12. வஸுர்வஸுமனா: ஸத்ய: ஸமாத்மா ஸம்மித: ஸம: |
அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஶகர்மா வ்ருஶாக்ருதி: ||
இந்த பன்னிரெண்டாவது ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:
104. வஸு:, 105. வஸுமனா, 106. ஸத்ய:, 107. ஸமாத்மா, 108. ஸம்மித:, 109. ஸம: |
110. அமோக:, 111. புண்டரீகாஷ:, 112. வ்ருஶகர்மா, 113. வ்ருஶாக்ருதி: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கங்களையும் மீண்டும் ஒரு முறை பாப்போம்.
104. ஓம் வஸவே நம:
வஸந்தி ஸர்வபூதான்யத்ர தேஶ்வயமபி வஸதீதி வா வஸு:
அனைத்து ஜீவராசிகளும் (இந்தப் ப்ரபஞ்சம் உட்பட) பகவானுக்குள் வசிக்கின்றன. அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் பகவான் அவற்றின் உள்ளுறை ஆத்மாவாக (அந்தராத்மாவாக) வசிக்கின்றார். இவ்விரண்டு காரணங்களுக்காகவும், பகவான் 'வஸு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'வஸூனாம் பாவகஸ்சாஸ்மி' (ஸ்ரீமத் பகவத்கீதை 10.23)
ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்:
வஸுக்களில் நான் தீ.
இத்யுக்தோ வா வஸு:
இங்கு (ஸ்ரீமத் பகவத்கீதையில்) குறிப்பிட்டுள்ளபடி அக்னியின் (தீயின்) வடிவாய் இருப்பதால் பகவான் 'வஸு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
105. ஓம் வஸுமனஸே நம:
வஸுஶப்தேன தனவாசினா ப்ராஶஸ்த்யம் லக்ஷ்யதே ப்ரஶஸ்தம் மனோ யஸ்ய ஸ வஸுமனா: ராக த்வேஶாதிபி க்லேஶைர் மதாதிபிர் உபக்லேஶைர் யதோ ந கலுஶிதம் சித்தம் ததஸ்தன்மன: ப்ரஶஸ்தம்
'வஸு' என்ற சொல் செல்வம் (தனம்) என்ற பொருளின் மூலம், சிறந்த பொருட்கள் அனைத்தையும் குறிக்கிறது. விருப்பு, வெறுப்புக்கள், கர்வம் போன்ற தீய எண்ணங்களால் விகாரமடையாத மனதை உடையவராதலால்,பகவான் 'மிகச்சிறந்த மனமுடையவர்' என்ற பொருளில் 'வஸுமனா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
106. ஓம் ஸத்யாய நம:
அவிததரூபத்வாத் பரமாத்மா ஸத்ய:
உண்மையே வடிவாக இருப்பதால் பரமாத்மாவான பகவான் ஸ்ரீவிஶ்ணு 'ஸத்ய'என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மூர்த்த அமூர்த்தாத்மகத் வாத் வா ஸத்ய:
பரப்ரஹ்மமான பகவான் ஸ்தூல வடிவாயும், ஸூக்ஷ்ம வடிவாயும் இருப்பதால்'ஸத்ய' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸத் இதி ப்ராணா: தி இதி அன்னம் யம் இதி திவாகரஸ்தேன ப்ராணான்னாதித்யரூபாத்வா ஸத்ய:
பகவான் 'ஸ' என்ற ப்ராணன் (மூச்சுக்காற்று), 'த்' என்ற அன்னம் (உணவு) மற்றும்'ய' என்ற சூரியன் ஆகிய அனைத்துமாக இருப்பதால் (அல்லது, இவை அனைத்துமாய் இருந்து நமக்கு ஊட்டமளிப்பதால்), அவர் 'ஸத்ய' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸத்ஸு ஸாதுத்வா ஸத்ய:
மற்றவர்களுக்கு என்றும் நன்மையையே விழையும் ஸாதுக்களுக்கு பகவானும் நன்மையே வடிவானவராய்க் காட்சி அளிப்பதால், அவர் 'ஸத்ய' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
107. ஓம் ஸமாத்மனே நம:
ஸம ஆத்மா யஸ்ய ராக த்வேஶாதிபிர் அதூஶித ஸ: ஸமாத்மா ஸர்வபூதேஶு ஸம ஏக ஆத்மா வா
பகவானின் மனம் விருப்பு, வெறுப்புக்கள் என்ற களங்கங்கள் அற்றது. எனவே,அவர் அனைத்து ஜீவராசிகளையும் (விருப்பு வெறுப்புகளற்று) ஒன்றாகவே பார்க்கிறார். எனவே, பகவான் 'ஸமாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
108. ஓம் ஸம்மிதாய நம: / ஓம் அஸம்மிதாய நம:
ஸர்வைர் அப்யர்தஜாதை: பரிச்சின்ன: ஸம்மித:
பகவான் அனைத்துப் பதார்த்தங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார். எனவே (அப்பதார்த்தங்களைக் கொண்டு) அவரை அளவிடமுடியும், அறியமுடியுமாதலால் அவர் 'ஸம்மித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸர்வைர் அபரிச்சின்னோSமித இதி அஸம்மித:
பகவான் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருந்தாலும், அவர் எவற்றுடனும் தொடர்பின்றி இருக்கிறார். எனவே, அவரை எதைக் கொண்டும் அடக்கிவிடமுடியாது, அளவிடமுடியாது. எனவே, பகவான் 'அஸம்மித:' என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.
109. ஓம் ஸமாய நம:
ஸர்வகாலேஶு ஸர்வவிகார ரஹிதத்வாத் ஸம:
பகவான் எக்காலத்திலும் எவ்வித மாறுபாடுகளுக்கும் உட்படுவதில்லை. எனவே,அவர் 'ஸம:' (எப்பொழுதும் மாறாதவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மயா லக்ஷ்ம்யா ஸஹ வர்தத இதி வா ஸம:
ம என்று அழைக்கப்படும் மஹாலக்ஷ்மியுடன் என்றும் கூடியிருப்பதால் பகவான்'ஸம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
110. ஓம் அமோகாய நம:
பூஜித: ஸ்துத: ஸம்ஸ்ம்ருதோ வா ஸர்வஃபலம் ததாதி வா ந வ்ருதா கரோதீதி அமோக:
பகவானுக்கு செய்யப்படும் வழிபாடு, துதி மற்றும் அவரை மனதாற நினைத்தல் ஆகிய நற்செயல்கள் ஒருபோதும் வீணாவதில்லை (பகவான் அவற்றை வீணாக விடுவதில்லை). அவற்றிற்குண்டான நற்பலன்களை அவர் வாரி வழங்குகிறார்.எனவே, பகவான் 'அமோக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அவிதத ஸங்கல்பாத் வா அமோக:
பகவானின் எண்ணங்களும், விருப்பங்களும் எப்பொழுதும் ஈடேறுகின்றன.எனவே, பகவான் 'அமோக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
111. ஓம் புண்டரீகாஷாய நம:
ஹ்ருதயஸ்தம் புண்டரீகம் அஶ்னுதே வ்யாப்னோதி தத்ரோபலக்ஷித இதி புண்டரீகாக்ஷ:
பகவான் தன்னை த்யானிப்பவரின் இதயத் தாமரையில் நிறைந்து காட்சி அளிப்பதால் அவர் 'புண்டரீகாக்ஷன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
புண்டரீகாகாரே உபே அக்ஷிணீ அஸ்யேதி வா புண்டரீகாக்ஷ:
பகவானின் இரண்டு திருக்கண்களும் தாமரை இதழ்களைப் போன்று அழகாக உள்ளதால், அவர் 'புண்டரீகாக்ஷன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
112. ஓம் வ்ருஶகர்மணே நம:
தர்மலக்ஷணம் கர்மாஸ்யேதி வ்ருஶகர்மா
பகவானின் செயல்கள் அனைத்தும் தர்மமே வடிவானவை. எனவே, அவர்'வ்ருஶகர்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
113. ஓம் வ்ருஶாக்ருதயே நம:
தர்மார்த்தம் ஆக்ருதி: ஶரீரம் யஸ்யேதி ஸ வ்ருஶாக்ருதி:
தர்மத்திற்காகவும், தர்மத்தை நிலைநிறுத்துவதற்காகவுமே பகவான் ஒரு உடலை தரிக்கிறார் (அவதாரம் எடுக்கிறார்). எனவே, அவர் 'வ்ருஶாக்ருதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக