செவ்வாய், மார்ச் 30, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 153

23, குருர்குருதமோ தாம: ஸத்ய: ஸத்யபராக்ரம: |

நிமிஶோSநிமிஶ: ஸ்ரக்வீ வாசஸ்பதிருதாரதீ:||

இந்த இருபத்தி மூன்றாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

209. குரு:, 210. குருதம:, 211. தாம, 212. ஸத்ய:, 213. ஸத்யபராக்ரம: |

214. நிமிஶ:, 215. அநிமிஶ:, 216. ஸ்ரக்வீ, 217. வாசஸ்பதிருதாரதீ||

இவற்றுள் சில திருநாமங்களையும், அவற்றின் பொருளையும் இன்று அனுபவிக்கலாம். 

213. ஓம் ஸத்யபராக்ரமாய நம:

ஸத்ய: அவிதத: உண்மையான, என்றும் வீணாகாத 

பராக்ரமோ யஸ்ய ஸ

வீரத்தை உடையவராதலால் 

ஸத்யபராக்ரம: பகவான் 'ஸத்யபராக்ரம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் சக்தியும், வீரமும் என்றும் மாறாதவை (நித்தியமானவை). அவை ஒரு நாளும் வீண்போவதில்லை. எனவே, அவர் 'ஸத்யபராக்ரம:' (உண்மையான வீரமுடையவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

214. ஓம் நிமிஶாய நம:

நிமிலிதே மூடியுள்ளன 

யதோ நேத்ரே எவரது (அவரது) கண்கள் 

யதோ யோக நித்ராரதஸ்ய யோக நித்திரையின் பொழுது 

அதோ நிமிஶ: எனவே, பகவான் 'நிமிஶ:' (கண்களை மூடியுள்ளவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் யோக நித்திரைக் கொள்ளும் பொழுது அவரது கண்கள் மூடியுள்ளன. எனவே, அவர் 'நிமிஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக