிக்கமுடியாதவர் என்று பொருள். அஸுரர்களாலும், தீய எண்ணம் கொண்டவர்களாலும் பகவானை ஸஹித்துக்கொள்ள இயலாது. எனவே, அவர் 'துர்மர்ஶண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
206. ஓம் ஶாஸ்த்ரே நம:
ஶ்ருதிஸ்ம்ருத்யாதிபி: ஸர்வேஶாமனுஶிஶ்டிம் கரோதீதி ஶாஸ்தா
ஶ்ருதிகளையும் (வேதங்கள்), (மனுஸ்ம்ருதி முதலிய) ஸ்ம்ருதிகளையும் கொண்டு அனைவரையும் கட்டளையிட்டு, வழிநடத்தி ஆள்வதால் பகவான் 'ஶாஸ்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
207. ஓம் விஶ்ருதாத்மனே நம:
விஶேஶேண ஶ்ருதோ யேன ஸத்யஞானாதிலக்ஷண: ஆத்மாதோ விஶ்ருதாத்மா
பகவான் தன்னுடைய ஸத்யம், ஞானம் முதலிய குணங்களால், ஆத்மாவின் தன்மையை (மற்றெல்லோரையும் காட்டிலும்) சிறப்பாக அறிகிறார். எனவே, அவர் 'விஶ்ருதாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
208. ஓம் ஸுராரிக்னே நம:
ஸுராரிணாம் (ஸுர + அரிணாம்) ஹந்த்ருத்வாத் ஸுராரிஹா
பகவான், ஸுரர்கள் என்றழைக்கப்படும் தேவர்களின் எதிரிகளை அழிப்பதால் அவர் 'ஸுராரிஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.