புதன், டிசம்பர் 12, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 99

11. அஜ: ஸர்வேஶ்வர: ஸித்த: ஸித்தி: ஸர்வாதிரச்யுத:

வ்ருஶாகபிரமேயாத்மா ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

இந்த பதினொன்றாவது ஸ்லோகத்தில் ஒன்பது (9) திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

95. அஜ:, 96. ஸர்வேஶ்வர:, 97. ஸித்த:, 98. ஸித்தி:, 99. ஸர்வாதி:, 100. அச்யுத:
    |
101. வ்ருஶாகபி:, 102. அமேயாத்மா, 103. ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

101. ஓம் வ்ருஶாகபயே நம:
வர்ஶணாத் மழைப்போன்று 
ஸர்வகாமானாம் அனைத்து ஆசைகளையும் நமக்கு அள்ளித் தருவதால் 
தர்மோ தர்மத்தை 
வ்ருஶ: 'வ்ருஶ' என்று குறிக்கின்றனர்
காத் தோயாத் 'கா' என்றால் தண்ணீரைக் குறிக்கும் 
பூமிமபாதிதி அந்த கடல் நீருக்குள் அகப்பட்டுக் கிடந்த பூமியை இடர்ந்து எடுத்து வந்ததால் 
கபிர்வராஹ: வராஹப் பெருமானை 'கபி' என்று அழைக்கின்றனர்.
வ்ருஶரூபத்வாத் இவ்வாறு, (அனைத்து ஆசைகளையும் வாரி வழங்கும்) தர்மத்தின் உருவமாகவும்
கபிரூபத்வாத் பூமியை நீரினின்று இடர்ந்து எடுத்து வந்த வராஹ ரூபமாயும் (இரண்டும் சேர்ந்து இருப்பதால்
வ்ருஶாகபி: பகவான் 'வ்ருஶாகபி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் பன்றியின் உருவெடுத்து கடலுக்குள் ஆழ்ந்து கிடந்த பூமியை வெளிக்கொணர்ந்தார். அந்த வராஹப் பெருமானே, தர்மத்தின் உருவமாய் இருந்து நமது ஆசைகளையும் நிறைவேற்றுகிறார். இவ்வாறு, தர்மத்தின் உருவமாயும், வராஹமாயும் இருப்பதால் பகவான் 'வ்ருஶாகபி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வ்ருஶ - தர்மம்; - தண்ணீர்; கபி - அந்த தண்ணீரிலிருந்து பூமியை இடர்ந்து எடுத்த வராஹப் பெருமான். வ்ருஶாகபி - தர்மமே உருவாயுள்ள வராஹப் பெருமான்.

கபிர்வராஹ: ஶ்ரேஶ்டஸ்ச தர்மஸ்ச வ்ருஶ உச்யதே |
தஸ்மாத்வ்ருஶாகபி ப்ராஹ காஶ்யபோ மாம் ப்ரஜாபதி: || (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 342.89)
'கபி' என்றால் பன்றியை (வராஹத்தை) அல்லது உத்தமமான ஒன்றைக் குறிக்கும் (மிகச்சிறந்த உத்தமமான வராஹம் என்றும் கொள்ளலாம்). தர்மத்தை 'வ்ருஶ' என்ற சொல் குறிக்கும். எனவே, கஶ்யபப் ப்ரஜாபதி என்னை 'வ்ருஶாகபி' என்ற திருநாமத்தால் அழைத்தார்.

இதி மஹாபாரதே | இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

102. ஓம் அமேயாத்மனே நம:
இயானிதி இப்படிப்பட்டதென்று 
மாதும் பரிச்சேதும் 'மா' என்றால் தீர்மானித்தல் 
ந ஶக்யத இயலாது 
ஆத்மா யஸ்யேதி எவருடைய தன்மையை 
அமேயாத்மா பகவான் 'அமேயாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மா என்றால் தீர்மானித்தல், அனுமானித்தல். பகவானுடைய தன்மையை எவராலும் இன்னதென்று அறிந்துகொள்ள இயலாது. எனவே, பகவான் 'அமேயாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அமேயாத்மா = - இயலாது + மா - இன்னதென்று அறிந்துகொள்ள + ஆத்மா - பகவானின் தன்மை.

103. ஓம் ஸர்வயோகவிநி:ஸ்ருதாய நம:
ஸர்வஸம்பந்தவினிர்கத: பகவான் எவருடனும் எந்த வித சம்பந்தமும், தொடர்புமின்றி இருப்பதால் 
ஸர்வயோகவிநி:ஸ்ருத: அவர் 'ஸர்வயோகவிநி:ஸ்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரப்ரஹ்மமான பகவான் அனைத்துமாய் இருந்தாலும் எதனுடனும் தொடர்பின்றி இருக்கிறார். எனவே, அவர் 'ஸர்வயோகவிநி:ஸ்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'அஸங்கோ ஹ்யயம் புருஶ:’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.3.15)
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
அந்த புருஶன் (பகவான்) எதனுடனும் தொடர்பின்றியே இருக்கிறார்.

(நானாஶாஸ்த்ரோக்தாத்யோகாதபகதத்வாத் வா) 
நானாஶாஸ்த்ரஅல்லதுபல்வேறு சாஸ்திரங்களால் 
உக்தாத் விளக்கப்பட்டுள்ள 
யோக யோக சாதனங்களால் 
அதபகதத்வாத் வா அவர் அறியப்படுவதால், பகவான் 'ஸர்வயோகவிநி:ஸ்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பல்வேறு சாஸ்திரங்களால் விளக்கப்பட்டுள்ள (பக்தி, கர்ம, ஞானம் போன்ற) யோக சாதனங்களால் அவர் அறியப்படுவதால், பகவான் 'ஸர்வயோகவிநி:ஸ்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

சனி, டிசம்பர் 01, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 98


11. அஜ: ஸர்வேஶ்வர: ஸித்த: ஸித்தி: ஸர்வாதிரச்யுத:


வ்ருஶாகபிரமேயாத்மா ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

இந்த பதினொன்றாவது ஸ்லோகத்தில் ஒன்பது (9) திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

95. அஜ:, 96. ஸர்வேஶ்வர:, 97. ஸித்த:, 98. ஸித்தி:, 99. ஸர்வாதி:, 100. அச்யுத:
   |
101. வ்ருஶாகபி:, 102. அமேயாத்மா, 103. ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:


99. ஓம் ஸர்வாதயே நம:
ஸர்வபூதானாம் அனைத்து ஜீவராசிகளின் 
ஆதிகாரணத்வாத் மூலகாரணமாய் இருப்பதால் 
ஸர்வாதி: பகவான் 'ஸர்வாதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளின் மூலகாரணமாய் இருப்பதால் பகவான் 'ஸர்வாதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

100. ஓம் அச்யுதாய நம:
ஸ்வரூபஸாமர்த்யான் தன் இயற்கையான வலிமை (மற்றும் சக்தியிலிருந்து) 
ந ச்யுதோ அவர் என்றும் நழுவியதில்லை 
ந ச்யவதே அவர் இனி நழுவப்போவதுமில்லை 
இதி அச்யுத: எனவே, பகவான் 'அச்யுதன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன் இயற்கையான வலிமை (மற்றும் சக்தியிலிருந்து) முன்பு என்றும் நழுவியதில்லை, இனி நழுவப்போவதுமில்லை. எனவே, அவர் 'அச்யுதன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஶாஶ்வதம் ஶிவமச்யுதம்' (நாராயண உபநிஶத் 13.1)
நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அவர் (பரப்ரஹ்மம்) என்றும் மங்களமானவராகவும், வழுவாதவராகவும் இருக்கிறார். 
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ததா ச பகவத்வசனம் | மேலும், பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் கூறுகிறார்:

'யஸ்மான்னச்யுதபூர்வோSஹமச்யுதஸ்தேன கர்மணா'
நான் என் கடமைகளிலிருந்து முன்பு எப்பொழுதும் நழுவியதில்லை. எனவே, நான் "அச்யுதன்" ஆவேன்.

இதி | இவ்வாறு பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் கூறியுள்ளார்.

இதி நாம்னாம் ஶதமாத்யம் விவ்ருதம் | இத்துடன் (அச்யுத: என்னும் இந்த திருநாமம் வரையில்) முதல் நூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது

 
இந்த முதல் நூறு திருநாமங்களை காஞ்சி ஆச்சார்யாள் மற்றும் கனகவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீவீரராகவ பெருமாளின் திருவடிகளுக்கு சமர்ப்பிக்கின்றேன்.

செவ்வாய், நவம்பர் 27, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 97

11. அஜ: ஸர்வேஶ்வர: ஸித்த: ஸித்தி: ஸர்வாதிரச்யுத:

வ்ருஶாகபிரமேயாத்மா ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

இந்த பதினொன்றாவது ஸ்லோகத்தில் ஒன்பது (9) திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

95. அஜ:, 96. ஸர்வேஶ்வர:, 97. ஸித்த:, 98. ஸித்தி:, 99. ஸர்வாதி:, 100. அச்யுத:
  |
101. வ்ருஶாகபி:, 102. அமேயாத்மா, 103. ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

97. ஓம் ஸித்தாய நம:
நித்ய எக்காலத்திலும் (என்றென்றும்
நிஶ்பின்ன ரூபத்வாத் முழுமையானவராகவும், பூரணமானவராகவும், குறைபாடற்றவராகவும் இருப்பதால் 
ஸித்த: பகவான் 'ஸித்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எக்காலத்திலும், எல்லாவற்றிலும் முழுமையானவராகவும், அனைத்தையும் அடையப்பெற்றவராகவும், குறைபாடுகள் அற்றவராகவும் இருப்பதால் அவர் 'ஸித்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸித்தி என்றால் அடையப்படக்கூடியவை. ஸித்தன் என்றால் அவை அனைத்தையும் அடைந்தவர் என்று பொருள். பகவான் அனைத்தையும் எல்லா காலங்களிலும், முழுமையாக அடைந்துள்ளதால் அவர் ஸித்த: என்று அழைக்கப்படுகிறார்.

98. ஓம் ஸித்தயே நம:
ஸர்வவஸ்துஶு அனைத்துப் பொருட்களிலும் (அனைவருக்குள்ளும்)
ஸம்வித்ரூபத்வாத் ஞான வடிவாய் இருப்பதாலும் 
நிரதிஶயரூபத்வாத் அனைத்திலும் சிறந்தவராய் இருப்பதாலும்
ஃபலரூபத்வாத் வா அனைவருக்கும் அவரவரது வினைப்பயங்களுக்கு ஏற்ப அடையப்படக்கூடிய பலனாயும் இருப்பதால் 
ஸித்தி: பகவான் ' ஸித்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்வர்காதீனாம் சுவர்க்கலோகம் முதலிய பலன்கள் 
வினாஶித்வாத் நிரந்தரமானவை அல்ல; அவை (கல்பத்தின் முடிவில்) அழியக்கூடியவை 
அஃபலத்வம் எனவே, அவை உண்மையில் பலன்களே அல்ல (பகவானே அடையத் தகுந்த, நிரந்தர பலனாவார். மற்றவை எல்லாம் அழியக்கூடியவை. அவற்றில் பற்றுக் கொள்ளுதல் கூடாது என்பதே இந்த வாக்கியத்தின் தாத்பர்யமாகும்).

பகவானே அனைத்து பொருட்களுக்குள்ளும் (அனைவருக்குள்ளும்) ஞான வடிவானவராய், அனைத்திலும் சிறந்தவராய், அனைவராலும் அவரவரது வினைகளுக்கேற்ப அடையக்கூடிய பலனாயும் இருக்கிறார். எனவே, அவர் 'ஸித்தி:' (அடையக்கூடிய இலக்கு) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். நாம் அனைவரும் அழியக்கூடிய சுவர்க்கம் முதலிய பலன்களில் பற்று வைக்காது, அழியாத, சிறந்த பலனாகிய பகவானிடமே பற்றுக் கொள்ள வேண்டும்.

சனி, நவம்பர் 24, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 96

11. அஜ: ஸர்வேஶ்வர: ஸித்த: ஸித்தி: ஸர்வாதிரச்யுத: |

வ்ருஶாகபிரமேயாத்மா ஸர்வயோகவிநி:ஸ்ருத:  ||

இந்த பதினோராவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 
95. அஜ:, 96. ஸர்வேஶ்வர:, 97. ஸித்த:, 98. ஸித்தி:, 99. ஸர்வாதி:, 100. அச்யுத:
 |
101. வ்ருஶாகபி:, 102. அமேயாத்மா, 103. ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

இந்த ஸ்லோகத்தில் ஒன்பது திருநாமங்கள் உள்ளன. அவற்றில் சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

95. ஓம் அஜாய நம:
ந ஜாயத எவர் பிறப்பதே இல்லையோ 
இதி அஜ: அந்த பகவான் 'அஜ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரப்ரஹ்மமான பகவான் எப்பொழுதும் இருக்கிறார். எனவே, அவர் பிறப்பதில்லை. இவ்வாறு, பிறப்பே இல்லாத பகவான் 'அஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ந ஜாதோ ந ஜனிஶ்யதே'
(பரப்ரஹ்மம்) முன்னர் பிறந்ததுமில்லை; இனி பிறக்கப்போவதுமில்லை.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ந ஹி ஜாதோ ந ஜாயோSஹ ந ஜனிஶ்யே கதாசன |
க்ஷேத்ரக்ஞய: ஸர்வ பூதானா தஸ்மாதஹமஜ: ஸ்ம்ருத: || 
(ஶாந்தி பர்வம் 342.74)
நான் முன்பு பிறந்தேனுமல்ல; இப்பொழுது பிறக்கவுமில்லை; இனி ஒருகாலத்திலும் பிறக்கப்போவதுமில்லை. நான் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உறைகிறேன். அவற்றை (அந்த ஜீவராசிகளை) அறிகிறேன். எனவே, என்னை 'அஜ:' (பிறப்பற்றவன்) என்று கூறுகிறார்கள்.

இதி மஹாபாரதே | இவ்வாறு மஹாபாரதத்தில் (ஶாந்தி பர்வத்தில்) கூறப்பட்டுள்ளது.

96. ஓம் ஸர்வேஶ்வராய நம:
ஸர்வேஶாம் அனைத்து 
ஈஶ்வராணாம் ஈஶ்வரர்களுக்கும் (அனைவரையும் ஆள்பவர்களுக்கும்)
ஈஶ்வர: ஈஶ்வரனாக இருப்பதால் (அந்த ஈஶ்வரர்களையும் ஆள்பவராக இருப்பதால்
ஸர்வேஶ்வர: பகவான் 'ஸர்வேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

உலகில் சாதாரணமாக தலைவர்கள், அரசர்கள் முதலியோரைக் காண்கிறோம். இவர்கள் அனைவரும், தத்தம் ஆளுகைக்குட்பட்ட இடங்களுக்கு ஈஶ்வரர்கள் ஆவர். இவ்வாறு, ப்ரபஞ்சம் அனைத்திலும் கூட பல ஈஶ்வரர்கள் இருக்கிறார்கள். இத்தகைய ஈஶ்வரர்கள் அனைவரையும் அடக்கி ஆள்பவராக இருப்பதால், பகவான் 'ஸர்வேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

'ஏஶ ஸர்வேஶ்வர:’ (மாண்டூக்ய உபநிஶத் 6)
இவர் (பரப்ரஹ்மம்) அனைத்தையும் ஆள்பவர்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.