12. வஸுர்வஸுமனா: ஸத்ய: ஸமாத்மா ஸம்மித: ஸம: |
அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஶகர்மா வ்ருஶாக்ருதி: ||
இந்த பன்னிரெண்டாவது ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன. :
104. வஸு:, 105. வஸுமனா, 106. ஸத்ய:, 107. ஸமாத்மா, 108. ஸம்மித:, 109. ஸம: |
110. அமோக:, 111. புண்டரீகாஷ:, 112. வ்ருஶகர்மா, 113. வ்ருஶாக்ருதி: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
111. ஓம் புண்டரீகாஷாய நம:
ஹ்ருதயஸ்தம் (ஒவ்வொருவருடைய
இதயத்தினுள்ளும்)
புண்டரீகம்
(உள்ள) தாமரையில்
அஶ்னுதே வ்யாப்னோதி நிறைந்து
தத்ரோபலக்ஷித (அந்த இதயத் தாமரையில்)
காட்சி அளிப்பதால்
இதி புண்டரீகாக்ஷ:
பகவான் 'புண்டரீகாக்ஷ:'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தன்னை
த்யானிப்பவரின் இதயத் தாமரையில் நிறைந்து காட்சி அளிப்பதால் அவர் 'புண்டரீகாக்ஷன்'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
புண்டரீக
- இதயத்தாமரை + அஶ்னுதே - காட்சி அளிக்கிறார் = புண்டரீகாக்ஷ:
''யத்புண்டரீகம்
புரமத்யஸக்ஸ்தம்'
(அந்தப் பரப்ரஹ்மம்)
இதயத் தாமரையின் நடுவில் வீற்றிருக்கிறார்.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள்
கூறுகின்றன.
புண்டரீகாகாரே தாமரை இதழ்களை ஒத்த
உபே இரண்டு
அக்ஷிணீ திருக்கண்களை
அஸ்யேதி வா உடையவராதலால்
புண்டரீகாக்ஷ:
பகவான் 'புண்டரீகாக்ஷ:'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானின் இரண்டு
திருக்கண்களும் தாமரை இதழ்களைப் போன்று அழகாக உள்ளதால், அவர் 'புண்டரீகாக்ஷன்' என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்.
புண்டரீக
- தாமரை (இதழ்கள்) + அக்ஷிணீ - இரண்டு திருக்கண்கள் = புண்டரீகாக்ஷ:
112. ஓம் வ்ருஶகர்மணே நம:
தர்மலக்ஷணம் தர்மத்தின் உருவமாக (தர்மத்திற்கு
விளக்கமாக)
கர்மாஸ்யேதி
அவருடைய செயல்கள் இருப்பதால்
வ்ருஶகர்மா பகவான் 'வ்ருஶகர்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானின் செயல்கள்
அனைத்தும் தர்மமே வடிவானவை. எனவே, அவர் 'வ்ருஶகர்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வ்ருஶ - தர்மம் + கர்மா - செயல்கள் = வ்ருஶகர்மா
113. ஓம் வ்ருஶாக்ருதயே நம:
தர்மார்த்தம் தர்மத்திற்காக (தர்மத்தை
நிலைநிறுத்தும் பொருட்டு)
ஆக்ருதி: ஶரீரம் உடலை ('ஆக்ருதி' என்றால் உடல்
என்று பொருள்)
யஸ்யேதி
ஸ அவர் தரிப்பதால் (எவர் தரிக்கிறாரோ அந்த
பகவான்)
வ்ருஶாக்ருதி:
பகவான் 'வ்ருஷாக்ருதி:'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தர்மத்திற்காகவும், தர்மத்தை
நிலைநிறுத்துவதற்காகவுமே பகவான் ஒரு உடலை தரிக்கிறார் (அவதாரம்
எடுக்கிறார்). எனவே, அவர் 'வ்ருஶாக்ருதி:' என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வ்ருஶ - தர்மம் + ஆக்ருதி - உடல் = வ்ருஶாக்ருதி:
‘தர்மம் ஸம்ஸ்தாபனார்த்தாய
ஸம்பவாமி யுகே யுகே’ (ஸ்ரீமத் பகவத்கீதை 4.8)
ஸ்ரீ
பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: அறத்தை நிலைநிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்
இதி
பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக