ஞாயிறு, செப்டம்பர் 06, 2020

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 137

20. மஹேஶ்வாஸோ மஹீபர்த்தா ஸ்ரீநிவாஸ: ஸதாம்கதி:|

அநிருத்த: ஸுரானந்தோ கோவிந்தோ கோவிதாம்பதி:

இந்த இருபதாவது சுலோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

181. மஹேஶ்வாஸ:, 182. மஹீபர்த்தா, 183. ஸ்ரீநிவாஸ:, 184. ஸதாம்கதி: |
185. அநிருத்த:, 186. ஸுரானந்த:, 187. கோவிந்த:, 188. கோவிதாம்பதி:  ||

இந்த சுலோகத்தில் உள்ள திருநாமங்களும், அவற்றின் விளக்கமும்: 

181. ஓம் மஹேஶ்வாஸாய நம:
மஹான் மிகச்சிறந்த இஶ்வாஸ வில்லை இஶுக்ஷேபோ அம்புகளை எய்யக்கூடிய யஸ்ய ஸ உள்ளவர் (ஆதலால்) மஹேஶ்வாஸ: பகவான் 'மஹேஶ்வாஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மழைநீர்ப் போல அம்புகளை வர்ஶிக்கக்கூடிய 'ஸார்ங்கம்' என்னும் மிகச்சிறந்த வில்லை உடையவராதலால் அவர் 'மஹேஶ்வாஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

182. ஓம் மஹீபர்த்ரே நம:
ஏகார்ணவ ப்ரளய ஜலத்தில் (ஸமுத்ரத்தினுள்) ஆப்லுதாம் அழுந்தி வருந்தியிருந்த தேவீம் மஹீம் ச பூமாதேவியை பபாரேதி (அந்த ஸமுத்ர ஜலத்திலிருந்து) வெளிக்கொணர்ந்து, தாங்கியபடியால் மஹீபர்த்தா பகவான் 'மஹீபர்த்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரளய காலத்தில் ஸமுத்ர ஜலத்தினுள் அழுந்தி, வருந்திக்கொண்டிருந்த பூமாதேவியை அதனின்று வெளிக்கொணர்ந்து, தாங்கிய படியால் பகவான் 'மஹீபர்த்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பூமாதேவியைக் காத்த வரலாறு: ஹிரண்யாக்ஷன் என்னும் அஸுரன் பகவானிடம் பகை கொண்டு, அவரது மனைவியான பூமாதேவியை ப்ரளய ஜலத்தினுள் வைத்தான். வராஹ அவதாரம் எடுத்த பகவான் ஹிரண்யாக்ஷனைக் கொன்று, பூமாதேவியை ப்ரளய கால ஸமுத்ர ஜலத்திலிருந்து மீட்டார். திருவிடந்தை போன்ற தலங்களில், பூமாதேவியை தனது மடியில் தாங்கிய வராஹ ஸ்வாமியை நாம் தரிசிக்கலாம்.

நாச்சியார் திருமொழி: பாசிதூர்ந்து கிடந்த பார்மகளை பண்டொருநாள் மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப் பன்றியாம் தேசுடைய தேவர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக