ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாமத்தின் மூன்றாவது ஸ்லோகமும் அதிலுள்ள திருநாமங்களும் அவற்றின் பொருளும்.
நரஸ்ய ஸிம்ஹஸ்ய சாவயவா யஸ்மின் லக்ஷ்யந்தே தத்வபுர்யஸ்ய ஸ நாரஸிம்ஹவபு:|
யஸ்ய வக்ஷஸி நித்யம் வஸதி ஸ்ரீ: ஸ ஸ்ரீமான் |
அபிரூபா: கேஶா யஸ்ய ஸ கேஶவ: |
3. யோகோ யோகவிதாம் நேதா ப்ரதானபுருஶேஶ்வர: |
நாரஸிம்ஹவபு: ஸ்ரீமான் கேஶவ: புருஶோத்தம: || 3 ||
18. யோக: 19. யோகவிதாம் நேதா 20. ப்ரதானபுருஶேஶ்வர: |
21. நாரஸிம்ஹவபு: 22. ஸ்ரீமான் 23. கேஶவ: 24. புருஶோத்தம: ||
18. ஓம் யோகாய நம:
‘ஞானேந்த்ரியாணி ஸர்வாணி நிருத்ய மனஸா ஸஹ |
ஏகத்வபாவனா யோகா: க்ஷேத்ரஞ்யபரமாத்மனோ: ||'
தத் அவாப்யதயா யோக: |
மனம், மற்றும் அறிவுப்புலன்களை அடக்கி, அவருடன் ஒன்றுபடுதலே யோகமாகும். இத்தகைய யோகத்தால் அடையப்படுவதால், பகவான் "யோக:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
19. ஓம் யோகவிதாம் நேத்ரே நம:
யோகம் விதந்தி விசாரயந்தி லபந்த இதி வா யோகவிதஸ்தேஶாம் நேதா ஞாநினாம் யோகக்ஷேமவஹனாதிநேதி யோகவிதாம் நேதா |
யோகத்தை கற்று, ஆராய்ந்து, உள்ளபடி உணர்ந்த சிறந்த யோகிகளிக்கு, அவர்களின் நன்மை, தீமைகள் ஆகிய அனைத்திற்கும் பொறுப்பேற்று அவர்களை வழிநடத்துவதால் பகவான் "யோகவிதாம் நேதா" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
20. ஓம் ப்ரதானபுருஶேஶ்வராய நம:
ப்ரதானம் ப்ரக்ருதிர்மாயா புருஶோ ஜீவஸ் தயோரீஶ்வர: ப்ரதானபுருஶேஶ்வர: |
ப்ரக்ருதி எனும் ப்ரதானத்தையும், ஜீவாத்மாவாகிய புருஶனையும் தனது ஆளுகைக்குள் வைத்திருப்பதால் (இவை இரண்டிற்கும் ஈஸ்வரனாக இருப்பதால்), பகவான் "ப்ரதானபுருஶேஶ்வர:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
21. ஓம் நாரஸிம்ஹவபுஶே நம:
(நரசிம்ம அவதாரத்தின் பொழுது) அவருடைய உடலில் மனிதர் மற்றும் சிங்கத்தின் உறுப்புகள் ஒன்று சேர்ந்து இருப்பதால் பகவான் 'நாரஸிம்ஹவபு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
22. ஓம் ஸ்ரீமதே நம:
பகவானுடைய திருமார்பில் திருமகள் எப்பொழுதும் நிரந்தரமாக வாழ்வதால் அவர் 'ஸ்ரீமான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
23. ஓம் கேஶவாய நம:
மிகவும் அழகிய தலைமுடியுடன் இருப்பதால் பகவான் 'கேசவன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
யத்வா கஸ்ச அஸ்ச ஈஶஸ்ச த்ரிமூர்த்தய: யத்வஶேன வர்தந்தே ஸ கேஶவ: |
ப்ரஹ்மா, விஶ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் எவருடைய ஆணைக்குட்பட்டு இருக்கின்றனரோ அந்த பரம்பொருள் 'கேசவன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
1
கேஶிவதாத்வா கேஶவ: |
'கேசி' என்ற அசுரனைக் கொன்றபடியால் பகவான் கேசவன் என்று அழைக்கப்படுகிறார்.
24. ஓம் புருஶோத்தமாய நம:
புருஶானாம் உத்தம: புருஶோத்தம: |
புருஶர்களில் உயர்ந்தவர் என்பதால் பகவான் 'புருஶோத்தம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக