19. மஹாபுத்திர்மஹாவீர்யோ மஹாஶக்திர்மஹாத்யுதி: |
அநிர்தேஶ்யவபு: ஸ்ரீமானமேயாத்மா மஹாத்ரித்ருக் ||
இந்த பத்தொன்பதாவது சுலோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
இந்த சுலோகத்தில் உள்ள திருநாமங்களும், அவற்றின் விளக்கமும் (சுருக்கமாக):
176. ஓம் மஹாத்யுதயே நம:
மஹதி த்யுதிர் பாஹ்யாப்யந்தரா ச அஸ்யேதி மஹாத்யுதி:
பகவான் அகமும் (ஞானத்தாலும்), புறமும் (திருமேனி காந்தியாலும்) ஒளிபொருந்தியவர். எனவே, அவர் 'மஹாத்யுதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
177. ஓம் அநிர்தேஶ்யவபுஶே நம:
இதம் ததிதி நிர்தேஶ்டும் யன் ந ஶக்யதே பரஸ்மை ஸ்வஸம்வேத்யத்வாத் அநிர்தேஶ்யம் வபுரஸ்யேதி அநிர்தேஶ்யவபு: பகவான் 'அநிர்தேஶ்யவபு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இத்தகையது என்று தீர்மானிக்க இயலாத, நம்மால் அறிந்துகொள்ள முடியாது உயர்ந்த வஸ்துவிற்கு 'அநிர்தேஶ்யம்' என்று பெயர். அத்தகைய, (நம்மால் அறிந்துகொள்ள இயலாத) திருமேனியைக் கொண்டவராதலால் பகவான் 'அநிர்தேஶ்யவபு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
178. ஓம் ஸ்ரீமதே நம:
ஐஸ்வர்யலக்ஷணா ஸமக்ரா ஸ்ரீர் யஸ்ய ஸ: ஸ்ரீமான்
அனைத்து செல்வங்களின் வடிவான திருமகள், பகவானின் பகவானை விட்டு என்றும் பிரியாமல் அவருடனேயே வசிக்கிறாள். எனவே, பகவான் 'ஸ்ரீமான்' (திருவுடையவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
179. ஓம் அமேயாத்மனே நம:
ஸர்வை: ப்ராணிபிர் அமேயா புத்திராத்மா யஸ்ய ஸ அமேயாத்மா
பகவானின் ஞானத்தையும், தன்மையையும் யாராலும் அளவிட முடியாது. எனவே, அவர் 'அமேயாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
180. ஓம் மஹாத்ரித்ருஶே நம:
மஹாந்தம் அத்ரிம் கிரிம் மந்தரம் கோவர்த்தனம் ச அம்ருதமதனே கோரக்ஷணே ச த்ருத்வான் இதி மஹாத்ரித்ருக்
பாற்கடலில் அமுதம் கடைந்த பொழுது மந்தர மலை, ஆநிரைகளைக் காத்த பொழுது கோவர்தனம் ஆகிய மிகப்பெரிய மலைகளைத் தாங்கியவரானதால் பகவான் 'மஹாத்ரித்ருக்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக