23, குருர்குருதமோ தாம: ஸத்ய: ஸத்யபராக்ரம: |
நிமிஶோSநிமிஶ: ஸ்ரக்வீ வாசஸ்பதிருதாரதீ:||
இந்த இருபத்தி மூன்றாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
209. குரு:, 210. குருதம:, 211. தாம, 212. ஸத்ய:, 213. ஸத்யபராக்ரம: |
214. நிமிஶ:, 215. அநிமிஶ:, 216. ஸ்ரக்வீ, 217. வாசஸ்பதிருதாரதீ: ||
இவற்றுள் சில திருநாமங்களையும், அவற்றின் பொருளையும் இன்று அனுபவிக்கலாம்.
209. ஓம் குரவே நம:
ஸர்வவித்யானாமுபதேஶ்ட்டத்வாத் அனைத்து வித்தைகளையும் உபதேசிக்கும் ஆசிரியராக இருப்பதாலும்
ஸர்வேஶாம் அனைவரையும் (அனைத்தையும்)
ஜனகத்வாத்வா தோற்றுவிக்கும் தந்தையாக இருப்பதாலும்
குரு: பகவான் 'குரு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து வித்தைகளையும் உபதேசிக்கும் ஆசிரியராக இருப்பதாலும், அனைவரையும் (அனைத்தையும்) தோற்றுவிக்கும் தந்தையாக இருப்பதாலும் பகவான் 'குரு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
210. ஓம் குருதமாய நம:
விரிஞ்ச்யாதீனாமபி நான்முகக் கடவுளான ப்ரஹ்மா முதலானோருக்கும்
ப்ரஹ்மவித்யாஸம்ப்ரதாயகத்வாத் ப்ரஹ்ம ஞானத்தை தந்தருளுவதால்
குருதம:
பகவான் 'குருதம' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைவரையும் படைப்பதால் நான்முகக் கடவுளான ப்ரஹ்மா அனைவருக்கும் குருவாகக் கருதப்படுகிறார். அந்த ப்ரஹ்மாவே, ப்ரஹ்ம ஞானத்தை பகவானிடமிருந்துதான் கற்கிறார். இவ்வாறு, ப்ரஹ்மா முதலானோருக்கும் ப்ரஹ்ம ஞானத்தை தந்தருளுவதால், பகவான் 'குருதம' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தம
என்றால் 'உயர்ந்த' அல்லது 'சிறந்த' என்று பொருள். குருதம: என்றால் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர், அனைத்து ஆசிரியர்களைக்
காட்டிலும் உயர்ந்தவர் என்று பொருள்.
'யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்' (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.18)
ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவர் முதன்முதலில் நான்முகனைப் படைத்தாரோ…
இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி பகவான் 'குருதம' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக