20. மஹேஶ்வாஸோ மஹீபர்த்தா ஸ்ரீநிவாஸ: ஸதாம்கதி:|
அநிருத்த: ஸுரானந்தோ கோவிந்தோ கோவிதாம்பதி:
இந்த இருபதாவது சுலோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
இந்த சுலோகத்தில் உள்ள திருநாமங்களும், அவற்றின் விளக்கமும்:
183. ஓம் ஸ்ரீநிவாஸாய நம:
வக்ஷஸ்ய திருமார்பில்
அநபாயினி அவரைவிட்டு என்றும் அகலாது
ஸ்ரீர்வஸதி மஹாலக்ஷ்மி வசிக்கிறாளோ
ஸ: ஸ்ரீநிவாஸ: (அவர்) பகவான் 'ஸ்ரீநிவாசன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாள்
நித்யைவேஶா ஜகன்மாதா
விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயினி (ஸ்ரீவிஶ்ணு புராணம்)
அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல்மங்கை உறை மார்பா (திருவாய்மொழி)
184. ஓம் ஸதாம்கதயே நம:
ஸதாம் வைதிகானாம் 'ஸத்துக்கள்' - வேதத்தையும், அதில் கூறியுள்ள தர்மங்களையும் பின்பற்றுபவர்கள்
ஸாதூனாம் அத்தகைய ஸாதுக்களின்
புருஶார்த்தசாதன (அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய) நால்வகை நலன்களையும்
ஹேது: வழங்குபவராய் இருப்பதால்
ஸதாம்கதி: பகவான் 'ஸதாம்கதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வேதத்தில் நம்பிக்கைக் கொண்டு, அதன் வழிநடக்கும் ஸாதுக்களின் அனைத்து
வகை நலன்களையும் வழங்குபவராய் இருப்பதால் பகவான் 'ஸதாம்கதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஹேது என்றால் காரணம், உதவி செய்பவர் என்று பொருள். சாதுக்களுக்கு அவரே கதி. எனவே, அவர்களுக்கு அனைத்தையும் பகவானே வழங்குகிறார்.
ந கேனாபி ஒருபொழுதும் இயலாது
ப்ராதுர்பாவேஶு (அவர்) தோன்றுமிடத்து
நிருத்த இதி தடுத்தல்
அநிருத்த: எனவே, பகவான் 'அநிருத்தன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தோன்றுமிடத்து அவரை தடுக்க
யாராலும் இயலாது.
எனவே, அவர் 'அநிருத்தன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அவரை மட்டுமல்ல, அவரது ஸங்கல்பத்தையும் எவராலும் தடுக்க இயலாது.
186. ஓம் ஸுரானந்தாய நம:
ஸுர தேவர்களுக்கு
ஆனந்தயதீதி ஆனந்தத்தை அளிப்பதால்
ஸுரானந்த: பகவான் 'ஸுரானந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸுரர்கள் என்றழைக்கப்படும்
தேவர்களுக்கு ஆனந்தத்தை அளிப்பதால் பகவான் 'ஸுரானந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அவரது அனைத்து
அவதாரங்களுமே தேவர்களின் துயர் துடைக்க, அவர்களது வேண்டுதலின்படியே
நிகழ்கின்றன.