4. ஸர்வ: ஶர்வ: ஶிவ: ஸ்தாணுர்பூதாதிர்நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவனோ பர்தா ப்ரபவ: ப்ரபுரீஶ்வர: ||
இந்த நான்காவது ஸ்லோகத்தில் மொத்தம் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
25. ஸர்வ: 26. ஶர்வ:
27. ஶிவ: 28. ஸ்தாணு: 29. பூதாதி: 30. நிதி: அவ்யய:
|
31. ஸம்பவ: 32. பாவன:
33. பர்தா 34. ப்ரபவ: 35. ப்ரபு: 36. ஈஶ்வர: ||
25. ஓம் ஸர்வஸ்மை நம:
அஸதஸ்ச ஸதஸ்சைவ ஸர்வஸ்ய ப்ரபவாப்யயாத் |
ஸர்வஸ்ய ஸர்வதா ஞானாத் ஸர்வமேன ப்ரசக்ஷதே || (மஹாபாரதம் உத்தியோக பர்வம் 7.11)
மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் பகவான் வியாசர் கூறுகிறார்:
அல்லதும், உள்ளதும் ஆகிய அனைத்தின்
பிறப்பிடமாகவும், அவை நிலைபெற்றிருக்கும் இடமாகவும், அழியும் காலத்தில் சென்றும் லயமடையும் இடமாக இருப்பதாலும், அனைத்தையும் (அனைவரையும்) அனைத்து
காலங்களிலும் உள்ளபடி அறிவதாலும் அவரை ‘ஸர்வ’ என்று அழைக்கின்றனர்.
இதி இந்த பகவத்வ்யாஸவசனாத் வ்யாஸ பகவானின் கூற்றின்படி ஸர்வ: பகவான் 'ஸர்வ'
என்று அழைக்கப்படுகிறார் |
மஹாபாரதத்தில்
உள்ள இந்த வ்யாஸ பகவானின் கூற்றின்படி, அனைத்தின் பிறப்பிடமாகவும், அனைத்தையும்
அறிவதாலும், பகவான் 'ஸர்வ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக