26. ஸுப்ரஸாத: ப்ரஸன்னாத்மா விஶ்வத்ருக்விஶ்வபுக்விபு: |
ஸத்கர்த்தா ஸதக்ருத: ஸாதுர் ஜஹ்னுர்நாராயணோ நர: ||
இந்த இருபத்தி ஆறாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
236. ஸுப்ரஸாத:, 237. ப்ரஸன்னாத்மா, 238. விஶ்வத்ருக், 239. விஶ்வபுக், 240. விபு: |
241. ஸத்கர்த்தா, 242. ஸத்க்ருத:, 243. ஸாது, 244. ஜஹ்னு, 245. நாராயண:, 246. நர: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கத்தையும் இன்று அனுபவிக்கலாம்:
236. ஓம்
ஸுப்ரஸாதாய நம:
ஶோபன: மிக மங்களமான
ப்ரஸாதோ அவரது கருணை
யஸ்ய அபகாரவதாமபி தன்னை (பகவானை) அவமதித்து, தவறிழைத்த
ஶிஶுபாலாதீனாம் சிசுபாலன் முதலானோருக்கும்
மோக்ஷப்ரதாத்ருத்வாத் இதி முக்தியை அளிப்பதால்
ஸுப்ரஸாத: பகவான் 'ஸுப்ரஸாத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானின் கருணை மிகவும் மங்களகரமானது. அவரை அவமதித்து, தவறிழைத்த சிசுபாலன் முதலானோருக்கும் முக்தியை அளிக்கக்கூடியது. எனவே, அவர் 'ஸுப்ரஸாத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
237. ஓம் ப்ரஸன்னாத்மனே
நம:
ரஜஸ்தமோப்யாம் ரஜோ மற்றும் தமோ குணங்களால்
அகலுஶித மாசடையாதது (தீண்டப்படாதது)
ஆத்மா ஆன்மாவையும்
அந்த:கரணமஸ்யேதி மனதையும் உடையவராதலால்
ப்ரஸன்னாத்மா பகவான் 'ப்ரஸன்னாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானின் ஆன்மாவும், மனதும், உருவமும் சுத்தஸத்வ வடிவானது. ரஜோ, தமோ குணங்களால் மாசடையாதது. எனவே அவர் 'ப்ரஸன்னாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அந்த:கரணம் என்றால்
உள்ளுறுப்புகள் என்று பொருள். இவ்விடத்தில் இதற்கு மனம் என்று பொருள் கொள்வதே ஏற்புடையதாகும்.
கருணார்த்ர ஸ்வபாவத்வா கருணையே வடிவானவராக இருப்பதால்
ப்ரஸன்னாத்மா பகவான் 'ப்ரஸன்னாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருணையே வடிவானவராக இருப்பதால் பகவான் 'ப்ரஸன்னாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
யத்வா அல்லது
ப்ரஸன்னஸ்வபாவத்வா மகிழ்ச்சியான இயல்புடையவராதலால்
ப்ரஸன்னாத்மா பகவான் 'ப்ரஸன்னாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்
காருணிக இத்யர்த்த: மிகவும் கருணையுள்ளவர் என்று இதற்குப் பொருள்.
மிகவும் கருணையுள்ளவரானதால் பகவான் இயல்பாகவே மகிழ்ச்சியுடன் இருக்கிறார். எனவே, அவர் 'ப்ரஸன்னாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஆச்சார்யாள் இங்கு 'மகிழ்ச்சியான ஸ்வபாவமுடையவர்' என்று உரை தந்துள்ளார். மேலும், இதற்கு 'பரம காருணிகர்' என்று அர்த்தம் என்றும் கூறியுள்ளார். இவற்றை இணைத்துப் பார்க்கும் பொழுது, தனது கருணையால் தன் அடியவர்கள் மகிழ்வதைக்கண்டு தான் மகிழ்கிறார் என்றும் பொருள் கொள்ளலாம்.
அவாப்தஸர்வகாமத்வாத்வா தனது அனைத்து ஆசைகளும் ஈடேறப்பெற்றவர்
ப்ரஸன்னாத்மா (ஆதலால்) பகவான் 'ப்ரஸன்னாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தனது அனைத்து ஆசைகளும் (எண்ணங்களும்) ஈடேறப்பெற்றவர். அதனால் அவரது மனம் என்றுமே
மகிழ்ச்சியுடனும், நிறைவுடனும் (ப்ரஸன்னமாக)
இருக்கும். எனவே, அவர் 'ப்ரஸன்னாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.