ஞாயிறு, மார்ச் 17, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 106

12. வஸுர்வஸுமனா: ஸத்ய: ஸமாத்மா ஸம்மித: ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஶகர்மா வ்ருஶாக்ருதி: ||

இந்த பன்னிரெண்டாவது ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:

104. வஸு:, 105. வஸுமனா, 106. ஸத்ய:, 107. ஸமாத்மா, 108. ஸம்மித:, 109. ஸம: |
110. அமோக:, 111. புண்டரீகாஷ:, 112. வ்ருஶகர்மா, 113. வ்ருஶாக்ருதி: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கங்களையும் மீண்டும் ஒரு முறை பாப்போம்.

104ஓம் வஸவே நம:
வஸந்தி ஸர்வபூதான்யத்ர தேஶ்வயமபி வஸதீதி வா வஸு: 
அனைத்து ஜீவராசிகளும் (இந்தப் ப்ரபஞ்சம் உட்படபகவானுக்குள் வசிக்கின்றனஅனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் பகவான் அவற்றின் உள்ளுறை ஆத்மாவாக (அந்தராத்மாவாகவசிக்கின்றார்இவ்விரண்டு காரணங்களுக்காகவும்பகவான் 'வஸு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'வஸூனாம் பாவகஸ்சாஸ்மி' (ஸ்ரீமத் பகவத்கீதை 10.23)
ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்:
வஸுக்களில் நான் தீ.
இத்யுக்தோ வா வஸு: 
இங்கு (ஸ்ரீமத் பகவத்கீதையில்குறிப்பிட்டுள்ளபடி அக்னியின் (தீயின்வடிவாய் இருப்பதால் பகவான் 'வஸுஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

105ஓம் வஸுமனஸே நம:
வஸுஶப்தேன தனவாசினா ப்ராஶஸ்த்யம் லக்ஷ்யதே ப்ரஶஸ்தம் மனோ யஸ்ய  வஸுமனா: ராக த்வேஶாதிபி க்லேஶைர் மதாதிபிர் உபக்லேஶைர் யதோ ந கலுஶிதம் சித்தம் ததஸ்தன்மனப்ரஶஸ்தம்
'வஸுஎன்ற சொல் செல்வம் (தனம்என்ற பொருளின் மூலம்சிறந்த பொருட்கள் அனைத்தையும் குறிக்கிறதுவிருப்புவெறுப்புக்கள்கர்வம் போன்ற தீய எண்ணங்களால் விகாரமடையாத மனதை உடையவராதலால்,பகவான் 'மிகச்சிறந்த மனமுடையவர்என்ற பொருளில் 'வஸுமனாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


106ஓம் ஸத்யாய நம:
அவிததரூபத்வாத் பரமாத்மா ஸத்ய: 
உண்மையே வடிவாக இருப்பதால் பரமாத்மாவான பகவான் ஸ்ரீவிஶ்ணு 'ஸத்ய'என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மூர்த்த அமூர்த்தாத்மகத் வாத் வா ஸத்ய:
பரப்ரஹ்மமான பகவான் ஸ்தூல வடிவாயும்ஸூக்ஷ்ம வடிவாயும் இருப்பதால்'ஸத்யஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸத் இதி ப்ராணா: தி இதி அன்னம் யம் இதி திவாகரஸ்தேன ப்ராணான்னாதித்யரூபாத்வா ஸத்ய: 
பகவான் 'என்ற ப்ராணன் (மூச்சுக்காற்று), 'த்என்ற அன்னம் (உணவுமற்றும்'என்ற சூரியன் ஆகிய அனைத்துமாக இருப்பதால் (அல்லதுஇவை அனைத்துமாய் இருந்து நமக்கு ஊட்டமளிப்பதால்), அவர் 'ஸத்யஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸத்ஸு ஸாதுத்வா ஸத்ய: 
மற்றவர்களுக்கு என்றும் நன்மையையே விழையும் ஸாதுக்களுக்கு பகவானும் நன்மையே வடிவானவராய்க் காட்சி அளிப்பதால்அவர் 'ஸத்யஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


107ஓம் ஸமாத்மனே நம: 
ஸம ஆத்மா யஸ்ய ராக த்வேஶாதிபிர் அதூஶித ஸமாத்மா ஸர்வபூதேஶு ஸம ஏக ஆத்மா வா 
பகவானின் மனம் விருப்புவெறுப்புக்கள் என்ற களங்கங்கள் அற்றதுஎனவே,அவர் அனைத்து ஜீவராசிகளையும் (விருப்பு வெறுப்புகளற்றுஒன்றாகவே பார்க்கிறார்எனவேபகவான் 'ஸமாத்மாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

108ஓம் ஸம்மிதாய நம: / ஓம் அஸம்மிதாய நம:
ஸர்வைர் அப்யர்தஜாதை: பரிச்சின்ன: ஸம்மித: 
பகவான் அனைத்துப் பதார்த்தங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார்எனவே (அப்பதார்த்தங்களைக் கொண்டுஅவரை அளவிடமுடியும்அறியமுடியுமாதலால் அவர் 'ஸம்மித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வைர் அபரிச்சின்னோSமித இதி அஸம்மித: 
பகவான் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருந்தாலும்அவர் எவற்றுடனும் தொடர்பின்றி இருக்கிறார்எனவேஅவரை எதைக் கொண்டும் அடக்கிவிடமுடியாதுஅளவிடமுடியாதுஎனவேபகவான் 'அஸம்மித:' என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.


109ஓம் ஸமாய நம:
ஸர்வகாலேஶு ஸர்வவிகார ரஹிதத்வாத் ஸம: 
பகவான் எக்காலத்திலும் எவ்வித மாறுபாடுகளுக்கும் உட்படுவதில்லைஎனவே,அவர் 'ஸம:' (எப்பொழுதும் மாறாதவர்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மயா லக்ஷ்ம்யா ஸஹ வர்தத இதி வா ஸம:
ம என்று அழைக்கப்படும் மஹாலக்ஷ்மியுடன் என்றும் கூடியிருப்பதால் பகவான்'ஸம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

110ஓம் அமோகாய நம:
பூஜித: ஸ்துத: ஸம்ஸ்ம்ருதோ வா ஸர்வஃபலம் ததாதி வா ந வ்ருதா கரோதீதி அமோக: 
பகவானுக்கு செய்யப்படும் வழிபாடுதுதி மற்றும் அவரை மனதாற நினைத்தல் ஆகிய நற்செயல்கள் ஒருபோதும் வீணாவதில்லை (பகவான் அவற்றை வீணாக விடுவதில்லை). அவற்றிற்குண்டான நற்பலன்களை அவர் வாரி வழங்குகிறார்.எனவேபகவான் 'அமோக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவிதத ஸங்கல்பாத் வா அமோக:
பகவானின் எண்ணங்களும்விருப்பங்களும் எப்பொழுதும் ஈடேறுகின்றன.எனவேபகவான் 'அமோக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

111ஓம் புண்டரீகாஷாய நம:
ஹ்ருதயஸ்தம் புண்டரீகம் அஶ்னுதே வ்யாப்னோதி தத்ரோபலக்ஷித இதி புண்டரீகாக்ஷ: 
பகவான் தன்னை த்யானிப்பவரின் இதயத் தாமரையில் நிறைந்து காட்சி அளிப்பதால் அவர் 'புண்டரீகாக்ஷன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

புண்டரீகாகாரே உபே அக்ஷிணீ அஸ்யேதி வா புண்டரீகாக்ஷ: 
பகவானின் இரண்டு திருக்கண்களும் தாமரை இதழ்களைப் போன்று அழகாக உள்ளதால்அவர் 'புண்டரீகாக்ஷன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

112ஓம் வ்ருகர்மணே நம:
தர்மலக்ஷணம் கர்மாஸ்யேதி வ்ருகர்மா 
பகவானின் செயல்கள் அனைத்தும் தர்மமே வடிவானவைஎனவேஅவர்'வ்ருகர்மாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

113ஓம் வ்ருஶாக்ருதயே நம:
தர்மார்த்தம் ஆக்ருதிஶரீரம் யஸ்யேதி  வ்ருஶாக்ருதி:
தர்மத்திற்காகவும்தர்மத்தை நிலைநிறுத்துவதற்காகவுமே பகவான் ஒரு உடலை தரிக்கிறார் (அவதாரம் எடுக்கிறார்). எனவேஅவர் 'வ்ருஶாக்ருதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக