வியாழன், செப்டம்பர் 03, 2020

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 136

  19. மஹாபுத்திர்மஹாவீர்யோ மஹாஶக்திர்மஹாத்யுதி: |

அநிர்தேஶ்யவபு: ஸ்ரீமானமேயாத்மா மஹாத்ரித்ருக் ||

இந்த பத்தொன்பதாவது சுலோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

173. மஹாபுத்தி:, 174. மஹாவீர்ய:, 175. மஹாஶக்தி:, 176. மஹாத்யுதி: |
177. அநிர்தேஶ்யவபு:, 178. ஸ்ரீமான், 179. அமேயாத்மா, 180. மஹாத்ரித்ருக் ||

இந்த சுலோகத்தில் உள்ள திருநாமங்களும், அவற்றின் விளக்கமும் (சுருக்கமாக):

173ஓம் மஹாபுத்தயே நம:
புத்திமதாமபி புத்திமத்வாத் மஹாபுத்தி: 
அனைவரைக் காட்டிலும் அறிவிற் சிறந்தவராக இருப்பதால் பகவான் 'மஹாபுத்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

174ஓம் மஹாவீர்யாய நம:
மஹத் உத்பத்திகாரணம் அவித்யாலக்ஷணம் வீர்யமஸ்யேதி 
மஹாவீர்ய:
நமக்கு இந்த பிறவி உருவாவதற்குக் காரணமான அஞ்ஞானம் அவரது வீர்யமாகும்எனவேபகவான் 'மஹாவீர்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

175ஓம் மஹாஶக்தயே நம:
மஹதி ஶக்திஸாமர்த்யம் அஸ்யேதி மஹாஶக்தி: 
மிகவும் திறமைசாலியானவர்எனவேபகவான் 'மஹாஶக்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

176ஓம் மஹாத்யுதயே நம:

மஹதி த்யுதிர் பாஹ்யாப்யந்தரா ச அஸ்யேதி மஹாத்யுதி:

பகவான் அகமும் (ஞானத்தாலும்), புறமும் (திருமேனி காந்தியாலும்ஒளிபொருந்தியவர்எனவேஅவர் 'மஹாத்யுதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

177ஓம் அநிர்தேஶ்யவபுஶே நம:

இதம் ததிதி நிர்தேஶ்டும் யன் ந ஶக்யதே பரஸ்மை ஸ்வஸம்வேத்யத்வாத்  அநிர்தேஶ்யம் வபுரஸ்யேதி அநிர்தேஶ்யவபு: பகவான் 'அநிர்தேஶ்யவபு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இத்தகையது என்று தீர்மானிக்க இயலாதநம்மால் அறிந்துகொள்ள முடியாது உயர்ந்த வஸ்துவிற்கு 'அநிர்தேஶ்யம்என்று பெயர்அத்தகைய, (நம்மால் அறிந்துகொள்ள இயலாததிருமேனியைக் கொண்டவராதலால் பகவான் 'அநிர்தேஶ்யவபு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

178ஓம் ஸ்ரீமதே நம:

ஐஸ்வர்யலக்ஷணா ஸமக்ரா ஸ்ரீர் யஸ்ய ஸ்ரீமான் 

அனைத்து செல்வங்களின் வடிவான திருமகள்பகவானின் பகவானை விட்டு என்றும் பிரியாமல் அவருடனேயே வசிக்கிறாள். எனவேபகவான் 'ஸ்ரீமான்' (திருவுடையவர்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

179ஓம் அமேயாத்மனே நம:

ஸர்வைப்ராணிபிர் அமேயா புத்திராத்மா யஸ்ய ஸ அமேயாத்மா 

பகவானின் ஞானத்தையும்தன்மையையும் யாராலும் அளவிட முடியாதுஎனவேஅவர் 'அமேயாத்மாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

180ஓம் மஹாத்ரித்ருஶே நம:

மஹாந்தம் அத்ரிம் கிரிம் மந்தரம் கோவர்த்தனம் ச அம்ருதமதனே கோரக்ஷணே ச த்ருத்வான் இதி மஹாத்ரித்ருக் 

பாற்கடலில் அமுதம் கடைந்த பொழுது மந்தர மலைஆநிரைகளைக் காத்த பொழுது கோவர்தனம் ஆகிய மிகப்பெரிய மலைகளைத் தாங்கியவரானதால் பகவான் 'மஹாத்ரித்ருக்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக