11. அஜ: ஸர்வேஶ்வர: ஸித்த: ஸித்தி: ஸர்வாதிரச்யுத:
வ்ருஶாகபிரமேயாத்மா ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||
இந்த பதினொன்றாவது ஸ்லோகத்தில் ஒன்பது (9) திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
95. அஜ:, 96. ஸர்வேஶ்வர:, 97. ஸித்த:, 98. ஸித்தி:, 99. ஸர்வாதி:, 100. அச்யுத:
|
101. வ்ருஶாகபி:, 102. அமேயாத்மா, 103. ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
99. ஓம் ஸர்வாதயே நம:
ஸர்வபூதானாம்
அனைத்து
ஜீவராசிகளின்
ஆதிகாரணத்வாத் மூலகாரணமாய்
இருப்பதால்
ஸர்வாதி: பகவான் 'ஸர்வாதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து
ஜீவராசிகளின் மூலகாரணமாய் இருப்பதால் பகவான் 'ஸர்வாதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
100. ஓம் அச்யுதாய நம:
ஸ்வரூபஸாமர்த்யான்
தன் இயற்கையான
வலிமை (மற்றும்
சக்தியிலிருந்து)
ந ச்யுதோ அவர் என்றும் நழுவியதில்லை
ந ச்யவதே அவர் இனி நழுவப்போவதுமில்லை
இதி அச்யுத: எனவே, பகவான் 'அச்யுதன்'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தன்
இயற்கையான வலிமை (மற்றும் சக்தியிலிருந்து) முன்பு என்றும்
நழுவியதில்லை, இனி நழுவப்போவதுமில்லை. எனவே,
அவர் 'அச்யுதன்' என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்.
'ஶாஶ்வதம்
ஶிவமச்யுதம்' (நாராயண உபநிஶத் 13.1)
நாராயண
உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அவர் (பரப்ரஹ்மம்) என்றும்
மங்களமானவராகவும், வழுவாதவராகவும் இருக்கிறார்.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள்
மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
ததா ச
பகவத்வசனம் | மேலும், பகவான்
ஸ்ரீக்ருஷ்ணர் கூறுகிறார்:
'யஸ்மான்னச்யுதபூர்வோSஹமச்யுதஸ்தேன கர்மணா'
நான்
என் கடமைகளிலிருந்து முன்பு எப்பொழுதும் நழுவியதில்லை. எனவே,
நான் "அச்யுதன்" ஆவேன்.
இதி | இவ்வாறு பகவான்
ஸ்ரீக்ருஷ்ணர் கூறியுள்ளார்.
இதி
நாம்னாம் ஶதமாத்யம் விவ்ருதம் | இத்துடன் (அச்யுத:
என்னும் இந்த திருநாமம் வரையில்) முதல் நூறு
திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.
இந்த முதல் நூறு திருநாமங்களை காஞ்சி ஆச்சார்யாள் மற்றும் கனகவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீவீரராகவ பெருமாளின் திருவடிகளுக்கு சமர்ப்பிக்கின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக