17. உபேந்த்ரோ வாமன: ப்ராம்ஶுரமோக: ஶுசிரூர்ஜித: |
151. ஓம் உபேந்த்ராய நம:
அதீந்த்ர: ஸங்க்ரஹ: ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம: ||
இந்த பதினேழாம் ஸ்லோகத்தில் பதினொன்று (11) திருநாமங்கள் உள்ளன:
151. உபேந்த்ர:, 152. வாமன:, 153. ப்ராம்ஶு:, 154. அமோக:, 155. ஶுசி:, 156. ஊர்ஜித: |
157. அதீந்த்ர:, 158. ஸங்க்ரஹ:, 159. ஸர்க:, 160. த்ருதாத்மா, 161. நியம:, 162. யம: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும் (சுருக்கமாக):
151. உபேந்த்ர:, 152. வாமன:, 153. ப்ராம்ஶு:, 154. அமோக:, 155. ஶுசி:, 156. ஊர்ஜித: |
157. அதீந்த்ர:, 158. ஸங்க்ரஹ:, 159. ஸர்க:, 160. த்ருதாத்மா, 161. நியம:, 162. யம: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும் (சுருக்கமாக):
151. ஓம் உபேந்த்ராய நம:
இந்த்ரம் உபகதோSநுஜத்வேனேதி உபேந்த்ர:
இந்திரனுக்குத் தம்பியாக அவதரித்ததால் பகவான் 'உபேந்திரன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
யத்வா உபரி இந்த்ர: உபேந்த்ர:
இந்திரனைக் காட்டிலும் உயர்ந்தவராக (மேம்பட்டவராக) இருப்பதால், பகவான் 'உபேந்திரன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
152. ஓம் வாமனாய நம:
பலிம் வாமனரூபேண யாசிதவான் இதி வாமன:
பகவான், குள்ள வடிவம் கொண்டவராய் (வாமனராய்) அவதரித்து மஹாபலியிடமிருந்து மூன்றடி மண் யாசித்ததால், அவர் 'வாமனர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸம்பஜனீய இதி வா வாமன:
பகவானே அனைத்து போற்றுதலுக்கும் உரியவர். அவ்வாறு, நன்கு போற்றத் தகுந்தவராதலால் பகவான் 'வாமனர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
153. ஓம் ப்ராம்ஶவே நம:
ஸ ஏவ ஜகத்ரயம் க்ரமமாண: ப்ராம்ஶுரபூத் இதி ப்ராம்ஶு:
வாமனனாய் அவதரித்து, மூவுலகையும் தாவி அளக்கும் பொழுது த்ரிவிக்ரமனாய் உயர்ந்து வளர்ந்ததால் பகவான் 'ப்ராம்ஶு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
154. ஓம் அமோகாய நம:
ந மோகம் சேஶ்டிதம் யஸ்ய ஸ: அமோக:
பகவானின் செயல்கள் என்றும் வீணாவதில்லை. எனவே, பகவான் 'அமோக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
155. ஓம் ஶுசயே நம:
ஸ்மரதாம் ஸ்துவதாம் அர்ச்சயதாம் ச பாவனத்வாத் ஶுசி:
பகவானை
நினைத்தலும், துதித்தலும் மற்றும் வழிபடுதலும்
நம்மிடையே உள்ள பாவங்களையும்,
மனதிலுள்ள அழுக்குகளையும் போக்கி
நம்மை தூய்மையாக்குகின்றன.
எனவே, பகவான் 'ஶுசி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
156. ஓம் ஊர்ஜிதாய நம:
பலப்ரகர்ஶஶாத்வாத் ஊர்ஜித:
பகவான்
நினைத்தற்கரிய பலம் பொருந்தியவர்.
எனவே, அவர் 'ஊர்ஜித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
157. ஓம் அதீந்த்ராய நம:
அதீத்யேந்த்ரம் ஸ்திதோ ஞானைஸ்வர்யாதிபி: ஸ்வபாவஸித்தைரிதி அதீந்த்ரிய:
பகவான் தன்னுடைய
இயற்கையான ஞானம்,
செல்வம் முதலிய குணங்களால்
இந்த்ரனுக்கு மேம்பட்டவர்.
எனவே, அவர் 'அதீந்த்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
158. ஓம் ஸங்க்ரஹாய நம:
ஸர்வேஶாம் ப்ரதிஸம்ஹாராத் ஸங்க்ரஹ:
ப்ரளய காலத்தில்
அனைத்து ஜீவராசிகளையும் அழிப்பதால் பகவான் 'ஸங்க்ரஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
159. ஓம் ஸர்காய நம:
ஸ்ருஜ்யரூபதயா ஸர்கஹேதுத்வாத்வா ஸர்க:
படைப்பின்
காரணமாயும், (படைக்கப்பட்டுள்ள) ஸ்ருஷ்டியின் வடிவாகவும் தானே
இருப்பதால், பகவான் 'ஸர்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
160. ஓம் த்ருதாத்மனே நம:
ஏகரூபேண ஜன்மாதிரஹிததயா த்ருத ஆத்மா யேன ஸ த்ருதாத்மா
பிறப்பொன்றுமின்றி, என்றும் மாறாத ஒரே வடிவத்தைக்
உடையவராதலால், பகவான் 'த்ருதாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
161. ஓம் நியமாய நம:
ஸ்வேஶு ஸ்வேஶ்வதிகாரேஶு ப்ரஜா நியமயதீதி நியம:
ஒவ்வொருவரையும், அவரவருக்குரிய அதிகாரங்களில் (பதவிகளில்) நியமிப்பதால், பகவான் 'நியம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
162. ஓம் யமாய நம:
அந்தர்யச்சதீதி யம:
அனைவருக்கும்
அந்தர்யாமியாய் இருந்து அவர்களை ஆள்வதால், பகவான் 'யம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக